Sunday, February 28, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

இன்ஷா அல்லாஹ். அல்லாஹ்வின் கிருபையால் விரைவில் ஒரு தனி இணையதளம்.

எதிர் பாருங்கள்.

S.L.நசீருதீன்

Thursday, February 25, 2010

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

இது இறைவேதம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு (இது) வழிகாட்டி.
அல்குரான் 2:2

Wednesday, February 24, 2010





அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஒரு கிறிஸ்த்துவ சகோதரர் இஸ்லாத்தை ஏற்றார் அல்ஹம்து லில்லாஹ் அல்லாஹு அக்பர்.

தூத்துக்குடி மீளவிட்டான் பஞ்சாயத் அமுதா நகரைச் சார்ந்த வரும் தற்போது கீழக்கரை பிளாட்டில் வசிக்கும் சவுரியா என்பவரது மகன் அந்தோணி பிச்சை என்பவர், இஸ்லாத்தையும் அதன் தூய வடிவத்தை கண்டும், பல தவ்ஹீது சகோதரர்களின் பேச்சை கேட்டு புரிந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

அவருக்கு கீழக்கரை நகர் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் தாய் சகோதரர்.மக்தூம் அவர்கள் அந்த சகோதரருக்கு கலிமா சொல்லிக் கொடுத்தார். பின்பு அவருக்கு முஹம்மது அப்சல் என்று பெயர் சூட்டப்பட்டது.

கீழக்கரை நகர் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் தலைவர் சகோ. ஹாஜா முகைதீன், சகோ. பசானி, சகோ மன்சூர். சகோ அஸ்கர், சகோ. சத்தார், சகோ.நசீருதீன் ஆகியோர் உடன் இருந்தனர்.
அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும், அவனுக்கே உரியன. அவன் உயர்ந்தவன் மகத்துவமிக்கவன்.
அல்குரான் 42:4

Tuesday, February 23, 2010

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நம்பிக்கைகொண்டு நல்லறங்கள் செய்வோரை சொர்க்கத்தில் உள்ள மாளிகையில் குடியமர்த்துவோம். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். உழைத்தோரின் கூலி அழகானது.

அவர்கள் பொறுமையை கடைபிடிப்பார்கள். தமது இறைவனையே சார்ந்திருப்பார்கள்.

அல்குரான் 29: 58,59

Monday, February 22, 2010

அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)

எங்கள் இறைவா! எங்கள் ஒளியை எங்களுக்கு முழுமையாக்குவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன். அல்குரான் 6:8

இதைவிடச் சிறந்ததை எங்கள் இறைவன் எங்களுக்குப் பகரமாகத் தரக்கூடும். நாங்கள் எங்கள் இறைவனிடம் நம்பிக்கை வைப்பவர்கள்.
அல்குரான் 68:32

Sunday, February 21, 2010

அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரை சொர்க்கத்தில் உள்ள மாளிகையில் குடியமர்த்துவோம். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். உழைத்தோரின் கூலி அழகானது.

அவர்கள் பொறுமையை கடைபிடிப்பார்கள். தமது இறைவனையே சார்ந்து இருப்பார்கள்.

எத்தனையோ உயிரினங்கள் தமது உணவைச் சுமந்து செல்வதில்லை. அல்லாஹ்வே அவற்றுக்கும் உங்களுக்கும் உணவளிக்கிறான். அவன் செவியுறுபவன், அறிந்தவன்.
அல்குரான் 29: 58,59,60

Saturday, February 20, 2010

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அல்லாஹ்வை அன்றி பாதுகாவலர்களை ஏற்ப்படுத்திக் கொண்டோரின் உதாரணம் சிலந்திப் பூச்சியைப் போன்றது. அது ஒரு வீட்டை அமைத்துக் கொண்டது. வீடுகளிலேயே சிலந்தியின் வீடுதான் மிகவும் பலகீனமானது (அதை) அவர்கள் அறியக் கூடாதா?

