Sunday, January 31, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)

(முஹம்மதே) இதற்குமுன் எந்த வேதத்தி லிருந்தும் நீர் வாசிப்பவராக இருந்ததில்லை. (இனியும்) உமது வலது கையால் அதை எழுதவும் மாட்டீர்.
அவ்வாறு இருந்திருந்தால் வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள்.

மாறாக, இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப் பட்டோரின் உள்ளங்களில் இருக்கிறது. அநீதி இழைத்தோரைத் தவிர வேறு எவரும் நமது வசனங்களை மறுக்க மாட்டார்கள்.


அல் குரான் 29:48, 49

Saturday, January 30, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)


முஹம்மதே) வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப் படுவதை கூறுவீராக! தொழுகையை நிலை நாட்டுவீராக! தொழுகை வெட்கக் கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான். அல் குரான் : 29:45

Friday, January 29, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

இவ்வுலக வாழ்வில் உங்களுக்கிடையே உள்ள நேசத்தின் காரணமாகவே அல்லாஹ்வையன்றி நீங்கள் சிலைகளை ஏற்ப்படுத்தி இருக்கிறீர்கள். பின்னர் கியாமத் நாளில் உங்களில் ஒருவர் மற்றவரை மறுப்பார், உங்களில் ஒருவர் மற்றவரைச் சபிப்பார், உங்கள் தங்குமிடம் நரகமாகும். உங்களுக்கு உதவி செய்வோர் இல்லை. அல் குரான் : 29: 25

Thursday, January 28, 2010


அஸ்ஸலாமுஅழைக்கும் (வராஹ்)


கீழ்க்காணும் துவாவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஒர்திவிட்டு இரவிலேயே மரணித்து விட்டால் அவனும் சொர்க்கவாசியாவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

இறைவா நீயே என் எஜமான். உன்னைஹ்தவிர வணக்கத்திர்க் குரியவன் யாரும் இல்லை. என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை. உனது உடன் படிக்கை படியும், வாக்குறுதியின் படியும் என்னால் இயன்றவரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாது காப்புத் தேடுகிறேன். நீ எனக்கு செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன். எனவே என்னை மன்னிப்பாயாக! உன்னைத்தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது. ஆதாரம் : புகாரி 6309

Wednesday, January 27, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

இப் பூமியில் தங்களைப் பெருமைப் படுத்திக் கொள்ளவும் குழப்பத்தை உண்டாக்கவும் விரும்பா திருப்பவர்களுக்கே அந்த மறுமை வீட்டை (ஜன்னத்தை) நாம் சொந்த மாக்கி வைப்போம். பய பக்தியுடை யாவர்களுக்கே (நல்ல) முடிவு உண்டு. அல் குரான் 28:83

Monday, January 25, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

வெளியூரில் தங்கும் போது ஓதும் துவா :

"அவூது பி(B)(க்)கலிமாத்தில்லில்லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா கலக் "

இதன் பொருள் :

முழுமையான அல்லாஹ்வின் வார்த்தைகளைக் கொண்டு அவன் படைத்த அனைத்தின் தீங்கை விட்டும் அவனிடமே பாதுகாப்புத் தேடுகிறேன். ஆதாரம் : முஸ்லிம் 4881, 4882

Sunday, January 24, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

புற வழிச் சாலையின் விபரீதம். மக்களே! உஷார்.

இன்று மத்திய, மாநில அரசுகள் நான்கு வழிச் சாலையை இந்தியா முழுதும் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தில் இன்றைய சாலைகள் அனைத்தும் (கிராமம் தவிர்த்து) நான்கு வழிச் சாலையாக மாறிவருகிறது. கிழக்கு கடற்கறைச் சாலை பணிகள் முடிந்து கொண்டிருக்கின்ற நிலையில்! தேசிய நெடுஞ்சாலை பணியும் தொடங்கி முடிந்து கொண்டிருக்கின்றது. சந்தோசப் படவேண்டிய விஷயம் தான்.

அதே சமயம், இந்த சாலைகள் எல்லாம் அயல் நாட்டிற்கு ஒப்பாக வண்ண மயமாகியும், வலு வலுப்பான சாலையாகவும் இருக்கும் நிலையில்! அரசாங்கம் மக்களுக்கு புறவழிச் சாலை விழிப்புணர்வுவைக் காட்ட தவறி வருகிறது. இதனால் அதிகம் விபத்துக்கள் நடந்து கொண்டிருக்கின்றதை கண்கூடாக கண்டு கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு இடத்திலும் சுங்க வரி வசூல் தாராளமாக நடந்து கொண்டிருக்கின்றது. இதில் மட்டும் அரசாங்கம் அக்கறை காட்டினால் மட்டும் போதாது, மனித உயிர் மீதும் அக்கறை காட்டவேண்டும்.

அரசாங்கம் வெறும் 108 அம்புலன்சை 30 கிலோ மீட்டருக்கு மட்டும் வைத்தால் போதாது. விபத்து நடப்பதர்க் குண்டான காரண காரியத்தையும் கவனத்தில் கொண்டு செயல் பட வேண்டும். மேலும் நாம் அரசாங்கத்தை மட்டும் குறை சொல்லக் கூடாது. மக்களும் அதற்க்கு ஒரு காரணமாக அமைந்து விடு கின்றனர்.

இந்த விபத்துக்கள் அதிகம் நடக்க காரணம் என்னவென்று பார்த்தால்! மக்களின் கவனக் குறைவும் காரணமாக திகழ்கிறது. இந்த மாதிரி நான்கு வழிச் சாலைகள் அமைவதற்கே காரணம் வாகனங்கள் அதிக வேகமாக செல்லவேண்டும், அதே சமயம் குறுப்பிட்ட நேரத்தில் தனது சேரும் இடத்தை விரைவாகவும் துரிதமாகவும் சென்றடையும் நோக்கத்தோடு, நேரத்தையும் மிச்சப் படுத்தவே இந்த நான்கு வழிச் சாலைகள் பயன் படுகின்றது.

இது ஒரு புறம் இருக்க! இந்த மாதிரி நான்கு வழிச் சாலையினால் வாகன போக்கு வரத்திற்கும், வாகனத் திற்க்கும் பயன் இருக்கிறது உண்மைதான். ஆனால்! மக்கள் உயிருக்கு உத்திரவாதம் இருக்கிறதா என்றால்! நிச்சயமாக இல்லை என்று தான் கூற முடியும். இதில் வாகனம் அதிவேகமாக செல்வது இருந்தாலும்! வாகன ஓட்டுனர்களும் விதி முறைகளை மீறி செல்வதும் பெரும் காரணமாக அமைந்து விடுகின்றது.

இது ஒரு புறம் இருந்தாலும், இதற்க்கு மக்களும் ஒரு காரணம் தான். அவர்கள் இன்னும் பழமையில் இருப்பது தான். இன்றைய நவீன வாகனங்கள் குறைந்த பட்சம் 120 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது. இந்த வேகத்தை அந்த அறியாமை மக்கள் கணக்கிட முடிவதில்லை. இருப்பினும் சாலையை கடக்க முயலும் பொது எவ்வளவு வேகத்தில் வாகனம் வருகின்றது என்பது தெரியாமல் மிகச் சாதாரணமாக சாலையை கடக்கின்றார்கள். அப்படி கடக்கும் போது மின்னல் வேகத்தில் வாகனம் மோதி விடுகின்றது.

