Sunday, November 29, 2009











அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்) .
கீழக்கரை கிளை தமிழ்நாடு தவ்கீத் ஜமாஅத் நடத்திய ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை நேற்று நடந்து முடிந்து ஆடு கள் , மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று ஞாயற்று கிழமை ஒட்டகம் குர்பானி கொடுக்கப்பட்டது. இதில் உள்ள குர்பானிக் கறிகள் பங்குதாரர்கள் மற்றும் ஏழை எளியவர்கள் அனைவருக்கும் பகிர்ந்து உண்ண கொடுக்கப்பட்டு விட்டது. அல்ஹம்து லில்லாஹ்.
இன்ஷா அல்லா இதேபோல் அடுத்த வருடமும் எல்லோரும் பயன்படும் விதத்தில் அனைத்து மக்களும் குர்பான் கொடுக்கும்படி அல்லா அருளும் பரக்கத்தும் செய்வான் என்று பிரார்த்திப்போமாக, வல்ல அல்லா அனைவருக்கும் நீண்ட ஆயுளையும், வசதியையும் தருவானாக. நமது வாழ்வும், வணக்கமும், மரணமும் அல்லாஹ்வைச் சார்ந்து இருக்க்கவும்மாக.
மேலும் இந்த பொது மக்களின் கூட்டு குர்பானி திட்டத்தை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழியில் கீழக்கரை தமிழ்நாடு தவ்கீத் ஜமாஅத் தலைவர் ஹாஜா முகைதீன் , மன்சூர் காக்கா, பாசல் கக்கா , அஸ்கர் மற்றும் கீழக்கரை தெற்குத் தெரு தவ்கீத் ஜமாஅத் கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரின் இந்த குர்பானி ஒத்துழைப்பு மிக உற்ச்சாகமாக இருந்தது. அனைவரும் இதில் கலந்து கொண்டு மிகச் சிறப்பாக களப்பணி ஆற்றினார்கள். அல்ஹம்துலில்லா.
அல்லாஹ் கூறுகிறான். ஒட்டகங்களை உங்களுக்காக அல்லாஹ்வின் (மார்க்கச்) சின்னங்களில் ஒன்றாக ஆக்கியுள்ளோம். அவற்றில் உங்களுக்கு நன்மையுள்ளது . நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அதன் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள்! அது விலாப்புறமாக விழுந்ததும் அதை உண்ணுங்கள்! யாசிப்பவருக்கும், யாசிக்கதவருக்கும் உண்ணக் கொடுங்கள்! நீங்கள் நன்றி செலுத்திட அவ்வாறே உங்களுக்கு பயன்படச் செய்தான். அல் குரான் : 22; 17 : 36 வசனம்.
மேலும் கூறுகிறான்!ஒட்டகம் எவ்வாறு படைக்கப் பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்கவேண்டாமா? அல் குரான் : 89; 30 : ௧௭

அன்பார்ந்த இஸ்லாமிய சகோதரம் சகோதரிகளே! மேலே பார்த்து இருப்பீர்கள், இதுதான் ஒட்டகத்தின் முழு தோற்றம். பின்பு அறுக்கப்பட்டு அதை உறித்தபின்; பார்த்தால்! அல்லா படைத்த எத்தனையோ படைப்புகள் வியக்கத்தக்கவை யாக இருக்கின்றனவா? அதில் இதுவும் ஒன்று. இந்த ஒட்டகத்தை குறுப்பிட்டு பலசான்றுகள் இருப்பதாக அல்லா தன் திருமறையில் சொல்கிறான். அதலும் நம்மை சிந்திக்கச் சொல்கிறான். இதில் நீங்கள் பார்க்கும் ஒட்டகத்தின் குடல்போல் இருமடங்கு பெரிய குடல்களைத்தான் மக்கத்து காபிர்கள்! ரசூலுல்லா அவர்கள் சஜிதாவில் இருக்கும்போது மேலே போட்டார்கள். நாம் காணும் இந்த குடலே மிக கனமானதாக இருக்கின்றது! இதேபோல் இருமடங்கு என்றால்! நினைத்துப் பார்க்க முடியவில்லை, பாவிகள் அவ்வளவு பெரிய குடலை கழிவோடு தூக்கி வைத்தார்கள் என்று நினைக்கும்போதும், நேரில் அந்த குடலை காணும் போதும் கண்ணீர் வருகின்றது.
இப்படியெல்லாம் இன்னல்பட்டு கொடுமை படுத்தப்பட்டு, தன் வாழ்வை தியாகம் செய்து இந்த தீனுல் இஸ்லாத்தை நமக்கு எடுத்துச் சொன்னார்களே! இதையெல்லாம் நாம் நினைக்கின்றோமா? இந்த தற்க்காலிக உலக வாழ்வை! நிலையான வாழ்வு போல் இன்று நாம் நினைத்துக் கொண்டிருக் கின்றோம். நிலையான வாழ்வு என்பது! மறுமைநாள் அன்றி! இந்த உலக வாழ்வு அல்ல. இதையெல்லாம் நாம் நினைத்து நம் வாழ்வை சீரமைத்துக் கொள்ளவேண்டும். அப்படி சீரமைக்கின்ற நன் மக்களாக நம் அனைவையும் அல்லாஹ் ஆக்கிவைப்பானக.
உங்கள்
S.L.நசீருதீன்

