Sunday, November 29, 2009
Saturday, November 28, 2009
அளவில்லா அருளும் நிகரில்லா அன்புடைய எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும். மானிடத்தின் , மகுடம், அகிலத்தின் அருட்கொடை, அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அன்பும் என்றென்றும் உண்டாகட்டும் !
வாய்மையே வெல்லும் என்ற வார்த்தையின் தத்துவத்தை, மற்றும் அதன் அர்த்தத்தை எங்கள் மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துவைத்த என் இந்திய தாய் நாடே! ஜனநாயகத்தை நீ நிலை நாட்டி விட்டாய், பொய்யர்களின் முகத்திரையை கிழித்து விட்டாய்.
ஆம்! இந்திய மண்ணில் ஒரு இருளை ஏற்ப்படுத்திய வருடம். அது தான் 1992 DECEMBER 6 அன்று அஸ்தமனமான இஸ்லாமிய சமுதாயத்தின் வணக்க வழிபாட்டுத்தலமான "பாபர் மசூதி" என்ற சூரியன் மீண்டும் உதிக்க இறைவன் நாடிவிட்டான்! (அல்ஹம்து லில்லாஹ்) எல்லாப்புகழும் இறைவனுக்கே.
ஆம்! "லிபரான்" அறிக்கையின் உண்மையின் நீதி நிலைநாட்டப் பட்டுவிட்டது, நீதியின் எலும்பு நிமிர்ந்து விட்டது, நிம்மதியின் மூச்சு நீண்டு விட்டது. நாட்டை பிளவு படுத்திய " சங் பரிவார்ரின் மதவெறி எனும் சாகச நாடகம் நடத்தி அதில் இஸ்லாமியர்களின் மேல் பூசப்பட்ட "தீவிர வாதி " என்ற போலி போர்வையின் சாயம் வெளுத்து விட்டது, ஆர்.எஸ்.எஸ் என்ற புற்று நோய்க்கு மருந்து கிடைத்து விட்டது.
ஒட்டுமொத்த போலி அரசியல் வாதிகளின் நாடகம் நிறைவடைந்து விட்டன, பொய் வேஷங்கள் களைந்து விட்டன, விஷமான விஷமிகள் நிலைகுலைந்து விட்டார்கள், மாற்று மத எங்கள் தொப்புள் கொடி உறவுகளின் தொடர்ச்சிகள் தொடங்கி விட்டன, மீண்டும் இந்திய ஜன நாயகம் காப்பற்றப்பட்டன, சட்டம் தன் கடமையை செய்ய தொடங்கிவிட்டன, நியாய வாதிகளின் தீர்ப்பு இஸ்லாமியர்களுக்கு நிம்மதியை தந்துவிட்டன, சத்தியத்தின் முன்னாள் அசத்தியம் தோற்றுவிட்டன. இத்தனை காலம் இஸ்லாமிய மக்களை மடையனாக்கிய மாபெரும் துவேச நெருப்பு அனைய தொடங்கி விட்டன. அதிகார கும்பலின் ஆணவம்! அடங்கும் காலம் வந்து விட்டன, ஆதிக்க வர்க்கங்கள் செய்த அராஜகத்தின் அழிவு நெருங்கிவிட்டன.
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! நாம் மட்டும் இன்றி நமது மாற்று மத சகோதர சகோதரிகளும் பாபர் மசூதியை மற்றும் அதன் வரலாறுகளை பற்றி நிச்சயம் தெரிந்து இருக்க வேண்டும். அதன் அடிப்படையில் இன்ஷா அல்லாஹ் இன்னும் சில நாட்களில் பாபரின் வரலாற்றையும், அது ஏன் இடிக்கப்பட்டது என்பதையும் விலாவாரியாக எழுத்து வடிவத்தில் தருகிறேன், பொறுத்து இருங்கள்.
உங்கள்
S.L.நசீருதீன்
கீழக்கரை கிளை மற்றும் தெற்குத்தெரு கிளை தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் நடத்திய ஹஜ்ஜுப் பெருநாள் நபி வழி திடல் தொழுகை, கிஸ்கிந்தா என்ற விளையாட்டு மைதானத்தில் அல்லாஹ்வின் கிருபையால் இன்று மிக சிறப்பாக நடந்தது. அதைத் தொடர்ந்து குர்பானிப் பிராணிகள் ஆடு , மற்றும் மாடுகள் கொடுக்கப்பட்டன. இதில் அதிகமான ஏழைகள் பயன் அடையும் விதத்திலும், அவர்களும் தங்கள் குடும்பசகிதமாக அல்லாஹ்வின் கிருபையால் பெருநாள் கொண்டாடவேண்டும் என்று அல்லாஹ்வும், ரசூலும் வலியுரித்தியத்தின் அடிப்படையில், இது அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கப்பட்டது. நபி வழி திடல் தொழுகையை அல்லா மிக சிறப்பாக ஆக்கித்தான். அல்ஹம்து லில்லாஹ்.