அதோடு மட்டும் இருப்பதில்லை. இந்த நான்கு வழிச் சாலையில் ஆடுகளையும், மாடு களையும் மேய்த்துக் கொண்டு நடு ரோட்டில் பத்தி விடுகிறார்கள். மிருகங்களுக்கு தெரியுமா வாகனத்தின் வேகம்? வந்த வேகத்தில் வாகனம் மோதுவதோடு, வாகனமும் விபத்துக்குள்ளாகி! வாகனமும் அதன் உள் இருந்தவர்களும் இறக்கும் சம்பவம் அதிகமாக நடந்து கொண்டிருக்கின்றது.

மேலும் குறிப்பாக இப்படிப் பட்ட சம்பவம் கிராமப் புறத்தில் தான் அதிகம் நடக்கின்றது. இதற்க்கு அரசாங்கம் இந்த மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். அப்படி விழிப்புணர்வு கொடுக்காமல் இருந்தால்! இன்னும் அதிகம் உயிர்கள் இழக்கும் படி நேரிடும். அரசாங்கம் நான்கு வழிச் சாலை அமைக்க, கிராமத்தில் விவசாயிகளின் நிலங்களை ஆர்ஜிதப் படுத்தி துரிதமாக செயல் பட்டு, இந்த தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்கு பெரிதும் உதவியவர்கள் இந்த விவசாய மக்கள். இவர்கள் உயிர் அரசுகளுக்கு சாதாரண மாக தெரிகிறதா? என்று தெரியவில்லை.

இருப்பினும்! தமிழ் நாட்டில் எத்தனையோ தனியார் இயக்கங்கள் மக்களுக்கு நன்மை செய்யும் விதமாக இருக்கின்றது. அந்த இயக்கங்கள், அமைப்புகள், இந்த மாதிரி விழிப்புணர்வை இந்த பாமர மக்களுக்கு எடுத்துச் சொல்ல கடமைப் பட்டு இருக்கின்றது. அப்படி செய்தார்களே யானால்! நிச்சயம் உயிர் இழப்புகளை தடுக்க முடியும் என்பதே என் கருத்து.

இந்த கோரிக்கையை நான் முதன் முதலில் தமிழ் நாடு தவ்ஹீது ஜமாத்திற்கு முன் வைக்கிறேன். இதை பரிசீலனை செய்து, எப்படி பிரச்சாரம் செய்யலாம் என்பதை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சுற்றறிக்கை (curcular) அனுப்பி, அந்த, அந்த மாவட்ட நிர்வாகிகளிடம் ஆலோசனை கேட்டு, அதன் படி தமிழ் நாடு தவ்ஹீது ஜமாஅத் செயல் பட்டால்! பல மனித உயிர்கள் காக்கப்படும். அதற்க்கு ஒவ்வொரு கிராமப்புற ஊர்களில் இருக்கும் தமிழ் நாடு தவ்ஹீது ஜமாஅத் தலைவர்கள், மற்றும் நிர்வாகிகள் ஒருங்கிணைந்து இதற்க்கு என்ன வழி வகை செய்யலாம் என்று யோசித்து, அதன் படி மக்களுக்கு விழிப்புணர்வை கொண்டு செல்லவேண்டும்.


S.L.நசீருதீன்

அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)

இப் பூமியில் தங்களைப் பெருமைப் படுத்திக் கொள்ளவும் குழப்பத்தை உண்டாக்கவும் விரும்பா திருப்பவர்களுக்கே அந்த மறுமை வீட்டை (ஜன்னத்தை) நாம் சொந்த மாக்கி வைப்போம். பய பக்தியுடை யாவர்களுக்கே (நல்ல) முடிவு உண்டு. அல் குரான் 28:83

Saturday, January 23, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

"நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் பொது கீழ்க் காணும் துவாவைக் கூறுவார்கள்.

அல்லாஹ்வின் பெயரால் (வெளியேறுகிறேன்). என் இறைவ! நான் சருகிவிடாமலும், அநீதி இழைக்காமலும், அநீதி இழைக்கப்படாமலும், மூடனாகாமலும், (பிறரை) மூடராக்காமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதாரம் : நஸயி 5391,5444

Friday, January 22, 2010

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.

அல்லாஹ் ஒருவன் எனக் கூறுவீராக! அல்லாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. 112 வது அத்தியாயம்.

Thursday, January 21, 2010





அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

கல்வியின் அவசியமும் அதன் மேன்பாடுகளும் ஒரு காலத்தில் நம் முன்னோர்களால் கைக்கு எட்டாத தூரத்தில் வைத்து இருந்தார்கள். ஆனால் இன்று அப்படி அல்ல, எல்லா வகையான கல்வி திட்டங்களிலிருந்து, கணினி மற்றும் இன்டெர் நெட் இன்னும் எத்தனையோ வகையில் கல்விகள் கற்க அரசாங்கமும் தனியார் நிறு வனங்களும் போட்டி போட்டு கல்வி தொடுவான முயற்ச்சியில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால்! அதைக் கற்கக் கூடிய மாணவ, மாணவியரோ! பின் தங்கிய வகையில் இருப்பது வருத்தத் திர்க்குரியதாக இருக்கின்றது.

ஆம்! சமீபத்தில் வந்த புள்ளி விபரக் கணக்குகள் அதை நிருபிக்கும் வகையில் அதிர்ச்சிக் குள்ளாக்கிக் கொண்டிருக்கின்றது. அது! படிப்பறிவு இல்லாதவர்கள் "இந்தியாவில் தான்" அதிகம் என்ற தகவல்.

படிப்பறிவு இல்லாதவர்களின் எண்ணிக்கையில் உலகிலேயே இந்தியா தான் தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதாக "யுனஸ்கோ" தகவல் தெரிவிக்கின்றது. அனைவருக்கும் கல்வி குறித்த சர்வதேச கண்காணிப்பின் அறிக்கையை ஐ.நா. அமைப்பான “யுனஸ்கோ” (20.01.2010) நேற்று வெளியிட்டது. அதன்படி, வயது வந்தோரில் படிப்பறிவு இல்லாதவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 75.9 கோடி. அவர்களில் இந்தியாவை சேர்ந்த படிப்பறிவில்லாதவர்கள் அதிகம் என அந்த அறிக்கை கூறுகிறது.

படிக்காத்தவர்களின் மொத்த எண்ணிக்கையில் இந்தியா, சீனா, பாக்கிஸ்தான், வங்க தேசம் ஆகிய நான்கு நாடுகள் மட்டும் பாதிக்கு மேல் பங்கு வகிக்கின்றன.

அதிலும், ஆரம்பக் கல்வி பெறும் வயதில் உள்ள குழந்தைகளில் 7.2 கோடி பேர் பள்ளிக் கூடம் செல்லாமல் உள்ளனர். 7.1 கோடி டீன் ஏஜ் வயதினரும் கல்வி பெறாமல் இருக்கின்றனர். இந்த நிலை நீடித்தால்! 2015 ஆண்டில் 5.6 கோடி பள்ளி மாணவர், மாணவியர் படிப்பை பாதியில் கைவிடுவார்கள் என அந்த அறிக்கை கூறுகின்றது.
இதற்க்கு “யுனஸ்கோ” உயர் அதிகாரி “இரினா போகொவா” கூறும் இன்னொரு காரணமும் என்னவென்றால்! கடந்த சில ஆண்டுகளாக நிலவும் நிதி நெருக்கடி காரணமாக, கல்விக்கான ஒதுக்கீட்டை பல்வேறு நாடுகள் குறைத்து விடும் அபாயம் உள்ளது.

அதேசமயம் இந்தியாவில் ஒரு முன்னேற்றம் கண்டு இருக்கிறார்கள்! அது என்ன வென்றால் மக்கள் மத்தியில் நிலவும் அறியாமையை ஒழிக்கும் நடவடிக்கைகளில் இந்தியா கூடுதல் கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றது என்பது ஒரு உபரியான மகிழ்ச்சி.