அல்லாஹ்வையன்றி அவர்கள் பிரார்த்திப்பவற்றை அல்லாஹ் அறிவான். அவன் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்அல்
குரான் 29:41,42

Thursday, February 18, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)

எங்கள் இறைவா! நாங்கள் மறந்து விட்டாலோ, தவறு செய்து விட்டாலோ எங்களை தண்டித்து விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு முன்சென்றோர் மீது சிரமத்தை சுமத்தியது போல் எங்கள் மீது சுமத்திவிடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு வலிமை இல்லாததை எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் பிழைகளைப் பொறுத்து எங்களை மன்னிப்பாயாக! அருள்புரிவாயாக! நீயே எங்கள் அதிபதி (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு நீ உதவுவாயாக!
அல் குரான் 2:286

Wednesday, February 17, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)

எங்கள் இறைவா! நீ அருளியதை நம்பினோம். இத்தூதரைப் பின்பற்றினோம். எங்களை இதற்க்கு சாட்சியாகப் பதிவு செய்து கொள். அல் குரான் 3:53

எங்கள் இறைவா! எங்கள் பாவங்களையும், எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறியதையும் மன்னிப்பாயாக! எங்கள் பாதங்களை உறுதி படுத்துவாயாக! (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக! அல் குரான் 3:147

Tuesday, February 16, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அனைத்து வகையான துன்பங்களின் போதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கீழ்க்காணும் துவாவை ஓதியுள்ளார்கள்:

"வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் சகிப்புத்தன்மையும், மகத்துவமும் மிக்கவன். வானங்கள், பூமி, மகத்தான அர்ஷு ஆகியவற்றின் அதிபதியான அல்லாஹ்வைத்தவிர வணக்கத்திர்க்குரியவன் யாருமில்லை."

ஆதாரம் : புகாரி 6345, 6346

Sunday, February 14, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

இறைவா! உன்னிடமிருந்து எனக்கு ஒரு குழந்தையைத் தருவாயாக! நீ வேண்டுதலை செவியுறுபவன்.
திருக் குரான் 3:38

Saturday, February 13, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். மறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை விட்டும் மனிதர்களின் அரசனும், மனிதர்களின் கடவுளுமான மனிதர்களின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக! அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான். ஜின்களிலும், மனிதர்களிலும் இத்தகையோர் உள்ளனர்.

114 வது அத்தியாயம்

Friday, February 12, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால், அதிகாலையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்தும், பரவும் இரவின் தீங்கை விட்டும், முடுச்சுகளில் ஊதும் பெண்களின் தீங்கைவிட்டும், பொறாமை கொள்ளும் பொது பொறாமைக் காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக!

113 வது அத்தியாயம்.

Thursday, February 11, 2010



அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏர்வாடி செய்யத் இபுராஹீம் ஒலியுல்லா அவர்கள் மக்பாரா அறைக்குள் வைத்து தர்கா வாசிகளால் சிறை பிடிப்பு.

சிர்க்குக்கும், அனாச்சாரத்திற்க்கும், சந்தனகூடு திருவிழாவிற்கும் , கொடி ஏற்றத்திர்க்கும், சந்தானம் பூசுவதற்கும், பேய் ஓட்டுவதற்கும், பித்தலாட்டங்கள் நடப்பதற்கும் பேர் போன ஒரு ஊர் இந்த கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடி.

இந்த ஏர்வாடியில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட ஹக்தார்கள் என்று அழைக்கப்படும் வாரிசுதாரர்கள் இந்த நிர்வாகத்தை கவனித்தும், சம்பாதித்தும் வருகிறார்கள். இவர்களுக்குள் என்ன பணம் பட்டுவாடா பிரச்சனையோ! அவ்லியாக்கள் என்று பார்க்காமல் அந்த அவ்லியாவை சிறைவைத்து விட்டார்கள். பாவம் அவ்லியா இப்பொழுது ஜாமீனில் வெளிவர முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறார்.

மனிதனுக்கு அறிவு சிலசமயம் தடுமாறலாம்! ஆனால் அறிவே இல்லாமல் ஒரு கூட்டம் தெரிகிறது என்றால்! இந்த மாதிரியான அவ்லியாக்கள் பெயரில் சம்பாதிக்கும் கூட்டம் தான். இஸ்லாத்திற்கே ஒரு சாபக்கேடாக இந்த ஊர் இருக்கின்றது. அல்லாஹ் இவர்களுக்கும் நல்ல புத்தியைக் கொடுக்க வேண்டும் என்று அனைவரும் துவா செய்வோம்.



S.L.நசீருதீன்


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். அல்லாஹ் ஒருவன் எனக் கூறுவீராக! அல்லாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை, (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.
112 வது அத்தியாயம்.