ஹஜ்ஜுப் பெருநாள் நபி வழி திடல் தொழுகை ஏற்பாடு செய்த கிளைத் தலைவர் ஹாஜா முஹைதீன், அஸ்கர், மன்சூர் காக்கா, பசல் காக்கா, ஜகுபர் காக்கா, நசீருதீன், மற்றும் தெற்குத்தெரு கிளை நிர்வாகிகள் அனைவரும் ஒன்று கலந்து மிகச் சிறப்பாக களப்பணி ஆற்றினார்கள். அல்லா அவர்கள் அனைவருக்கும் நற்கிருபை புரிவான்.
இந்த திடல் தொழுகையை பற்றி நபி (ஸல்) அவர்கள் நோன்பு பெருநாள், ஹஜ்ஜி பெருநாட்களிலும் சிறப்புத் தொழுகை இரண்டு ரக் அத்கள் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளை இட்டுள்ளார்கள்.
தொழுகை நேரம் நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும், (பள்ளிக்குச் செல்லாமல்) முசல்லா என்ற திடலுக்குச் செல்பவர்க லாக இருந்தன. அவர்கது காரியங்களில் முதல் காரியமாக தொழுகையைத் துவக்குவார்கள்.
அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி) நூல்கள் ; புகாரீ 956 முஸ்லிம் 1612
'இன்றைய தினத்தில் நாம் முதலில் தொழுகையை ஆரம்பிப்போம். அதன் பின் அறுத்துப் பலியிடுவோம். யார் இவ்வாறு செய்கின்றாரோ அவர் நமது வழிமுறையைப் பேணியவராவார்'. என்று அவர்கள் தமது சொர்ப்போளிவில் குறிப்பிட்டதை நான் செவியுற்றேன்.
அறிவிப்பவர் : பரா (ரலி)
நூல்கள் : புகாரீ 951 முஸ்லிம் 3627
நபி அவர்கள் திடலில் பெருநாள் தொழுகைகளை தொழுதார்கள் என்பது ஆதாரப் பூர்வமான ஹதீஸ் களில் காண்கிறோம். இப்படி இருக்க, கண்ட நேரத்தில் மேலும், இன்று தமிழகத்தில் கூடுதலான பள்ளிகளில் நபி வழி தொழுகை களை புறக்கணித்து, நபி அவர்கள் சொல்லாததையெல்லாம் பள்ளிகளில் வைத்து ஓதிக்கொண்டு, தமது தொழுகைகளையும் வீனடிப்பதொடு மட்டுமல்லாது, மக்களின் தொழுகைகளையும் வீணடித்து இந்த ஆலிம்களும் மற்றும் உலமாக்களும் மக்களுக்கு தவறான போதனைகளை உரைத்து பால் படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களின் இந்த அறிவிளித்தனமான போதனைகள் களையப்படவேண்டும், மக்களுக்கு சரியான குரான், ஹதீஸ் கற்பிக்கப் படவேண்டும், முறையான தௌகீது சிந்தனை அனைவருக்கும் வரவேண்டும். அல்லாஹ் அந்த மக்களையும் நேர்வழி படுத்துவானாக.
Friday, November 27, 2009
மீன் களின் வருகை
ஏன் இதை சொல்லுகிறோம் என்றால்! TNTJ என்று ஒன்று மற்றொன்று INTJ இவை இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால்! T மேல் இருக்கும் ஒரு கோடு இதை மக்கள் பார்த்தல் ! TNTJ என்றுதான் தெரியும். அதனால் தான் சொல்லுகிறேன் இந்த விலாசத்தில் இவர்கள் குடியேறி இருக்கிறார்கள் என்று. அதோடு மட்டும் அல்ல , அல்லாவை வணங்கும் விதத்திலும் போட்டி . இன்று இவர்கள் திடல் தொழுகை என்றால் அவர்களும் திடல் தொழுகை, இவர்கள் மைக் செட் வைத்து தொழுகைக்கு அழைத்தால், அவர்களும் அதே இடத்தில் மைக் செட் வைத்து அழைப்பு. ஏன் இந்த ஒரு இழிவான செயல்? அல்லாவை வணங்க அனைவரும் ஒன்று பட்டு ஒத்துழைப்பு கொடுப்போமே! நபி வழியில் அனைவரும் போட்டி பொறாமை இன்றி கலப்பில்லாமல் தொழுவோமே ! இன்சா அல்லா இனியும் தொடரும்.