அது மட்டும் அல்ல! தமிழ் நாட்டில் முதன் முதலில் "திருவாரூரில்" ரூபாய். கோடி மதிப்பீட்டில் மத்திய பல்கலைக்கழகம் (CENTRAL UNIVERCITY) அமைக்கப் படுகின்றது. இந்தியாவில் 12 மாநிலங்களில் மத்திய பல்கலைக் கழகம் அமைக்கப் படும் என்று மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழ் நாட்டில் மத்திய பல்கலைக்கழகம் தொடங்கப் படவேண்டும் என்று முதல் அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். அவரது முயற்சியின் பலனாக திருவாரூரில் இந்த பல்கலைக் கழகம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.

இதில் தமிழ், எம்.ஏ. ஆங்கிலம் உள்பட நான்கு பாடப்பிரிவுகள் முதலில் தொடங்கப் பட உள்ளன. மேலும் +2 படித்த மாணவர்கள் இளநிலை, முது நிலை ஆய்வு படிப்புகள் வரை தொடர்ச்சியாக பயிலும் வகையில் ஒருங்கிணைந்த கல்வி முறை கொண்டு வரப்படவுள்ளது. இது உண்மையில் பாராட்டப் படவேண்டிய விஷயம். இந்த பயன் பாடு மற்றும் தொடக்கம் மாணவர்களை சென்றடைய வேண்டும்.

ஒரு காலத்தில் இந்தியாவை முஹலாயர்கள் ஆட்சி புரிந்த பின், வெள்ளைக்காரன் அதாவது ஆங்கிலேயரின் ஆதிக்கம் தலை தூக்கிக் கொண்டிருந்த நேரம்! இந்தியாவில் கல்வி அறிவு கற்றறியாத மக்கள் சமுதாயத்தில்! குறுப்பிட்ட மதத்தை சார்ந்த ஒரு பிரிவினர் மட்டும் வேத பாட சாலை என்று அந்த பிரிவினர் படிக்கும் இந்தியாவில் நடை முறையில் இன்று வரை பேசப் படாத ஒரு மொழியை கற்றுக் கொண்டு, அவர்களின் மற்ற ஜாதியினரையும் மற்ற பிரிவினரையும் படிக்க விடாமல்! இவர்கள் மட்டும் ஓதுவார்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்று பட்டத்தை சுமந்து, மற்றவருக்கு கல்வி என்னேவென்றே தெரியாத சமுதாய மாக்கிக் கொண்டிருக்கின்ற நேரத்தில் தான்! வெள்ளைக்காரன் அவன் மொழியை புகுத்தி கல்வியைக் கற்றுக் கொடுத்தான்.

அந்த கல்வியினாலும், ஆங்கிலேயரின் மொழியினாலும் பயன் அடைந்தவர்கள் இந்த மேல் ஜாதி பிரிவினர் மட்டும் தான். இந்திய எல்லையைக் கடந்து வந்து இந்து சமுதாய மக்களும் கற்க வேண்டிய கல்வியை இந்த பிரிவினர் கற்க விடாமல் அணைபோட்டு வைத்தனர்.

ஆனால் இன்று அப்படி அல்ல. கல்வியின் வாசல் பல வகையில் திறந்து விடப் பட்டு விட்டது. அனைவருக்கும் கல்வி பொதுவாகி விட்டது. சமச்சீர் கல்வி சத விகிதத்தை தாண்டிக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு மாநிலமும் கல்விக்கென்றே தனி அக்கறை எடுத்து அதை முறைப் படுத்தி வருகின்றது.

இருப்பினும், இன்றைய இளைய சமுதாயம் கல்வி மேல் கொஞ்சம் அக்கறை காட்டத் தவறி வருகின்றது. அதற்க்கு பல காரணங்கள் சொல்லலாம். இன்று பாடப் புத்தகங்களை தூக்கிக் கொண்டு படிக்க செல்கிறார்கள். ஆனால்! படிப்பின் மீது கவனம் செலுத்துவதில்லை, வகுப்பறைக்கு செல்கிறார்கள் ஆனால்! வசதி பட்டால் படிக்கிறார்கள். புத்தகம் கையில் இருக்கின்றது, ஆனால்! நித்தமும் அலை பேசியினால்! (CEL PHONE) அலைக்கழிந்து கொண்டிருக்கிறார்கள். கையில் செல் போனும், பையில் பணமும் வைத்துக் கொண்டு கண்களில் காதல் பார்வையும், இதயத்தில் இன்ப நினைவையும், இளைய கனவு களையும் சுமந்து கொண்டு, இன்றைய நவீன கண்டு பிடிப்புகளில் முதன்மை வகிக்கும் இன்டெர் நெட் இணையதளங்கள்! (INTERNET BROWSING CENTRE), CELL PHONE (MOBLE PHONE) இளைய தலைகளை வளைய வைத்துக் கொண்டிருக்கின்றது.

முதலில் இதில் இருந்து விடுபட வேண்டும். நல்ல விசயம் கற்கத்தான் இது நமக்கு பயன் படனுமே தவிர, தவறான பாதைக்கு அது நம்மை அழைத்து செல்லக் கூடாது. அப்படி அதற்க்கு நம்மை ஆட்படுத்திக் கொண்டோமே யானால்! நமது எதிர் காலத்தை நாமே சவக் குழியில் தள்ளுகிறோம்.

வருங்காலக் கனவுகளை அசை போடுங்கள். நிகழகால ஆசை களுக்கு அணை போடுங்கள். எதிர் காலம் உங்கள் கையில்.

குறிப்பாக இப்பொழுதான் நமது இஸ்லாமிய மாணவ மாணவியர்கள் கல்வி மேல் அக்கறை காட்ட தொடங்கி இருக்கிறார்கள். இன்னும் இதனுடைய தொடர்ச்சியாக மக்களுக்கு விழிப் புணர்வை ஏற்ப்படுத்த வேண்டும். நமது கல்வி அறியாமையின் இருள் நீக்கி, ஒரு பெறும் ஒளியை இன்று "தமிழ் நாடு தவ்ஹீது ஜமாஅத்" மாணவர் மற்றும் மாணவியரின் கல்வி இதயத்தை திறக்க எடுத்து வைத்து இருக்கும் செயல் அனைவரால் பயன்படவேண்டும்.

மேலும், அது குறித்து கல்வியின் அவசியம் மற்றும் அதை புரிந்து நடந்து கொள்ளும் விதம் மாணவர்கள் மத்தியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இராமநாதபுரம் மாவட்டம் கிழக்கரையில் கடந்த 15-1-2010 அன்று பொதுத் தேர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.

இதில் கலீலுர் ரஹ்மான் அவர்கள் கலந்து கொண்டு பொதுத் தேர்வில் அதிக மதிப் பெண் பெருவது எப்படி என்பது பற்றி மாணவ மாணவியர்களுக்கு விளக்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் கீழக்கரை இன்ஸ்பெக்டர் திரு சங்கு அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார்கள்.


S.L.நசீருதீன்

அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)

அல்லாஹ் ஒருவன் என கூறுவீராக! அல்லாஹ் தேவையற்றவன், அவன் யாரையும் பெறவும் இல்லை, அவன் யாருக்கும் பிறக்கவும் இல்லை. அவனுக்கு நிகராக யாரும் இல்லை. அல் குரான்: 112:1,2,3

Wednesday, January 20, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டை விடு வெளியே செல்லும் பொது கீழ்க்காணும் துவாவை கூறுவார்கள். - அதாரம் : நஸயி 5391, 5444

அல்லாஹ்வின் பெயரால் (வெளியேறுகிறேன்). என் இறைவா! நான் சறுகி விடாமலும், வழிதவறி விடாமலும், அநீதி இழைக்கபடாமலும், மூடனாகாமலும், (பிறரை) மூடராக்காமலும் இருக்க உன்னிடம் பாது காப்புத் தேடுகிறேன்.

