Saturday, March 6, 2010

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

(முஹம்மதே) வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப் படுவதை கூறுவீராக! தொழுகையை நிலை நாட்டுவீராக! தொழுகை வெட்கக் கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான். அல் குரான் : 29:45

இன்னும் சில தினங்களில்:

www.nazeeronline.com ஒரு அறிமுகம்:

அல்லாஹ்வின் கிருபையால் இஸ்லாத்தையும், சமுதாய செய்திகளையும் மக்கள் பிரச்சனைகளையும், என்னால் முடிந்த வரைக்கும் எழுத்து மூலமாகவும், வாய்மொழியாகவும் சொல்லவேண்டும் என்று ஆசைப்பட்டேன். அந்த ஆசையை அல்லாஹ் பிளாக் இஸ்பாட் டாட் காம் (blockspot.com) மூலமாக நிறைவேற்றினான்.

இருப்பினும், அந்த பிளாக்கரில் அதிகம் எழுத்துக்களையும், கருத்துக்களையும், புகைப் படங்களையும், ஆன்மீக சொற்ப்பொழிவான விடியோக்களையும் சிறந்த முறையில் வடிவமைக்க முடியாத காரணத்தால்! நல்ல தெளிவான முறையில் மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமான ஒரு தனி இணையதளம் அமைக்கவேண்டும் என்று நான் விரும்பியபொழுது! எனது சிந்தனைக்கு முதலில் வந்தவர் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்தைச் சார்ந்த சகோதரர். S.M.அப்பாஸ் அவர்கள் தான். அதன் காரணமாக அவர் மூலம் ஒரு நசீர் ஆன் லைன் http://www.nazeeronline.com/ இணையதளத்தை தொடங்கலாம் என்று முடிவு எடுத்ததின் பேரில்! நான் இந்த இணையதளத்தை ஆரம்பிக்க இருக்கிறேன்.

அந்த இணையதளத்தில் மார்க்க சம்பந்தப் பட்ட குரான் ஹதீஸ் மற்றும் நபிகள் (ஸல்) அவர்களின் பொன் மொழிகள், சத்திய சஹா பாக்களின் தியாகம் மற்றும் வரலாறுகள் அதிகம் இடம்பெறும்.

அதேசமயம் இப்படிப் பட்ட மார்க்க விளக்க விசயங்கள் அனைத்தும் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தில் இருக்கும் பல மார்க்க அறிஞர், மற்றும் பல தலை சிறந்த ஆய்வாளர்களின் நூலிலிருந்து வெளியிடுபவைகள் தான் அதிகம் இடம் பெரும். மேலும் பல தவ்ஹீது அடிப்படையில் சொல்ல இருக்கும் கருத்துக்களும் இதில் அடங்கும்.

அத்தோடு! மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், உலக செய்திகள், அனைத்து சமுதாய மக்களும் தெரிந்து கொள்ள வேண்டிய இந்திய சட்ட சிவில் மற்றும் கிரிமினல் குற்றப் பிரிவு சட்டங்கள், நுகர்வோர் தெரிந்து கொள்ளவேண்டியவை, மனித உரிமை சட்டங்கள், மருத்துவ பகுதி, பல நாகரிக நகரங்களின் பரிமாண வளர்ச்சி, பண்பட்ட மனிதர்களை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியவை, மனதில் பதியவைக்க வேண்டிய விசயங்கள், சமுதாய செய்திகள், இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாய நன்மைகள், பெண்களின் உரிமை, கல்விகளின் சிறப்பு, வேலை வாய்ப்பின் அவசியம், வெளிநாட்டு வேலைகள் அவசியமா? விஞ்ஞான பாதை, மார்க்கப் பிரச்சார தொகுப்புகள், தவ்ஹீது அடிப்படையில் மார்க்க அறிஞர்களின் போதனைகள் இப்படி இன்னும் மனிதனுடன் மனிதனைச் சுற்றியுள்ளவையும், அது சம்பந்தப் பட்ட விசயங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.

அதோடு மட்டுமல்லாது ஒழுக்கக் கேட்டிற்கு உத்திரவாதம் கொடுக்கும் திரையுலகம், பல சமய கொள்கைகள், பல மூட நம்பிக்கைகள், இவை தவிர நம்மிடம் பல நல்ல சிந்தனையாளர்கள் இருக்கிறார்கள். அவர்களின் கருத்துக்களும், கட்டுரைகளும், சீரிய எழுத்துக்களும், சிந்தனை வடிவம் பெற்ற செயல்பாடுகளையும் யாரு வேண்டுமானாலும் அனுப்பலாம்.

அதே சமயம் பிறரை சாடுவதோ, தனி நபரை புகழ் வதற்க்காகவோ அனுப்பப்படும் அல்லது தெரியப் படுத்தப்படும் கருத்துகள் கூடிய எந்த எழுத்தாளர்களையும் ஆதாரமில்லாமல் அனுமதிக்க மாட்டேன். அதை இணையதளத்தில் பதிவு செய்யவும் மாட்டேன்.

இந்த இணையதளமானது எந்த ஒரு சொந்த லாபத்திற்காகவும், சுய விளம்பரத்திர்க்காகவும் செயல் படவில்லை. முழுக்க,முழுக்க அல்லாஹ்விடம் மறுமையின் கூலியை எதிர்பார்த்து இதை ஆரம்பிக்கிறேன்.

இந்த இணையதளத்தில் மனிதன் என்ற முறையில் என்னை அறியாமல் ஏதேனும் தவறுதலாக எழுதியிருந்தாலோ அல்லது என்னறிவுக்கு எட்டிய விஷயம் சில சமயம் தவறாக இருந்தாலோ அதை உரிமையோடு சுட்டிக் காட்டும் கடமை இதை பார்ப்பவர்களுக்கு உண்டு என்பதையும் கூறிக் கொள்கிறேன். இதில் நான் எந்த விசயமும் ஆதாரம் இல்லாமல் எழுத மாட்டேன். அப்படி என்னையறியாமல் யாரையேனும் ஆதாரம் இல்லாமல் எழுதி இருந்தேனே யானால்! அதற்க்கு நான் மன்னிப்புக் கேட்கவும் தயங்கமாட்டேன் என்பதையும் இங்கே நான் கூறிக் கொள்கிறேன்.

அதோடு சிறிய அளவில் என்னுடைய ரியல் எஸ்டேட் மற்றும் வர்த்தக சம்பந்தமானதும் இடம்பெறும்.


மேலும் என்னுடைய மின் அஞ்சல்கள் :

ndnazeer31@gmail.com

sl_nazeer@yahoo.com

cell number : 98424 92960


S.L.நசீருதீன்

Thursday, March 4, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நாயும் மணியும் இருக்கும் ஜமாஅத்தில் மலக்குகள் உடன் இருப்பதில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்கள்: முஸ்லிம் 3949

திர்மிதீ 1625, நஸயீ 5127
அபூதாவூத் 2192, அஹ்மத் 7250


மணி ஷைத்தானின் இசைக் கருவியாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்கள்: முஸ்லிம் 3950
அபூதாவூத் 2193, அஹ்மத் 8428