இணை கற்ப்பித்தல்
அப்படி பிரார்த்தித்த நன் மக்களாக வல்ல அல்லா நம் அனைவரையும் அக்கி அருள்பாலிப்பானாக என்று கூறி, இந்த அன்றாட தொடர் செய்திகளை உங்களுக்கு தருவதில் மகிழ்ச்சி அடைவது மட்டுமல்லாது அல்லாஹ் எனக்கு மறுமையில் நல்ல சொர்க்கத்தை தருவான் என்ற நல்ல நோக்குடன் இதை தருகிறேன். அல்லாஹ் அதற்க்கு துணை நிற்க நானும் பிரார்த்தித்து நீங்களும் எனக்காக பிரார்த்திக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
அல்லா கூறுகிறான் " நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்தது விடும்: நீர் நஷ்டம் மடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக! " என்று (முகம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூது செய்தி அறிவிக்கப்பட்டது. அல்குர் ஆன் 39:65
"அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல) வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்" அல்குர் ஆன் 6:88"நபியே கூறுவிராக" எனது தொழுகை, எனது வணக்கமுறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே வுரியன. அவனுக்கு நிகரானவன் இல்லை. இவ்வாறே கட்டளை இடப் பட்டுள்ளேன். முஸ்லிம்களின் நான் முதலானவன் என்றும் கூறுவீராக". அல்குர் ஆன் 6:162, 163
அதோடு இந்த நல்ல விசயங்களில் பங்கெடுக்க அனைவரும் முயற்சித்து இந்த ஏகத்து வத்தை அனைவருக்கும் பாரபட்ச மின்றி எடுத்து சொல்லுவது நம் அனைவருக்கும் கடமை என்பதை கருத்தில் கொண்டு, இன்று அல்லாஹ் நமக்கு தந்து இருக்கும் இந்த ஹஜ் பெருநாளில்! நாமும் நம் சுற்றுப்புறம் சந்தோசமா கொண்டாடும் தருணத்தில் என்னுடைய இனிய ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்களை உங்களைளோடு சேர்ந்து நானும் பகிர்ந்து கொள்கிறேன்.
Thursday, November 26, 2009
welcome
அளவில்லா அருளும் நிகரில்லா அன்புடைய எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும். மானிடத்தின் , மகுடம், அகிலத்தின் அருட்கொடை, அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அன்பும் என்றென்றும் உண்டாகட்டும் !
இந்த வெப்சைட்டில் மார்க்க விசயங்கலான குரான், ஹதிஸ் மற்றும் இன்னும் மார்க்க விளக்கங்கள் அனைத்தும் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களின் நூல் களிருந்து எடுத்து எழுதியவைகளே. அதோடு பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பல மேடையில் பேசிய பிரச்சார குறுந் தகடுகளிளிருந்தும் (AUDIO AND VIDIO C.D,) பார்த்து அவர் ஆற்றிய உரைகளை நான் கிரகித்து அந்த வார்த்தையை அடிப்படையாக கொண்டு தொகுத்து எழுதி இருக்கிறேன்.
மேலும் இன்னும் பிற தமிழ் நாடு தவ்கீத் ஜமாத்தில் உள்ளவர்கள் எழுதிய நூல் களையும் தொகுத்து அதில் சிறிய உரை நடை மாற்றங்களோடு மாற்றி எழுதி இருக்கிறேன். அப்படி நான் தொகுத்து எழுதியதிலோ! அல்லது மாற்றிய உரை நடையிலோ! அல்லது வேறு ஏதேனும் தவறுகள் வந்தால் அது என்னிலிருந்து வரப்பட்டவையே.
மேலும் நான் படிக்கும் சில மாற்று மதத்தவரின் நூல்களில் தவறுகள் இருந்தால்! அதற்க்கு தகுந்தார்ப்போல் விளக்கம் கொடுக்க எனக்கு பெரிதும் உதவுவது பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் நிகழ்த்திய உரைகளும், நூல்களும் தான் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. எனது சொந்த முயற்ச்சியில் எழுதி இருப்பது வேண்டுமானால் நான் சந்திக்கும் அன்றாட நிகழ்வுகளாகத்தான் இருக்கும். மற்ற படி மார்க்க விசயங்கள் ஆய்வு செய்யும் அளவிற்கு எனக்கு அறிவுத்திறன் இல்லை. ரப்புல் ஆலமீன் அந்த மார்க்க அறிஞர்களின் கருத்துக்களை தொகுக்கும் அளவிற்கு எனக்கு உதவியதற்கு என்னை படைத்த இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
S.L.நசீருதீன்