பி.ஜே.யின் துவாக்களின் தொகுப்பு நூலிலிருந்து.

Tuesday, January 19, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை. நீ தூயவன்; எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக! எங்கள் இறைவா! நீ நரகத்திற்கு அனுப்புபவனை இழிவு படுத்தி விட்டாய். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை. உங்கள் இறைவனை நம்புங்கள் என்ற நம்பிக்கையை நோக்கி அழைத்தவரின் அழைப்பை செவியுற்றோம். எங்கள் இறைவா! உடனே நம்பிக்கை கொண்டோம். எங்கள் இறைவா! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டு அழிப்பாயாக! நல்லோருடன் எங்களை கைப் பற்று வாயாக! எங்கள் இறைவா! உன் தூதர்கள் வழியாக நீ எங்களுக்கு வாக்களித்ததை எங்களுக்கு வழங்குவாயாக! கியாமத் நாளில் எங்களை இழிவு படுத்தாதே! நீ வாக்கு மீற மாட்டாய். திருக் குரான்: 3: 191, 192, 193, 194

பி.ஜே. எழுதிய துவாக்களின் தொகுப்பு நூலிலிருந்து.


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அபுதாபியில் பணி புரிந்து வரும் பெரம்பலூர் மாவட்டம் ஆண்டிமடத்தினை அடுத்த கிராமத்தைச் சார்ந்த சகோ. பாலமுருகன் தூய இஸ்லாத்தினை தனது வாழ்வில் நெறியாக கடந்த 13/01/2010 அன்று ஏற்றுக்கொண்டார்.

அல்ஹம்துலில்லாஹ். தனது பெயரினை அபுபக்கர் ஸித்திக் என மாற்றிக் கொண்ட சகோதரர் அவர்களுக்கு இஸ்லாத்தின் அடிப்படைகள் குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டல நிர்வாகிகள் விளக்கம் அளித்தனர்.

மேலும் சகோதரர் அவர்களுக்கு சகோதரர் பீஜே அவர்கள் மொழி பெயர்த்த குர்ஆன் மற்றும் மார்க்க விளக்க புத்தகங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது. எல்லா புகழும் அல்லாஹ்விற்க்கே.

TNTJ NET லிருந்து


S.L.நசீருதீன்

Monday, January 18, 2010



அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

தமிழ் மாநில முஸ்லிம் லீக்கை சாக்கடையில் தள்ளிக் கொண்டிருக்கும் முஸ்லிம் லீக் மாநில தலைவர் ஷேக் தாவூத்.

இஸ்லாத்தின் அடிப்படைத் தத்துவம் "லாயிலாஹா இல்லல்லாஹ்" (வணக்கத்திர்க் குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை). இந்த இறைநம்பிக்கை வசனத்தை ஒருவன் நிராகரித்தால் முஸ்லிமாக இருக்க முடியுமா? முடிகிறதே! இந்த மானங்கெட்ட முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் இருக்கிறாரே! முஸ்லிம்களில் அரசியல் என்றால்! காலைக் கழுவிக் குடிக்கும் கழுதைகளும் இருக்கிறார்கள் என்பதற்கு இந்த முஸ்லிம் லீக் தலைவர் ஒரு சாட்சி.

பாருங்கள் தினத் தந்தி 18.01.2010 சென்னை மாநகரம் புறநகர் செய்திகள் பக்கம் : 16 வந்த செய்தியில் இந்த கேவலம் பதிப்பாகி இருக்கிறது.

இந்த புகைப்படம் . மானங்கெட்ட அதுவும் "தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத்" சென்னை தியாகராய நகர் எம்.ஜி. ஆர். நினைவு இடத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் உருவ சிலைக்கு சாஷ்டங்கமாக கையை எடுத்து கும்பிட்டு வணக்கம் செய்கிறாரே! இது அவருக்கு மட்டும் அல்ல ஒட்டு மொத்த இஸ்லாமியருக்கே ஒரு அவமான சின்னமாக தெரிகிறார்

இப்படி ஒரு சிலைக்கு வணக்கம் செய்து தான்! தன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் பதவியை தக்கவைத்து நிலை நாட்டுவதா?இந்த மாதிரி கேடுகெட்ட செயலை எந்த மதஹபு வாதிகளும் கண்டிப்பதில்லையே ஏன்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழியிலும், அவர்கள் செயலிலும் தவ்ஹீது பேசினால் தான் இவர்களுக்கு ரோஷம் வரும் போல் தெரிகிறது. தரம் கேட்ட செயல் செய்தால் ரோஷம் வராது. தாங்கள் தான் சுன்னத்து ஜமாஅத் மதஹபு வாதிகள் என்று பறை சாற்றும் போலி சுன்னத்து ஜமாஅத் வாதிகளே! எங்கே பார்ப்போம்! இவரைக் கண்டித்து ஒரு அறிக்கை விடுங்கள்!


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழியில் செல்லும் தவ்ஹீது வாதிகளையும், அந்த தவ்ஹீது கொள்கைகளையும் ஏற்று நடப்பவர்களையும், குழப்பவாதி என்று சொல்லு கிறீர்களே! ஊர் நீக்கம் செய்வதோடு தவ்ஹீதி ஜமாஅத் பள்ளிவாசலுக்கு வந்து தவ்ஹீது வாதிகளை அடிக்க வருகீறீர்களே! இவரை என்ன சொல்லப் போகிறீர்கள்?.

ஒரு வேலை இதைக் கூட நீங்கள் நியாயப் படுத்துவீர்கள். அந்த அடிப்படையில் தானே உங்கள் உங்கள் ஜமாத்துக்கள் போய்க்கொண்டு இருக்கிறது. நான்கு மதஹபுகளை பின் பற்றாதவர்கள் தொழ வரக்கூடாது, விரல் அசைப்பவர்கள் தொழ வரக் கூடாது, தலையில் தொப்பி அணியாதவர்கள் தொழ வரக்கூடாது, கூட்டு துவாவை புறக்கணிப்பவர்கள் தொழ வரக்கூடாது என்று போர்டு எழுதி போட்டு விமர்சிப்பவர்கள்! இப்படி கண்டவரின் சிலைகளை கையெடுத்து கும்பிட்டு விட்டு ஒரு மாநில லீக் தலைவர் வந்தால்! தொழ அனுமதிப்பீர்களா? அல்லது தொழக்கூடாது என்று வெளியே விரட்டு வீர்களா? உங்களின் வீர, தீர செயலை இப்படிப் பட்டவர்களிடம் காட்ட முடியுமா?


S.L.நசீருதீன்


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலைப் பொழுதை அடைந்தவுடன் கீழ்க்கண்ட துவாவை ஓதுவார்கள்.