Wednesday, February 10, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

கீழ்க் காணும் துவாவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதிவிட்டு இரவிலேயே மரணித்துவிட்டால் அவனும் சொர்க்க வாசியாவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

"இறைவா! நீயே என் எஜமான். உன்னைத்தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை. உனது உடன்படிக்கையின் படியும், வாக்குறுதியின்படியும் என்னால் இயன்ற வரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடமே பாதுகாப்பு தேடுகிறேன். நீ எனக்கு செய்த அருளோடும், நான் செய்த பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன். எனவே என்னை மன்னிப்பாயாக! உன்னைத்தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது. ஆதாரம் : புகாரி 6309

Tuesday, February 9, 2010



அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

இவருக்கு என்ன நேர்ந்தது?

பயத்தின் பிடியில் பொய்யன் டி.ஜே

பள்ளிவாசல்கள் எல்லாம் பள்ளிக் கூடங்களாக மாற்றப்பட வேண்டும். தொழுகைக்கென்று ஒரு ஹால் இருந்தால் போதும் என்று இணையதளத்தில் போட்ட வார்த்தை எங்கே?

இது அச்சுப்பிழை இல்லையே! எழுத்து மாறுவதற்கு. சொல்லிலும், பொருளிலும் அல்லவா தவறு நடந்தது இருக்கின்றது.

மேடை ஏறிப் பேசிய வார்த்தையை காணவில்லையே! இணையதளம் விழுங்கி விட்டதா?

மக்கள்கள் எல்லாம் மடையர்களா? நீங்கள் மறைப் பதற்கு? இன்னுமா இந்த மறைத்தல். மறையை (திருக் குரானை) மறைக்க முடியுமா?

சிந்திக்க தெரிந்து, விபரம் அறிந்து மேடையேறி பேசுங்கள். "சமுதாய மக்கள் ரிப்போர்ட்டை" (வாரப் பத்திரிக்கையை) மக்களிடம் இருந்து பிடுங்க முடியுமா?.

இரண்டுவரி வார்த்தைக்கே உளறிக் கொட்டிய மேதையே! உங்கள் பின்னால் சமுதாயம் வருமா?

பள்ளிவாசல்கள் எல்லாம் பள்ளிக் கூடங்களாக மாற்றப்பட வேண்டும். தொழுகைக்கென்று ஒரு ஹால் இருந்தால் போதும்.

கொந்தளிப்பை ஏற்ப்படுத்தும் ஒருவார்த்தை, கொதிப்பை விதைக்கும் ஒரு வார்த்தை, கொள்கையை புதைக்கும் ஒரு வார்த்தை, தவ்ஹீதை சிதைக்கும் ஒரு வார்த்தை,

இந்த வாசகங்களால் என்ன சொல்லவருகிறீர்கள்? பள்ளிவாசல்களை பள்ளிக் கூடங்களாக மாற்றிவிட்டு, பள்ளிக் கூடங்கள் வேண்டும் அதே சமயம் ஒரு ஹால் இருந்தால் போதும் என்று சொல்லுகிறீர்கள். அப்படி என்றால்! தொழுகைக்கு கூட்டம் கூடுவது உங்களுக்குத் தேவை இல்லை? பள்ளிக் கூடத்திற்கு கூட்டம் தேவை! அப்படித்தானே! ஒரு வேலை மீடியா வேல்டிலும், வின் டிவியிலும் வரும் பணம் பத்தாமல் பள்ளிக் கூடம் நடத்தப் போகிறாரோ! அதனால் தான் இந்த முஸ்தீபான வார்த்தை. இப்பொழுதே அடித்தளம் போடுகிறார்.

இத்தனை காலம் தவ்ஹீது வாதியாகத்தானே இருந்தீர்கள்! இப்பொழுது என்ன நேர்ந்தது? வெண்கலக் கடைக்குள் யானை புகுந்ததுபோல் ஆகி விட்டீர்கள்?

பொதுமறை (திருக் குரான்) அழைக்கிறது என்று ஒருபுறம் சொல்லுகிறீர்கள், மறுபுறம் உலகக் கல்வி தான் பெரிது! என்பது போலும் மார்க்க கல்வி கொஞ்சம் தெரிந்தால் போதும் என்பது போலும் பேசுகிறீர்கள். இது தானே நீங்கள் உளறிய வார்த்தையின் அர்த்தம்? காசு அதிகம் இருந்தால்! தலைக்கனம் தாண்டவமாடும்.