Saturday, November 28, 2009

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அளவில்லா அருளும் நிகரில்லா அன்புடைய எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும். மானிடத்தின் , மகுடம், அகிலத்தின் அருட்கொடை, அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அன்பும் என்றென்றும் உண்டாகட்டும் !

வாய்மையே வெல்லும் என்ற வார்த்தையின் தத்துவத்தை, மற்றும் அதன் அர்த்தத்தை எங்கள் மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துவைத்த என் இந்திய தாய் நாடே! ஜனநாயகத்தை நீ நிலை நாட்டி விட்டாய், பொய்யர்களின் முகத்திரையை கிழித்து விட்டாய்.

ஆம்! இந்திய மண்ணில் ஒரு இருளை ஏற்ப்படுத்திய வருடம். அது தான் 1992 DECEMBER 6 அன்று அஸ்தமனமான இஸ்லாமிய சமுதாயத்தின் வணக்க வழிபாட்டுத்தலமான "பாபர் மசூதி" என்ற சூரியன் மீண்டும் உதிக்க இறைவன் நாடிவிட்டான்! (அல்ஹம்து லில்லாஹ்) எல்லாப்புகழும் இறைவனுக்கே.

ஆம்! "லிபரான்" அறிக்கையின் உண்மையின் நீதி நிலைநாட்டப் பட்டுவிட்டது, நீதியின் எலும்பு நிமிர்ந்து விட்டது, நிம்மதியின் மூச்சு நீண்டு விட்டது. நாட்டை பிளவு படுத்திய " சங் பரிவார்ரின் மதவெறி எனும் சாகச நாடகம் நடத்தி அதில் இஸ்லாமியர்களின் மேல் பூசப்பட்ட "தீவிர வாதி " என்ற போலி போர்வையின் சாயம் வெளுத்து விட்டது, ஆர்.எஸ்.எஸ் என்ற புற்று நோய்க்கு மருந்து கிடைத்து விட்டது.

ஒட்டுமொத்த போலி அரசியல் வாதிகளின் நாடகம் நிறைவடைந்து விட்டன, பொய் வேஷங்கள் களைந்து விட்டன, விஷமான விஷமிகள் நிலைகுலைந்து விட்டார்கள், மாற்று மத எங்கள் தொப்புள் கொடி உறவுகளின் தொடர்ச்சிகள் தொடங்கி விட்டன, மீண்டும் இந்திய ஜன நாயகம் காப்பற்றப்பட்டன, சட்டம் தன் கடமையை செய்ய தொடங்கிவிட்டன, நியாய வாதிகளின் தீர்ப்பு இஸ்லாமியர்களுக்கு நிம்மதியை தந்துவிட்டன, சத்தியத்தின் முன்னாள் அசத்தியம் தோற்றுவிட்டன. இத்தனை காலம் இஸ்லாமிய மக்களை மடையனாக்கிய மாபெரும் துவேச நெருப்பு அனைய தொடங்கி விட்டன. அதிகார கும்பலின் ஆணவம்! அடங்கும் காலம் வந்து விட்டன, ஆதிக்க வர்க்கங்கள் செய்த அராஜகத்தின் அழிவு நெருங்கிவிட்டன.