நாங்கள் காலைப் பொழுதை அடைந்து விட்டோம். காலை நேரத்து ஆட்சி அல்லாவுக்கே உரியது. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். வணக்கத்திர்க்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை . அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் யாரும் இல்லை. அவனுக்கே ஆட்சி.புகழும் அவனுக்கே. அவன் அணைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். இறைவா! இந்த பகலின் நன்மையையும், அதன் பின்னர் வரும் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்த பகலின் தீங்கை விட்டும், அதன் பின்னர் வரும் தீங்கை விட்டும் உன்னிடம் பாது காப்புத் தேடுகிறேன். சோம்பலை விட்டும், மோசமான முதுமையை விட்டும்உன்னிடம் பாது காப்புத் தேடுகிறேன். என் இறைவா! நரகின் வேதனையை விட்டும், மண்ணறையின் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். ஆதாரம் : முஸ்லிம்

Sunday, January 17, 2010


அஸ்ஸலாமு அழைக்கும்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 4-1-2010 அன்று கீழக்கரை நகர் TNTJ யின் சார்பாக சொக்கம்பட்டி தெருவை சேர்ந்த சகோதரி ஒருவருடைய குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக ரூ. 3000 /- வழங்கப்பட்டது.

Saturday, January 16, 2010



அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

திருட்டு விசிடி பற்றி பேசிய கமலஹாசன் மற்றும் அவருடைய திரைத் துறையினரும், முஸ்லிம்கள் மீது பழிச்சொல் மற்றும் தவறான கருத்தை விதைப்பதை இத்தோடு நிறுத்திக் கொள்ளவேண்டும்.

பெற்ற தாயைக் கொன்றவன் சொன்ன வாக்கு மூலம் சினிமாதான்.

சமுதாயத்தை சீரழிக்கும் சினிமா!

மனிதகுலம் சீரழிவதைக் கண்டு சிகை அலங்காரம் செய்யும் இந்த கமலஹாசனுக்கு பத்மஷிரி பட்டம், கலைமாமணி பட்டம், சிவாஜியின் அடுத்த வாரிசு என்றெல்லாம் திரையுலகினரால் பட்டம் பெற்றாரே தவிர, சீரழிவுக்கு துணை போகும் இந்த சினிமாவினால் மனிதனுக்கு என்ன நன்மை பயக்கும் என்று சிந்தித்தாரா? சினிமாப் படம் எடுத்து அதன் மூலம் வருமானம் ஈட்டவே இவருக்கு நேரம் கிடைக்கவில்லை, இவருக்கு சமுதாய சிந்தனை எப்படி வரப்போகிறது. படத்தில் தான்! பாடலாசிரியர் எழுதிய பாட்டுக்கு வாயசைக்க முடியுமே தவிர வாழ்க்கையில் வாழ்ந்து, நடைமுறைப் படுத்த முடியாது.

இவர் ஒரு படத்தில் படிப்பார் ஒருபாடல் : "புஞ்சை உண்டு நஞ்சை உண்டு, பொங்கி வரும் கங்கை உண்டு, பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லை. இந்த பாரதத்தில் சோற்று சண்டை தீரவில்லை, இது நாடா இல்லை வெறும் காடா? இதக் கேட்ட யாரும் இல்லை தோழா?." இந்த பாட்டெல்லாம் இவர்களுடைய சினிமாவோடுதான் பாடிக் கொண்டு போகமுடியும். இதில் கொஞ்சமாவது இந்த சினிமாக் காரர்களால் நடை முறைப் படுத்த முடியுமா?

இந்த சினிமா மற்றும் சின்னத்திரை எனும் தொலைக்காட்சி ஊடகத்தின் மூலம் ஒவ்வொருவனும் எந்த அளவு பாதித்துக் கொண்டிருக்கிறான், என்று இந்த கமலஹாசனுக்கு தெரியாதா? இவர்களெல்லாம் திருட்டைப் பற்றி பேசுகிறார்கள்?. இஸ்லாமியர்களைப் பற்றிப் பேசுகிறார்கள்? என்ன யோக்கியதை இருக்கிறது? இந்த கூத்தாடிகளுக்கு?

ஒவ்வொருவனும் எப்படி பாதிப்புக் குள்ளாகிறான் என்பதை, இந்த செய்தி ஒன்றே பொதும். அப்படி பாதிப்புக் குள்ளான விசயங்கள் மலைபோல் இருந்தாலும்! சில தினங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம்! எவ்வளவுக்கு இந்த சினிமா கொண்டு பொய் விட்டது என்பதற்கு ஒரு மிகப் பெரிய உதாரணம்.

"அதாவது ஒரு தாய் தன் மகன் மீது சரியாக பாசம் காட்டாததினால்! அவன் மனம் வெறுத்து, பெற்ற தாயை கொன்டிருக்கிறான். அதுவும் கல்லூரி மாணவன். இது கொடுமைதான்! இந்த கொடுமையிலும் பெரிய கொடுமை என்னவென்றால்! அவன் காவல் துறையினருக்கு கொடுக்கும் வாக்கு மூலம் தான்".

அதில், அவன் கூறியிருப்பதாவது: சில வருடம் முன்பு திரைக்கு வந்த "அந்நியன்" என்ற ஒரு படம். இந்த படத்தில் "அம்பி" என்ற ஒரு பிராமண கதா பாத்திரம். இந்த கதாபாத்திரம் மாற்று உருவெடுத்து "அந்நியன்" என்ற பாத்திரமாகி எதிரிகளை துவேசப் படுத்து வதாகவும்,அது ஒருவகை அவதார மாகவும் அந்த படம் விளக்குகிறது.

இதைக் கண்ட இந்த கொலைகாரன்! தன்னை இந்த அந்நியன் கதாபாத்திராமாக கற்பனை செய்து, இவனாகவே தன்னை கற்பனை அந்நியனாக ஒரு அவதாரம் எடுத்து, தன் தாயை கொலை செய்தேன் என்று ஒரு சினிமாவை வைத்து கொலைக் குண்டான கருவை உருவாக்கிக் கொண்டு, ஒரு கொடூரக் கொலையை அதுவும் பெற்ற தாயை கொலை செய்து இருக்கிறான் என்றால்! எவ்வளவு கொடுமைக்கு இந்த சினிமா ஒவ்வொரு மனிதனையும் ஆளாக்கிக் கொண்டிருக்கிறது. மனிதனை ஆட்கொள்கிறது?

ஒரு காலத்தில் ம்.ஜி.ஆரின் கலை வாரிசு என்று திரையுலகினரால் போற்றப் பட்டவர் நடிகரும், இயக்குனருமான கே.பாக்கியராஜ் அவர்கள். அவர்கூட சினிமாவில் இதுவரை முஸ்லிம்களை தரக்குறைவாக தன் படத்தில் சித்தறித்ததாக தெரியவில்லை. இருப்பினும், அவரின் சொந்த பத்திரிக்கையான "பாக்கியா" என்ற புத்தகத்தில் முஸ்லிம்களின் வணக்க வழிபாட்டை எழுத்தினர். அதுகூட முஸ்லிம்களை தாக்கி அல்ல. இஸ்லாமியரின் வணக்கத்தை தவறாக புரிந்து எழுதி இருக்கிறார்.

அதை நாங்கள் அவரிடம் நேரில் விளக்கிச் சொன்னதும்! அதை அவர் ஏற்றுக் கொண்டு, அதோடு இஸ்லாமியரின் புனித வேதமான திருக் குரான் கொடுத்து படிக்கச் சொன்னதும், மனமார எங்களிடம் இருந்து பெற்றுக் கொண்டு, தான் எழுதியதற்கு மறுப்புப் போடுவதாகவும் எங்களிடம் வாக்குத் தந்தார். இவ்வளவுக்கும் அவர் ஒரு இந்து ஆன்மீக வாதி என்பது குருப்பிடத் தக்கது.

அவர் மதிக்கும் அளவுக்குக்கூட இந்த கமலஹாசன் தவறி விட்டார். பேரும் புகழும் இருந்தால் மட்டும் போதாது, நல்ல மனித குணமும், நேர்த்தியாக மாற்று மதத்தவர்களை மதிக்கும் பண்பும் வேண்டும் அது இந்த பாக்கியராஜிடம் இருக்கிறது.