உங்களுக்கெல்லாம் தவ்ஹீது என்பது வீண் விளையாட்டாகவும், பொருளாதார ஈட்டாகவும் ஆகிவிட்டது. நபிகள் பெருமானார் கட்டிக்காத்த தவ்ஹீதை கேவலப் படுத்தாதீர்கள். இத்துடன் இந்த கூறு கேட்ட வார்த்தையை நிறுத்திக் கொள்ளவும்.

பணம் சம்பாதிப்பதற்கும், பதவி கேட்பதற்கும் பல வழிகள் இருக்கின்றது. அதற்க்கு மார்க்கத்தை தேர்ந்து எடுக்காதீர்கள்.


S.L.நசீருதீன்



Monday, February 8, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)

நபிக்கை கொண்டோர் விசயத்தில் உறவையோ, உடன்படிக்கையோ அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள். அவர்களே வரம்பு மீறியவர்கள்.

அவர்கள் திருந்தி, தொழுகையை நிலை நாட்டி, ஷக்காத்தும் கொடுத்தால் அவர்கள், மார்க்கத்தில் உங்கள் சகோதார்கள். அறிகின்ற சமுதாயத்திற்குச் சான்றுகளைத் தெளிவாக்குகிறோம். அல் குரான் 9: 10,11

Sunday, February 7, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப் படுங்கள்! முரன்படாதீர்கள்! (அவ்வாறு செய்தால்) கோழைகளாவீர்கள்! உங்களின் பலம் அழிந்துவிடும். சகித்துக் கொள்ளுங்கள்! சகித்துக் கொள்வோருடன் அல்லாஹ் இருக்கிறான். அல் குரான் 8:46

Saturday, February 6, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பேரழிவை நோக்கி பயணம்

மாற்றுமத சகோதரர்களுக்கு திருக் குரான் அன்பளிப்பு வழங்கும் நிகழ்ச்சி பொய்யன் டி.ஜே வினரால் கொடுக்கப்படுகிறது. இது சந்தோசப் படவேண்டிய விஷயம் தான், பாராட்டப் படவேண்டிய விசயம்தான்.

அதே சமயம் அன்பளிப்பு கொடுக்கும் முன் தங்களை சுய பரிசோதனை செய்து, மற்றவருக்கு (மாற்றுமத சகோதரர்களுக்கு) குரான் அடிப்படையில் வாழ கற்றுக் கொள்ளச் சொல்வது சாலச் சிறந்தது. முதலில் தன்னை சரியான நபராக தயார் படுத்திக் கொண்டு, பிறருக்கு நல் உபதேசம் செய்யவேண்டும். தலைவர் எவ்வழியோ! அவ்வழியே தொண்டர்களும் சென்று கொண்டிருக்கிறார்கள். மிக்க நன்றி.

சரி வசயத்திக்கு வருவோம்.

பொய்யன் டி.ஜேயின் வாக்கு மூலங்கள் :


ஒற்றுமை என்னும் கைற்றைப் பற்றிப் பிடிக்க! உளறிக்கொட்டிய வார்த்தைகள் ஒத்துவருமா?


தமிழ்நாடு
தவ்ஹீது
ஜமாத்தை விட்டு யார் யாரெல்லாம் போகிறாரோ அவேரெல்லாம் தர்க்குரியாகிப் போவோம் என்று சொன்னவர்! இன்றைய பொய்யன் டி.ஜே யின் மாநில பொதுச் செயலாளர். அல்லாஹ் சொன்ன வழியில் நியாயம் பேசத் தெரியாதவரும், சூது விளையாடு பவரும் பொய்யேன் டி.ஜே யின் இன்றைய மாவட்ட பொருளாரர் (இந்த இடத்தில் தானே பணம் புரளும். அதனால் அவருக்கு தோதான பதவிதான் கொடுக்கப்பட்டு இருக்கிறது), இதற்க்குமுன் அன்றைய தமிழ் நாடு தவ்ஹீது ஜமாத்தில் இருக்கும் போது பொருளாளராக இருந்ததே! ஞாபகம் இல்லை என்று "கஜினி" என்ற சினிமா கதா பாத்திரத்தின் சஞ்சய் ராமசாமி என்ற பெயரில் வந்த கதாநாயகன் போல் உலா வந்தவர், மற்றும் மக்கள் தரும் நன்கொடைக்கு இவர் வாயாலேயே ரசீது கொடுக்க மாட்டேன் என்று பகிரங்க வாக்கு மூலம் கொடுத்தவர், அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்ய மாட்டோம், முபாஹலா என்ற சத்தியத்தின் மீது உடன்பாடில்லை என்று நபிகள் பெருமானார் (ஸல்) சொன்ன சொல்லை துச்சமாக தூக்கி வீசியவர் இந்த பொய்யேன் டி.ஜே வின் இன்றைய மாநில பொருளாரார் (நன்கொடை கொடுத்தால் என்னவாகும் என்று மக்கள் யோசிக்கட்டும்). வாயில் வந்ததெல்லாம் வாழ்த்துக்கள் போல் அருவருக்கத் தக்க வார்த்தைகளை வாயில் சுமந்து கொண்டிருப்பவர், பொய்யேன் டி.ஜே யின் செயல்பாடே தெரியாத இன்றைய மாவட்ட செயலாளர்.