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! நாம் மட்டும் இன்றி நமது மாற்று மத சகோதர சகோதரிகளும் பாபர் மசூதியை மற்றும் அதன் வரலாறுகளை பற்றி நிச்சயம் தெரிந்து இருக்க வேண்டும். அதன் அடிப்படையில் இன்ஷா அல்லாஹ் இன்னும் சில நாட்களில் பாபரின் வரலாற்றையும், அது ஏன் இடிக்கப்பட்டது என்பதையும் விலாவாரியாக எழுத்து வடிவத்தில் தருகிறேன், பொறுத்து இருங்கள்.

உங்கள்
S.L.நசீருதீன்










கிழக்கரையில் நபிவழித் திடல் தொழுகை
அஸ்ஸலாமு அழைக்கும்

கீழக்கரை கிளை மற்றும் தெற்குத்தெரு கிளை தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் நடத்திய ஹஜ்ஜுப் பெருநாள் நபி வழி திடல் தொழுகை, கிஸ்கிந்தா என்ற விளையாட்டு மைதானத்தில் அல்லாஹ்வின் கிருபையால் இன்று மிக சிறப்பாக நடந்தது. அதைத் தொடர்ந்து குர்பானிப் பிராணிகள் ஆடு , மற்றும் மாடுகள் கொடுக்கப்பட்டன. இதில் அதிகமான ஏழைகள் பயன் அடையும் விதத்திலும், அவர்களும் தங்கள் குடும்பசகிதமாக அல்லாஹ்வின் கிருபையால் பெருநாள் கொண்டாடவேண்டும் என்று அல்லாஹ்வும், ரசூலும் வலியுரித்தியத்தின் அடிப்படையில், இது அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கப்பட்டது. நபி வழி திடல் தொழுகையை அல்லா மிக சிறப்பாக ஆக்கித்தான். அல்ஹம்து லில்லாஹ்.

ஹஜ்ஜுப் பெருநாள் நபி வழி திடல் தொழுகை ஏற்பாடு செய்த கிளைத் தலைவர் ஹாஜா முஹைதீன், அஸ்கர், மன்சூர் காக்கா, பசல் காக்கா, ஜகுபர் காக்கா, நசீருதீன், மற்றும் தெற்குத்தெரு கிளை நிர்வாகிகள் அனைவரும் ஒன்று கலந்து மிகச் சிறப்பாக களப்பணி ஆற்றினார்கள். அல்லா அவர்கள் அனைவருக்கும் நற்கிருபை புரிவான்.

இந்த திடல் தொழுகையை பற்றி நபி (ஸல்) அவர்கள் நோன்பு பெருநாள், ஹஜ்ஜி பெருநாட்களிலும் சிறப்புத் தொழுகை இரண்டு ரக் அத்கள் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளை இட்டுள்ளார்கள்.
தொழுகை நேரம் நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும், (பள்ளிக்குச் செல்லாமல்) முசல்லா என்ற திடலுக்குச் செல்பவர்க லாக இருந்தன. அவர்கது காரியங்களில் முதல் காரியமாக தொழுகையைத் துவக்குவார்கள்.

அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி) நூல்கள் ; புகாரீ 956 முஸ்லிம் 1612

'இன்றைய தினத்தில் நாம் முதலில் தொழுகையை ஆரம்பிப்போம். அதன் பின் அறுத்துப் பலியிடுவோம். யார் இவ்வாறு செய்கின்றாரோ அவர் நமது வழிமுறையைப் பேணியவராவார்'. என்று அவர்கள் தமது சொர்ப்போளிவில் குறிப்பிட்டதை நான் செவியுற்றேன்.
அறிவிப்பவர் : பரா (ரலி)