கமலஹாசன் தன்னை ஒரு பகுத்தறிவு(!) வாதியாக காட்டிக் கொண்டால் மட்டும் பத்தாது! பகுந்து உணரக் கூடியவராக இருக்க வேண்டும்.

மேலும், பெருந்திரை சினிமாவிலிருந்து, சின்னத்திரை ஊடகம் வரை இன்றைய சமுதாயத்தை கெடுத்து, சீரழித்துக் கொண்டிருக்கும் இந்த சூழ் நிலையில் கமலஹாசன் திருட்டு விசிடி பற்றி முஸ்லிம்களின் கோபத்தை கிளறி விட்டு இருக்கிறார். இதற்க்கு ஆட்சேபனை தெரிவித்து தமிழ் நாடு தவ்ஹீது ஜமாஅத் கமலஹாசனுக்கு கண்டனம் தெரிவித்தது.

ஆபாசங்களையே பார்க்கக் கூடாதென்று எங்களின் இஸ்லாம் மார்க்கம் தடை செய்து இருக்கும் போது, முஸ்லிம்கள் கடை நடத்தி விசிடி விற்றதாக கமலஹாசன் கூறி இருப்பது கண்டனத் திற்குரியது. முஸ்லிம்கள் மட்டும் தான் வைத்து வியாபாரம் செய்கிறானா? மற்றவர்கள் சி.டி. கடை வைக்க வில்லையா? சிந்தித்துப் பார்க்க வேண்டும் இந்த கமலஹாசன்.

எவனோ சில முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாம் மார்க்கம் தெரியாதவன் விற்றால் அதற்க்கு முஸ்லிம்களும் பொறுப்பு என்று இந்த கூத்தாடி கமலஹாசன் தெரிந்து வைத்து இருக்கிறார். நீங்கள் சம்பாதிப்பதற்கும், சந்தோஷமாக இருப்பதற்கும்! சல்லாபம் புரிவதற்கும்! வசை பாடுவதற்கும் நாங்கள் தான் கிடைத்தோமா? அதற்க்கு இந்த மனித சமுதாயத்தை வேறு வழியின்றி கெடுக்கும் கேடுகெட்ட சினிமாவை வைத்து பொளப்பு நடத்தி கொண்டு, இஸ்லாமியர்களை தரக் குறைவாக எடை போட்டு பேச வேண்டாம்.

சினிமாவைப் பற்றி நமக்கு தேவை இல்லை. இருந்தாலும் முஸ்லிம்கள் மீது குற்றம் சுமத்திய கமலஹாசனுக்கு தெரியாதா? யார் திருட்டு விசிடியை வெளிக் கொண்டு வருவதென்று?.

மேலும் இன்றைய, உங்களின் திருட்டு சிடிக்கள் எல்லாம் யு டாரென்ட்(U TORRENT SOFT WERE) என்ற சப்ட்வேர் மூலம் டவுன்லோடு (DOWNLOAD) செய்து எவர் எவர்களோ! இந்த கேடுகெட்ட சினிமாவை ஒளி பரப்பிக் கொண்டிருக்கிறான். அதை தடை செய்ய முடியாத! இந்த கேடுகெட்ட திரையினரோ, அல்லது அரசாங்கமோ வேடிக்கை தான் பார்த்துக் கொண்டிருகின்றது.

பர்மா பஜாரில் எவனோ ஒரு முஸ்லிம் சிடி விற்றானாம் அதனால் முஸ்லிம்கள் தான் அதற்க்கு ஊக்கு விற்கிறார்கள், என்று கூறி இருப்பது கண்டனத் திர்க்குண்டான விஷயம். சாராயம் காச்சுபவனை விட்டு, விட்டு குடிப்பவனை பிடிக்கிறார். சிடி விற்றவனை குறை சொல் அல்லது காவல் துறையினரிடம் புகார் செய் வேறு என்ன நடவடிக்கை உன்னால் அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதை செய்வதை விட்டு, விட்டு அனைத்து முஸ்லிம் களையும் இந்த கேடுகெட்ட சினிமாவோடு தொடர்பு படுத்தி பேசாதே.

எங்களுக்கு எழும் சந்தேகம் என்னவென்றால்! ஏன் தயாரிப்பாளர் (PRODUCER) திருடக் கூடாது? இவர்கள் படம் பூஜை போடும் போதே படம் (AREA DISTRIBUTORS ADVANCE) எடுக்கும் தொகையின் முக்கால் பங்கு கிடைத்து விடுகின்றது. அதாவது அதிலும், பெரும் தொகை கிடைத்து விடுகின்றது. படம் எடுத்து முடிந்ததும் இவர்கள் (தயாரிப்பாளர்) ஏன் அதை திருடி விற்கக் கூடாது.? அந்த கண்ணோடத்திலும் பார்க்க வேண்டும்.


அல்லது இப்படியும் பார்க்கலாம்! ஒரு படத்தை எடுத்து முடித்த பிறகு எடிட் செய்த பின் ரீ ரிகார்டிங், மற்றும் டப்பிங் முடிந்ததும்! ப்ரிவியு (PREVIEW) பார்க்கும் போதும் திருட வாய்ப்பு இருக்கிறது. கதை மற்றும் கருத்து பரிமாற்றம் (STORY DISCUSSION), இடம் தேர்வு (LOCATION SELECT) செய்த பின், படம் முழுதும் எடுத்தவுடன் அது சம்பந்தப் பட்டவர்கள் மட்டும் அனுமதித்த எல்லைக் குட்பட்டு நடக்கும் விஷயம் தான் இந்த திரைப்பட வெளியீடு. இதெல்லாம் வெளியில் இருந்து யாரும் திருட முடியாத விஷயம்.

இதெல்லாம்! உங்களுக்குள் இருந்து கொண்டே திருடு போகிறதே தவிர, வெளி நபர்கள் யாரும் திருட வாய்ப்பில்லை, இந்த திருட்டு வி.சி.டி என்பதே தயாரிப்பாளர்களின் நாடகமே இது. என்பதே என்கருத்து.

மேலும் எங்களுக்கெல்லாம் சினிமாவைப் பற்றி அதிகம் தெரிய வாய்ப்பில்லை என்றாலும்! தொலை நோக்கு பார்வை என்று ஒன்று இருக்கிறது, அந்த அடிப்படியில் யோசித்தோமே யானால்! பயிரை வேலிதான் மேய்கிறது.

மேலும் இந்த சினிமாக்காரர்கள் அதிரடி படம் எடுத்தாலே முஸ்லிம்கள் மட்டும் தான் இவன் களுடைய கதைக் கண்களுக்கு தீவிரவாதியாக தெரிகிறான். இதை இவர்கள் நிறுத்த வேண்டும். அரசாங்கமும் அதற்க்கு தடை போடவேண்டும். மீறி இஸ்லாமியர்களின் பெயர்களை வைத்து சித்தரித்தால்! சட்டப்படி நீதி மன்றம் சென்று இவர்கள் மீது வழக்கு போடவேண்டும்.