இந்த பொய்யேன் டி.ஜேயின் ஆணிவேர்(!)புகழை எதிர் பார்க்கும் வான் குருவி, சொந்த மண்ணில் தன்னை தூய்மைப் படுத்த தெரியாத துர்பாக்கியசாலி, இந்த மாநில தலைவர். இந்த தலைவர்! இவர்களையெல்லாம் தலையில் தூக்கி வைத்து தலைக்கு ஒரு பதவி கொடுத்து தனி ராஜ்ஜியம் செய்ய துடிக்கிறார். சரி துடித்துக் கொண்டு போகட்டும். ஆனால் மார்க்கத்தில் தன் துடிப்பைக் காட்டக் கூடாது.

பிப்ரவரி 05-11,2010 சமுதாய மக்கள் ரிப்போர்ட் பக்கம் 9 இல் "திருக்குரான் மக்கள் மயமானால் தீனை நிலை நாட்ட முடியும்" என்ற தலைப்பில்! முன்பு ஒரு காலத்தில் இந்த தலைவரால் வெறுக்கப்பட்ட சகாக்களுடன் மேடை ஏறி உளறிக்கொட்டி இருக்கிறார்.

அதன் விபரம் கீழே!

ஜமாஅத்தே இஸ்லாமி (ஹிந்த்) நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் எஸ்.எம். பாக்கர், ""சமூகம் ஒன்று சேராமைக்கும், பாதிப்புக்கு உள்ளாவதற்கும் காரணம் இல்லாமை, கல்லாமை, அறியாமை, பொறாமை இவைகள்தான். இந்த முஸ்லிம் சமுதாயம் கல்வியில் பின்தங்கி இருப்பதை சச்சார் கமிட்டி அறிக்கையின் மூலம் உலகம் அறிந்து வைத்துள்ளது. நாம் அதற்கு முன்பே அறிந்திருந்தாலும், ஜமாஅத்தே இஸ்லாமி போன்றமுன்னோடி அமைப்புகள் கூட சென்னையில் தற்போது தான் கல்வி நிலையம் துவங்க முனைந்துள்ளன. இஸ்லாமிய அடிப்படையில் கல்வி நிலையங்கள் ஏற்படுத்த வேண்டும். பசுமரத்தாணி போல குழந்தைப் பருவத்திலேயே அதாவது ப்ரீ கேஜியில் இருந்தே இந்தக் கல்வி முறையைத் துவங்க வேண்டும்.
பள்ளிவாசல்கள் எல்லாம் பள்ளிக் கூடங்களாக மாற்றப்பட வேண்டும். தொழுகைக்கென்று ஒரு ஹால் இருந்தால் போதும். பாடத் திட்டங்களில் அரபு மொழியைக் கட்டாயம் சேர்க்க வேண்டும். ஆங்கிலத்திற்கு இணையாக முஸ்லிம் நாடுகளிலும் மேற்கத்திய நாடுகளிலும் அரபு வெப் சைடுகள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. அரபியில் கம்ப்யூட்டர் தகவல்கள் நிரம்பி வழிகின்றன. அதனால் அரபிப் பேச்சாற்றலை வளர்க்க வேண்டும்.
ஜக்காத் (என்னும் ஏழை வரி)தைப் பொறுத்தவரை நபிவழியில் வசூல் முறையையும், விநியோக முறையையும் முறைப்படுத்த வேண்டும். இல்லாமை என்பதைப் போக்க தேவை உடையவரைக் கண்டறிந்து அவர்களுக்கு ஜக்காத்தை வழங்க வேண்டும். அறியாமை, பொறாமை நீங்கி - சத்திய மார்க்கத்தை நாம் வாழும் பகுதியில் உள்ள பிறமத சகோதரர்களிடத்தில் கொண்டு போய்ச் சேர்க்கும் மகத்தான பணியை மேற்கொள்வதில் வேகம் காட்ட வேண்டும். திருமறைக் குர்ஆனை மக்கள் மயமாக்க வேண்டும். இந்தப் பணி தொடர்ந்தால், இன்ஷா அல்லாஹ் தீனை நிலை நாட்டலாம்'' என்றார்.
தனது அறிமுக உரையின்போது, ""நான் என் தாய் வீட்டில் பேசுவதைப் போன்று உணருகிறேன்'' என்றார் பாக்கர்.