நூல்கள் : புகாரீ 951 முஸ்லிம் 3627

நபி அவர்கள் திடலில் பெருநாள் தொழுகைகளை தொழுதார்கள் என்பது ஆதாரப் பூர்வமான ஹதீஸ் களில் காண்கிறோம். இப்படி இருக்க, கண்ட நேரத்தில் மேலும், இன்று தமிழகத்தில் கூடுதலான பள்ளிகளில் நபி வழி தொழுகை களை புறக்கணித்து, நபி அவர்கள் சொல்லாததையெல்லாம் பள்ளிகளில் வைத்து ஓதிக்கொண்டு, தமது தொழுகைகளையும் வீனடிப்பதொடு மட்டுமல்லாது, மக்களின் தொழுகைகளையும் வீணடித்து இந்த ஆலிம்களும் மற்றும் உலமாக்களும் மக்களுக்கு தவறான போதனைகளை உரைத்து பால் படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களின் இந்த அறிவிளித்தனமான போதனைகள் களையப்படவேண்டும், மக்களுக்கு சரியான குரான், ஹதீஸ் கற்பிக்கப் படவேண்டும், முறையான தௌகீது சிந்தனை அனைவருக்கும் வரவேண்டும். அல்லாஹ் அந்த மக்களையும் நேர்வழி படுத்துவானாக.

அஸ்ஸலாமு அழைக்கும்

(முஹம்மதே) உமக்கு அருளப்பட்ட இவ்வேதத் தையும், உமக்கு முன் அருளப்பதையும் அவர்கள் நம்புவார்கள். அல்குரான் 2:4

அவர்களே தமது இறைவனிடமிருந்து (பெற்ற) நேர் வழியில் IRUPPAVARKAL. அவர்களே. வெற்றி யாளர்கள் அல்குரான் 2:5

Friday, November 27, 2009

மீன் களின் வருகை






இந்திய எல்லைக்குள் விரிந்து கிடக்கும் கடலில் வங்காள விரிகுடாவும் ஒன்று. இதன் தொடர்ச்சி கொண்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் வாளிநோக்கமும் ஒரு குடா கடல். அல்லாஹ் மனிதனாகிய நமக்கு இயற்கையாகவே வழங்கி இருக்கும் பல பயன்படும் எத்தனையோ விசயங்களில் கடலும் ஒன்று. இதில் உள்ளவைகளை நாம் புசிக்க எத்தனையோ வகையிலான கடல் வாழ் வர்க்கங்களை நமக்கு அள்ளி இருத்து இருக்கிறான். அந்த வர்க்கத்தில் ஒன்றான ஒரு வகை அரு சுவை மீன் அது தான் சீலா.

இதை தமிழ் நாட்டில் பல பகுதியில் பல வித பெயர்களோடு அழைப்பார்கள். இங்கே சீலா என்றும், சென்னை மற்றும் அதன் சுற்று புறத்திலும் வஞ்சிரம் மீன் என்றும், சில இடத்தில் நெய் மீன் என்றும், ஆங்கிலத்தில் கிங் பிஷ் என்றும், அரபியில் காப்பாத் என்றும், மலையாளத்தில் அறுக்குளா என்றும் அழைப்பதுண்டு


இதில் பல வகை யான சுவை இருப்பதோடு வைட்டமின் சி யும் அடங்கியிருக்கிறது. அல்லாஹ் எதையும் வீணாக படைக்கவில்லை. அதிலும் இந்த மீன்வகைகள் இனப்பெருக்கத்திக்காக இந்த வலிநோக்க கடலுக்குத்தான் வரும் அதுவும் வடகிழக்கு பருவமழை தொடக்கத்தில்இருந்து டிசெம்பர் வரை இதன் உற்பத்தி தொடர்ந்து இருக்கும்.
இதன் விலைகளும் நடுத்தர வர்க்கம் வாங்கி உண்ணும் வகையில் இல்லை . வசதி படைத்தவர் களுக்கே இந்த மீன் வகை எட்டி பிடிக்கமுடியும். விலை வாசியை காரணமாக்கி இராமநாதபுற மாவட்ட நுகர்வோரும் விலை நிர்ணயம் செய்ய முடியாமல் திணறுகிறார்கள். அந்தந்த பஞ்சாயத்துகள் , நகராட்சிகள் தலையிட்டு விலை ஏற்றத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்பது நுகர்வோரின் வேண்டுகோள்.
சமுதாய செய்திகள் இன்னும் வரும். தொடர்ந்து பாருங்கள்.
அஸ்ஸலாமு அழைக்கும்.
அல்லாஹுத்தாலா மனித குலத்திற்கு ஒரு மார்க்கமான ஏகத்துவத்தையும், அதன் கொள்கை கோட்பாடுகளையும் ஆதம் நபி தொட்டு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வரைக்கும் மனிதனுக்கு தெளிவு படுத்திவிட்டான். அதன் அடிப்படையில் நாம் பிறந்தது, வாழ்ந்து இருந்தாலும் பலபேர் அதன் கொள்கை கோட்பாடுகளை மறந்தோ அல்லது தெரியாமலோ கடைப்பிடித்து விட்ட நிலையில்! இன்று நாம் ஏகத்துவமான மார்கத்தை அல்லாவும், நபி அவர்களின் வழியிலும் பின் பற்றி நமது வணக்க வழிபாடுகளை அமைத்து கொண்டு கடைபிடித்து வரும் வேளையில்! பல காலம் ஏகத்துவ தொண்டை செவ்வனே செய்துவந்த நேரத்தில்! செய்த்தானின்தூண்டுதலின் பேரில், இன்று ஒன்றாக இருந்த ஏகத்துவ வாதிகள்! பல தவறுகளுக்கு ஆட்பட்டு பல பிரச்சனை களுக்கு உட்பட்டு அதனால் பல விசாரணைக்கு தள்ளப்பட்டு இன்று தனது முகவரியை தானே தொலைத்துவிட்டு, பிறரை வைத்து தேடவைத்துக் கொண்டிருகிறார்கள். அதுவும் தௌகீது என்ற போர்வையில். இது நியாயமா?