S.L.நசீருதீன்

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அல்லாஹ்வின் வசனங்கள் உமக்கு அருளப்பட்ட பின்னர் உம்மை (எதுவும் ) தடுத்திட வேண்டாம்! உமது இறைவனை நோக்கி அழைப்பீராக! இணை கர்ப்பிப் பபவராக நீர் ஆகாதீர்!அல் குரான் 28:87

Friday, January 15, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

(முஹம்மதே!) உமக்கு இந்த குரானை விதித்தவன் உம்மை வந்த இடத்திலேயே மீண்டும் சேர்ப்பவன், "நேர் வழியைக் கொண்டு வந்தவன் யார்? தெளிவான வழி கேட்டில் உள்ளவன் யார்? என்பதை இறைவன் நன்கறிந்தவன்" என்று கூறுவீராக! அல் குரான் :28:85

இவ்வேதம் உமக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்த்தவறாக நீர் இருக்கவில்லை. உமது இறைவனிடமிருந்து அருளாகவே தவிர (இது அருளப்படவில்லை) எனவே (ஏக இறைவனை) மறுப்போருக்கு உதவுபவராக நீர் ஆகி விடாதீர்! அல் குரான் :28:86

Thursday, January 14, 2010



அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சில மாதங்கள் முன்பு மேலத்தெரு புதுப் பள்ளிவாசல் அருகில் உள்ள ஹமீதியா மேல் நிலைப் பள்ளியில் பயின்று வரும் பள்ளிப் பிள்ளைகளை ஏற்றிச்செல்லும் ஓம்னி வேன் தீப்பற்றி எரிந்தது, கீழை வாழ் மக்கள் அனைவருக்கும் தெரியும்.

அதன் ஓட்டுனர் மற்றும் உரிமையாளரான 500 பிளோட்டில் வசிக்கும் சகோதரர் சாகுல் ஹமீது எனும் சாவன்னா என்பவர். அவர் ஏழ்மையில் இருந்து கொண்டு சொந்தமாக வேன் வைத்து மாத வாடகையில் ஒட்டிக் கொண்டிருப்பவர். இந்த விபத்தினால் மிகவும் பாதித்து தற்போது தொழில் செய்ய இயலாதவராய் மிகவும் கஷ்டப் பட்டுக் கொண்டு இருக்கிறார்.

அந்த அடிப்படையில் அவருக்கு யாரும் உதவாத நிலையில்! நமது கீழக்கரை நகர் கிளை தமிழ் நாடு தவ்ஹீது ஜமாஅத் தை அணுகி உதவி கேட்ட வகையில். நமது கீழக்கரை நகர் கிளை தவ்ஹீது ஜமாஅத்! சென்ற குர்பானி தோல் விற்ற வகையில் கிடைத்த பணத்தில் இருந்து ரூபாய் 2000/= (இரெண்டாயிரம் ) தமிழ் நாடு தவ்ஹீது ஜமாஅத்தின் சார்பாக கிளைத் தலைவர் சகோதரர். ஹாஜா முகைதீன் மற்றும் சகோதரர். முஹம்மது சம்சுல் ஹசன், சகோதரர் அஷ்க்கர், சகோதரர். மன்சூர் காகா, சகோதரர். பசல் காக்கா அவர்கள் முன்னிலையில் கொடுக்கப் பட்டது. அல்ஹம்து லில்லாஹ்.

மேலும் இவருக்கு இரக்க உள்ளம் கொண்டு யாரும் உதவி செய்வதாக இருந்தால்! கீழக்கரை நகர் கிளை தமிழ் நாடு தவ்ஹீது ஜமாஅத் அல்லது இராமநாதபுரம் மாவட்ட தமிழ் நாடு தவ்ஹீது ஜமாஅத்தை அணுகியோ அல்லது நேரிலோ தங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

அஸ்ஸலாமு அழைக்கும்

இவண்

கீழக்கரை நகர் கிளை தமிழ் நாடு தவ்ஹீது ஜமாஅத்.
8/211,கிழக்கு தெரு,கீழக்கரை

தொடர்புக்கு :96774 83577 / 9360763200
கீழக்கரை நகர் கிளை தலைவர் : 9944436457

வெளியிட்டோர்

S.L.நசீருதீன்

அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)

உமது இறைவனை புகழ்ந்து போர்ற்றுவீராகஅவனிடம் மன்னிப்பு தேடுவீராக ! அவன் மன்னிப்பை ஏற்ப்பவனாக இருக்கிறான். அல் குரான் 11:3

நபி (ஸல்) அவர்க அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ் தடை செய்த ஒன்றை தடை மீறி இறை நம்பிக்கையாளர் செய்யும் பொது அல்லாஹ் ரோஷம் கொள்கிறான். ஆதாரம் முஸ்லிம் : 2819

Wednesday, January 13, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)

அல்லாஹ்வின் பள்ளி வாசல்களில் அவனது பெயர் கூறப் படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்? பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் கடும் வேதனையும் உண்டு. அல் குரான் 2:114

Tuesday, January 12, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

25 : 55, 56, 57, 58

'அல்லாஹ்வை அன்றி அவர்களுக்குப் பயனும், தீங்கும் தராதவற்றை வணங்குகின்றனர். (ஏக இறைவனை) மறுப்பவன் தனது இறைவனுக்கு எதிராக உதவுபவனாக இருக்கிறான்"

(முஹம்மதே) உம்மை நற்ச்செய்தி கூறு பவராகவும், எச்சரிக்கை செய்பவராகவுமே அனுப்பினோம்.

"தனது இறைவனுடன் தொடர்பை ஏற்ப்படுத்திக் கொள்ள விரும்பு பவரைத்தவிர வேறு எந்தக் கூலியையும் உங்களிடம் நான் கேட்கவில்லை எனக் கூறுவீராக.

மரணிக்காது, உயிரோடு இருப்பவனையே சார்ந்து இருப்பீராக! அவனைப் போற்றிப் புகழ்வீராக! தனது அடியார்களின் பாவங்களை நன்கு அறிந்திட அவன் போதுமானவன்.

அல் குரான் 25 : 55, 56, 57, 58

Monday, January 11, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)

கியாமத் நாளில் உங்களுக்கு இரவை நிரந்தர மாக்கி விட்டால் அல்லாஹ்வை அன்றி உங்களுக்கு ஒளியை கொண்டுவரும் இறைவன் யார்? அல் குர்ஆன் 28:71

Sunday, January 10, 2010





அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மார்க்கத்தை எடுத்து சொல்லுவதில் தமிழ் நாடு தவ்ஹீது ஜமாஅத் தின் மற்றும் ஓர் புரட்சி அல்லாஹு அக்பர்.

தமிழ் நாடு தவ்ஹீது ஜமாஅத் “தாவா எனும் மார்க்க அழைப்புப்பணி” திரை உலகினரையும் இனி சென்றடையும் இன்ஷா அல்லாஹ் :

திரைப்பட இயக்குனரும், நடிகருமான K.பாக்கியராஜ் அவர்களின் சொந்தப் பத்திரிக்கையான "பாக்கியா" என்ற ஒரு பத்திரிகை. இதில் பல சினிமா சம்மந்தப் பட்ட செய்திகளும், மறைந்த நடிக, நடிகைகளின் வாழ்க்கை வரலாறு களும் மற்றும் சில அறிவியல் செய்திகளும், சமுதாய செய்திகளும் இந்த பத்திரிகையில் இடம் பெறும். பெரும்பாளான அருவருக் கத்தக்க ஆபாசமான பத்திரிக்கையில் இருந்து இது கொஞ்சம் வித்தியாசப்படும் பத்திரிக்கை. அந்த செய்திகளோடு இந்த மாத முதல் வார பத்திரிக்கையில் வந்த ஒரு செய்தி.