அதாவது "பள்ளிவாசல்கள் எல்லாம் பள்ளிக் கூடங்களாக வேண்டும்" என்று ஒரு அழகான தத்துவத்தை(?) தன் குறுகிய அறிவாற்றளினால் வெளிப் படுத்தி இருக்கிறார். அதுமட்டும் அல்ல, அதே பக்கத்தில் "முஸ்லிம் அமைப்புகள் ஒன்று பட வேண்டும்" என்ற தலைப்பில் ஜமாத்தே இஸ்லாமி மாநாட்டில் ஒரு தீர்மானம்(!) நிறை வேற்றி இருக்கிறார்கள். அது என்ன தீர்மானமோ நமக்குத் தேவை இல்லை. ஆனால் இந்த மாநாட்டு அமர்வில் ஆசி வாங்கியவர்களும் இருக்கிறார்கள், என்பது தான் இந்த மேடை அமர்வின் ஹய்லைட்.

அல்லாஹு ரப்புல் ஆலமீன் நமது முன்னாள் சகோதரர் சித்திக்கின் துவாவை இவ்வளவு சீக்கிரம் கபுலாக்கி விட்டான், அல்லாஹு அக்பர்.

இங்கே நாமெல்லாம் (தவ்ஹீது சிந்தனையாளர்கள்) ஒன்றாய் சேர்ந்து அற்ப துனியாவில் இருக்கும் உலகக் கல்வியை விட மார்க்கக் கல்விதான் சிறந்தது என்று போதித்துக் கொண்டிருக்கிறோம்! இந்த பொய்யன் டி.ஜே தலைவர் என்னவென்றால்! பள்ளிவாசல்களை எல்லாம் பள்ளிக் கூடமாக்கப் போகிறாராம்! விந்தையாக இல்லையா? இவர் பேசுவது. இந்தக் கூறுகெட்ட பேச்சிலும், மாறு பட்ட கருத்திலும் மயங்கி, நான்கைந்து பேர் இவர் பின்னால் செல்கிறார்களே! வெட்கமாக இல்லையா?. மது அருந்துபவன் கூட தன் மார்க்கத்தை விட்டுக் கொடுக்க மாட்டான். ஆனால் இந்த தரங்கெட்ட தலைவர்களால் இவர்களின் போலி தவ்ஹீது விட்டுக் கொடுக்கப்படுகின்றது.

மேலும், கீழக்கரையில் நடக்காத மாவட்ட மாநாடு பதினாறு கிலோ மீட்டர் தூரத்தில் நடப்பதென்?

மாவட்ட தலைமையகமே! சொந்த ஊரில் இருக்கும் போது, இந்த ஊரில் நடக்கும் மர்மம் என்ன? பக்கத்து ஊரில் வெட்கம் தெரியாதல்லவா? சொந்த ஊரில் ஆரம்பிக்கத் தைரியம் இல்லா பிரச்சாரம்! மண் விட்டு மண் மாறியதேன்? ஏமாற்றப் பட்டவன் சொந்த ஊரில் இருக்கிறான் என்ற பயமா? ஞாபக மறதி பொருளாளரும், தர்க்குரியாகிப் போன பல ஊர் தலைவர்களும் சங்கமிக்கும் இடம் கீழக்கரையாகத்தானே இருக்கவேண்டும்! ஏன் இல்லை? இராமநாதபுரத்தை தேர்ந்து எடுத்ததன் நோக்கம் என்ன?

மர்மத்தின் பிடியில் பொய்யன் டி.ஜே.