ஏன் இதை சொல்லுகிறோம் என்றால்! TNTJ என்று ஒன்று மற்றொன்று INTJ இவை இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால்! T மேல் இருக்கும் ஒரு கோடு இதை மக்கள் பார்த்தல் ! TNTJ என்றுதான் தெரியும். அதனால் தான் சொல்லுகிறேன் இந்த விலாசத்தில் இவர்கள் குடியேறி இருக்கிறார்கள் என்று. அதோடு மட்டும் அல்ல , அல்லாவை வணங்கும் விதத்திலும் போட்டி . இன்று இவர்கள் திடல் தொழுகை என்றால் அவர்களும் திடல் தொழுகை, இவர்கள் மைக் செட் வைத்து தொழுகைக்கு அழைத்தால், அவர்களும் அதே இடத்தில் மைக் செட் வைத்து அழைப்பு. ஏன் இந்த ஒரு இழிவான செயல்? அல்லாவை வணங்க அனைவரும் ஒன்று பட்டு ஒத்துழைப்பு கொடுப்போமே! நபி வழியில் அனைவரும் போட்டி பொறாமை இன்றி கலப்பில்லாமல் தொழுவோமே ! இன்சா அல்லா இனியும் தொடரும்.
உங்கள்
S.L.நசீருதீன்
அஸ்ஸலாமு அழைக்கும். அன்புள்ள சகோதரர்களே. இன்ஷா அல்லா இன்றிலிருந்து என்னுடைய வெப் சைட் தொடங்கும் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள்
S.L.நசீருதீன்

இணை கற்ப்பித்தல்

அல்லாஹ்வுக்கு மிகவும் கோபம் உண்டாக்கும் விசயத்தில் முதலிடம் பெறுவது ஷிர்க் என்ற இணை வைத்தல், அவனுக்கு இணையாக யாரிடமும் பிரார்த்திக்க கூடாது, அது நிரந்தர நரகத்தில் கொண்டு சேர்த்து விடும். இணை வைத்துக்கொண்டு எந்த நன்மையையும் சேமிக்க முடியாது. நன்மைகளை சேமிக்க வேண்டும் என்றால் முதலில் இணை வைப்பதை விட்டு அல்லா விடம் பாவமன்னிப்பு கேட்டு திருந்தி அல்லாஹ்வை மட்டுமே வணங்கவேண்டும், அதோடு அவனிடமே பிரார்த்திக்க வேண்டும்.