S.L.நசீருதீன்

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சினால் உங்களுக்குத் தெளிவை அவன் வழங்குவன். உங்கள் தீமைகளை உங்களை விட்டு நீக்கி உங்களை மன்னிப்பான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன். அல் குர்ஆன் 8:29

Friday, February 5, 2010








அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

காஞ்சிரன்குடியில் கீழக்கரை நகர் கிளை தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் நடத்திய சந்தனக் கூடு எதிர்ப்புப் பிரச்சாரம்.

கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் நகர் கிளை சார்பில் கான்சிரன்குடியில் இன்று (05.02.10) தெருமுனைப் பிரச்சாரம் அல்லாஹ்வின் கிருபையால் நடந்தது. இதில் தாய் சகோ.மக்தூம், சகோ.ஹாஜா மொகைதீன், சகோதரி.ஆய்ஷா லாத்தா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நாளை மறுநாள் (07.02.10) அன்று காஞ்சிரன்குடியில் அனாச்சார மெனும் சந்தனக்கூடு திரு விழா நடை பெறுவதை ஒட்டி, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அல்லாஹ் இதை நமக்கு எடுத்துச் சொல்லும் பாக்கியத்தை அருளினான். அந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.




S.L.நசீருதீன்

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அவர்களிடம் நன்மை இருப்பதை அல்லா அறிந்து இருந்தால் அவர்களை செவியேர்க்கச் செய்து இருப்பான். அவர்களை செவி ஏற்கச்செய்தாலும் அதை அலட்சியம் செய்து புறக்கணித்து இருப்பார்கள்.


நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கும், உங்களுக்கு வாழ்வளிக்கும் காரியதிர்க்கு இத்தூதர் (முஹம்மத்) உங்களை அழைக்கும் பொது அவருக்கும் பதில் அளியுங்கள்! ஒரு மனிதனுக்கும், அவனது உள்ளத்திற்கும் இடையே அல்லா இருக்கிறான் என்பதையும், அவனிடமே ஒன்று திரட்டப் படுவீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

அல் குரான் : 8: 23,24

Thursday, February 4, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

தோன்றிப் புகழோடு தோன்றுக:

தமிழ் நாடு தவ்ஹீது ஜமாத்தை தனிநபர் ஜமாஅத் என்று விமர்சனம் செய்து கொண்டிருப்பவர்கள்! அன்று ஒன்றாய் இணைந்து செயல்படும் போது! இந்த தனிநபர் ஜமாஅத்தின் கொள்கை இருபத்தைந்து ஆண்டுகள் இணைந்து செயல்பட்ட போது தெரியவில்லையா?

இன்று நீங்கள் கொள்கை மறந்து தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்தை விட்டு, தற்குறியாக போய் தனிநபர் ஜமாஅத் என்று திரிந்து, விழாக்களுக்கு ஆள் பிடிப்பது போல், இன்று வீதிக்கு, வீதி சென்று கொண்டிருப்பதேன்? ஆள் பிடிக்க செல்வதேன்? தவ்ஹீது பேசிக் கொன்றிந்தவர்கள், எதிர் வாதம் பேசுவதேன்? குரான் ஹதீஸ் போதும் என்று சொன்னவர்கள் மற்ற கொள்கைகளுக்குள்ளும் அடங்கி ஒடுங்குவதேன்?

வானளாவிய தோரணங்களுடன், வான் உயர வர்ண கொடி வைத்து! தமிழ் நாடு தவ்ஹீது ஜமாத்தின் அடையாள கொடி போல் இவர்களும் வைத்து விட்டால் மட்டும் தவ்ஹீது வாதிகளாகி விடுவார்களா? ஒரு சிறிய வித்தியாசத்தில் வர்ண கொடியமைத்து இந்திய என்ற வார்த்தையை மட்டும் போட்டால்! தவ்ஹீது வாதியா? இவர்கள் அடையாளம் காட்ட தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் வழி காட்டிக் கொண்டிருக்கின்றது. தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்தின் பெயரை அடையாளம் காட்டி தனிநபர் தன்னை தயார் படுத்திக் கொண்டிருக்கின்றார். இது, சிற்சில மக்களுக்கு தெரியாமல் இருக்கின்றது. ஆனால் பெரும் பாலான மக்களுக்கு இவர்களின் வேடம் தெரிந்து விட்டது.

அது மட்டுமல்ல! இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் (INTJ) யின் பினாமியான கீழக்கரை ( (KECT) KEELAKKARAI EDUCATIONAL CHERITABLE TRUST) யில் முன்பு ஒரு காலத்தில் (தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்தில்) இணைந்து செயல் பட்டு இருந்த சமயம்! தவ்ஹீது பயான்கள் மட்டும் ஒலிபரப்பிக் கொண்டிருந்தவர்கள் இன்று பலதரப் பட்ட கலப்படத்துடன் கூடிய ஹதீஸ்களையும் ஒலி பரப்புவதேன்? இப்படி கொள்கைகளை விலைபேசி, கொலை செய்து விட்டுத் தான் ஜமாஅத் நடத்தவேண்டுமா? அன்று நீங்கள் வீர வசனம் பேசி, வசை பாடியவர்களுடன் இன்று சகஜ மாக கை குளுப்பதேன்? இது ஒற்றுமைக்காகவா? அல்லது வேற்றுமையின் தனிமை காரணமாகவா?

நமக்கு தெரிந்து விட்டது. ஓட்டுப் பிச்சை எடுக்கும் காலம் வந்து விட்டது. அதனால் தான்! இன்று சாத்தான்களின் கட்சிகளுக்கு கொடி பிடிக்கிறார்கள். இத்தனை காலம் மனோ இச்சையை பின் பற்றாதவர்கள் போல் நடித்து இருக்கிறார்கள். மானிட சொருபத்தைக் கட்டத் தொடங்கி விட்டார்கள்.

இன்று வெளி வந்து விட்டது இவர்களின் சுய ரூபம். இவர்கள் கைகளாலேயே கண்களை குத்திக் கொண்டு விட்டார்கள். கொத்தடிமை மேடைப் பிரச்சாரம் இனி எடுபடாது. இவர்களின் சல்லடைப் பேச்சுக்களால் மக்களை வென்றடைய முடியாது. இவர்கள் கொட்டிப் புலம்பியது, கெட்டுப்போய் விட்டது. உங்களை விட்டுப் பிடித்த காலம் இன்று தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தை விட்டு விலகி விட்டது.

சொல்லிர்கினிய வார்த்தையினால் புகழப் பட்டவர்! இன்று சொல்லொன்னா வசை பாடி நின்றிடம் தெரியாமல் போனதேன்? காரணம் கற்ப்பிக்க கறை படிந்து விட்டது. யாரேனும் முயர்ச்சித்தும், யாரோ! என்றான கூட்டமே! முதுகெலும்பு இல்லாதவர்களுடன் சேர்ந்து பொது வாழ்வு வாழ ஆசைப் படுகிறீர்களே! முடியுமா?

பொது வாழ்விற்கு அர்த்தம் தெரியா அறிவிலிகளே! பொங்கி யெழும் கூட்டம் இல்லையே என்ற புலம்பல் இன்னும் புயலாக வீசிக் கொண்டிருக்கிறதே! புழுதி பறக்கும் புகழுக்கு மகுடம் சூட்ட ஆசைப் படலாமா?

அல்லாஹ்வையும் ரசூலையும் பின் பற்றும் கூட்டத்திற்கு என்றுமே தோல்வி இல்லை. என்ற சிற்றறிவு இல்லா சிறார்களே! சிற்றின்பம் தான் வாழ்வு என்றாகிப் போனேதேன்?

கொட்டிய தேளுக்கு வழிதெரியாது! கொட்டுப் பட்டவனுக் குத்தான் வலி தெரியும்.


S.L.நசீருதீன்

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் செவி மடுத்துக் கொண்டே அவரைப் புறக்கணிக் காதீர்கள்!

செவியுராமலே "செவியுற்றோம்" என்று கூறியோரைப் போல் ஆகி விடாதீர்கள்!

(உண்மையை) விளங்காத செவிடர்களும், ஊமைகளுமே அல்லஹ்விடம் மிகவும் கெட்ட உயிரினமாவர். அல் குரான் 8 : 20,21,22

Monday, February 1, 2010



அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

"அந்த நேரம் எப்பொழுது வரும் என்று (முஹம்மதே) உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர். "இது பற்றிய ஞானம் என் இறைவனிடமே உள்ளது. அதற்குரிய நேரத்தில் அவனைத்தவிர யாரும் அதை வெளிப்படுத்த முடியாது. வானங்களிலும், பூமியிலும் அது மகத்தானதாக அமையும். அது உங்களிடம் திடீரென்று தான் வரும்" என்று கூறுவீராக! இது பற்றி நீர் நன்கு அறிந்தவர் போல் அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். "இது பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது" என்று கூறுவீராக! எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிந்து கொள்வதில்லை. அல்குரான் 7:187