அப்படி பிரார்த்தித்த நன் மக்களாக வல்ல அல்லா நம் அனைவரையும் அக்கி அருள்பாலிப்பானாக என்று கூறி, இந்த அன்றாட தொடர் செய்திகளை உங்களுக்கு தருவதில் மகிழ்ச்சி அடைவது மட்டுமல்லாது அல்லாஹ் எனக்கு மறுமையில் நல்ல சொர்க்கத்தை தருவான் என்ற நல்ல நோக்குடன் இதை தருகிறேன். அல்லாஹ் அதற்க்கு துணை நிற்க நானும் பிரார்த்தித்து நீங்களும் எனக்காக பிரார்த்திக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

அல்லா கூறுகிறான் " நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்தது விடும்: நீர் நஷ்டம் மடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக! " என்று (முகம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூது செய்தி அறிவிக்கப்பட்டது. அல்குர் ஆன் 39:65

"அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல) வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்" அல்குர் ஆன் 6:88
"நபியே கூறுவிராக" எனது தொழுகை, எனது வணக்கமுறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே வுரியன. அவனுக்கு நிகரானவன் இல்லை. இவ்வாறே கட்டளை இடப் பட்டுள்ளேன். முஸ்லிம்களின் நான் முதலானவன் என்றும் கூறுவீராக". அல்குர் ஆன் 6:162, 163

அதோடு இந்த நல்ல விசயங்களில் பங்கெடுக்க அனைவரும் முயற்சித்து இந்த ஏகத்து வத்தை அனைவருக்கும் பாரபட்ச மின்றி எடுத்து சொல்லுவது நம் அனைவருக்கும் கடமை என்பதை கருத்தில் கொண்டு, இன்று அல்லாஹ் நமக்கு தந்து இருக்கும் இந்த ஹஜ் பெருநாளில்! நாமும் நம் சுற்றுப்புறம் சந்தோசமா கொண்டாடும் தருணத்தில் என்னுடைய இனிய ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்களை உங்களைளோடு சேர்ந்து நானும் பகிர்ந்து கொள்கிறேன்.

Thursday, November 26, 2009

welcome

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)


அளவில்லா அருளும் நிகரில்லா அன்புடைய எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும். மானிடத்தின் , மகுடம், அகிலத்தின் அருட்கொடை, அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அன்பும் என்றென்றும் உண்டாகட்டும் !


இந்த வெப்சைட்டில் மார்க்க விசயங்கலான குரான், ஹதிஸ் மற்றும் இன்னும் மார்க்க விளக்கங்கள் அனைத்தும் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களின் நூல் களிருந்து எடுத்து எழுதியவைகளே. அதோடு பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பல மேடையில் பேசிய பிரச்சார குறுந் தகடுகளிளிருந்தும் (AUDIO AND VIDIO C.D,) பார்த்து அவர் ஆற்றிய உரைகளை நான் கிரகித்து அந்த வார்த்தையை அடிப்படையாக கொண்டு தொகுத்து எழுதி இருக்கிறேன்.


மேலும் இன்னும் பிற தமிழ் நாடு தவ்கீத் ஜமாத்தில் உள்ளவர்கள் எழுதிய நூல் களையும் தொகுத்து அதில் சிறிய உரை நடை மாற்றங்களோடு மாற்றி எழுதி இருக்கிறேன். அப்படி நான் தொகுத்து எழுதியதிலோ! அல்லது மாற்றிய உரை நடையிலோ! அல்லது வேறு ஏதேனும் தவறுகள் வந்தால் அது என்னிலிருந்து வரப்பட்டவையே.


மேலும் நான் படிக்கும் சில மாற்று மதத்தவரின் நூல்களில் தவறுகள் இருந்தால்! அதற்க்கு தகுந்தார்ப்போல் விளக்கம் கொடுக்க எனக்கு பெரிதும் உதவுவது பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் நிகழ்த்திய உரைகளும், நூல்களும் தான் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. எனது சொந்த முயற்ச்சியில் எழுதி இருப்பது வேண்டுமானால் நான் சந்திக்கும் அன்றாட நிகழ்வுகளாகத்தான் இருக்கும். மற்ற படி மார்க்க விசயங்கள் ஆய்வு செய்யும் அளவிற்கு எனக்கு அறிவுத்திறன் இல்லை. ரப்புல் ஆலமீன் அந்த மார்க்க அறிஞர்களின் கருத்துக்களை தொகுக்கும் அளவிற்கு எனக்கு உதவியதற்கு என்னை படைத்த இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.


S.L.நசீருதீன்