"பாகிஸ்தானில் ஒரு இஸ்லாமியர் தனது உடல் ஆரோக்கிய மின்மை காரணமாக அவருக்கு தாடி வளரவில்லை. இஸ்லாத்தில் தாடி இருந்தால் தான் ஆண்மைக்கு அடையாளம், மற்றும் ஆன்மீகத்தின் சின்னம் என நினைத்துக் கொண்டு! அது வளர்வதுக்காக அவர் மருத்துவம் செய்தும் பலன் இன்றி போனது. அதனால்! அவர் அல்லாஹ் விடம் பிரார்த்தனை செய்து, தனக்கு தாடி வளர்ந்தால்! தனது குழந்தையை யாருக்காவது வேண்டுதலின் பேரில் கொடுத்து விடுவது என்றும் நேர்ச்சை செய்து இருக்கிறார். நேர்ச்சைக்கு பின்பு அந்த தாடி வளர்ந்ததாம்! அப்பொழுது அவர் வேண்டியதின் விளைவாக ஒரு பெண் குழந்தையை தனது உறவினருக்கு தானம் கொடுத்து விட்டாராம்”. இது அந்த பத்திரிக்கையின் சுறுக்கமான செய்தி.

இப்படி இந்த "பாக்கியா" என்ற பத்திரிக்கையில் செய்தி வந்தது. இதைப் படித்ததும், பத்திரிகை அலுவலகத்தின் தொலைபேசிக்கு நமது அலை பேசி மூலமாக தொடர்பு கொண்டு இந்த செய்தி தவறு, இஸ்லாத்தில் அப்படி ஒன்றும் தாடி இருந்தால் தான் ஆண்மை என்று கிடையாது. முஸ்லிம்கள் கட்டாயமாக தாடி வளர்க்க வேண்டும். அதே சமயம் தாடி தான் ஆன்மீகத் தின் அளவுகோல் என்று கிடையாது. அதனால், உங்களுக்கு எப்படியோ இந்த செய்தி தவறாக வந்திருக்கிறது, அதனால் நீங்கள் மறுப்பு போடவேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் பேரில், நீங்களும் எங்கள் இஸ்லாம் மார்க்கத்தை தெரிந்து கொள்ள! நாங்கள் உங்களுக்கு திருக் குரான் அன்பளிப்பு தருகிறோம், பெற்றுக் கொள்ளுங்கள் ! என்று சொன்னதின் அடிப்படையில்! அதை தயவு செய்து அலுவலகத் திற்கு நேரில் வந்து எங்கள் இயக்குனரை (DIRECTOR) சந்தித்து அவரிடமே கொடுங்கள் என்று எங்களுக்கு நேரம் குறித்து தந்தார்கள் அந்த அலுவலர்கள்.

நாங்களும் K.பாக்கியராஜின் “பாக்கியா” அலுவலகம் சென்று! நாங்கள் தமிழ் நாடு தவ்ஹீது ஜாமாத் சார்பாக வந்திருக்கிறோம் என்ற செய்தியை அலுவலர்களுக்கு சொன்னவுடன், அவர்கள் K.பாக்கியராஜ் அவர்களை தொடர்பு கொண்டு நாங்கள் வந்த விஷயத்தை தெரிவு படுத்தி சிறுது நேரம் காத்திருக்கச் சொன்னார்கள்.

நாங்கள் எதிர்பார்த்த சமயம் K.பாக்கியராஜ் வந்ததும், நாங்கள் “தமிழ் நாடு தவ்ஹீது ஜமாத்தில்” இருந்து வந்திருக்கிறோம் என்பதை முதலில் அறிமுகப் படுத்தி, பின்பு தங்களின் "பாக்கியா" என்ற பத்திரிக்கையில் வந்த தவறான செய்தியை குறுப்பிட்டு சொன்னதின் அடிபடையில், உடனே தனது தவறை உணர்ந்து, இதை "விஜி" என்பவர் தான் எழுதி தந்தார். இதை கவனத்தில் கொண்டு நான் சரி செய்து அடுத்த இதழில் மறுப்பு விடுகிறேன் என்றார்.

இன்றைய சமுதாயத்தை அதிகமாக சீரழித்துக் கொண்டிருக்கும் திரை உலகமும், ஊடகத்தின் மூலம் குடும்பத்தை நிலை குலைய வைக்கும் சின்னத் திரையும், அதில் வரும் ஆபாசமான நடிப்புகளும், பேச்சுக்களும், செய்கைகளும், நமது அறிவை இழக்க ஒரு காரணியாக இருக்கின்றது. இதை எல்லாம் தமிழ் நாடு தவ்ஹீது ஜமாஅத் கவனத்தில் கொண்டு, நமது இஸ்லாமியருக்கு எடுத்துச் சொல்லி மாற்றி வருகின்றது என்பது அனைவருக்கும் தெரியும்.

இனி இந்த சீரழிவிற்கு வித்திடும் இந்த திரை உலகினரையும் நமது தாவா எனும் மார்க்க அழைப்புப் பணியை தொடரும். நமது இனிய மார்க்கத்தை எடுத்துச் சொல்லி, எவ்வளவுக் கெவ்வளவு அவர்களை நல் வழிக்கு வர இந்த மார்க்கப் பிரச்சாரம் பயன் படுமோ! அதன் எல்லையை இந்த தமிழ் நாடு தவ்ஹீது ஜமாஅத் தொட தயங்காது.

அதற்கு, முதற்க்கட்டப் படியாக திரைப்பட இயக்குனரும், நடிகருமான K.பாக்கியராஜ் அவர்களை தமிழ் நாடு தவ்ஹீது ஜமாஅத் சார்பைக் கொண்டு ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை கிளை தமிழ் நாடு தவ்ஹீது ஜமாஅத் தலைவர் சகோதரர் ஹாஜா மொய்தீன் அவர்களின் ஒப்புதலோடு கீழக்கரை சகோதரர் S.L.நசீருதீனும், மற்றும் சகோதரர் முஸ்தகீம் அவர்களும், மாநில தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் தலைவர் சகோதரர் செய்யத் இப்ராகிம் மற்றும் மாநில பொதுச் செயலாளர் சகோதரர் அப்துல் ஹமீது அவர்களின் ஒப்புதலின் பேரில் வந்த வட சென்னை செயலாளர் சகோதரர் பத்ருல் ஆலம் அவர்களும் K.பாக்கியராஜ் அவர்களை, நேரில் சந்தித்து "தமிழ் நாடு தவ்ஹீது ஜமாஅத்" சார்பாக பி.ஜே அவர்கள் தமிழில் மொழி பெயர்த்த திருக் குரானும், சகோதரர் பி.ஜைனுல் ஆபீதீன் அவர்கள் எழுதிய "அர்த்தமுள்ள இஸ்லாம், மனிதனுக் கேற்ற மார்க்கம், அர்த்த முள்ள கேள்விகள் அறிவுப் பூர்வமான பதில்கள், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், இஸ்லாம் பெண்களின் உரிமையை பறிக்கிறதா?, குற்றச் சாட்டுகளும் பதில்களும் மற்றும் வரும் முன் காத்த இஸ்லாம் என்ற புத்தகங்களும் மற்றும் "உணர்வு" பத்திரிக்கையும் அன்பளிப்பாக கொடுக்கப் பட்டது.

அதோடு "விடுதலைப் போரில் முஸ்லிம்களின் பங்கு, இந்திய சுதந்திரம் யாரால்? மற்றும் திருக் குரான் வாழும் அற்புதம் என்ற குறுந்தகடும் (DVD யும்) அன்பளிப்பாக கொடுக்கப் பட்டது அல்ஹம்து லில்லாஹ், அல்லாஹு அக்பர்.

இப்படி திரை உலகினரை அணுகி இஸ்லாம் மார்க்கத்தை எடுத்துச் சொல்லுவது ஒவ்வொருவரின் தலையாயகடமை. அவர்களிடமும் ஆன்மிகம் இருந்தாலும் அறிவான ஆன்மிகம் இல்லை. அல்லா நமக்கு தந்த இஸ்லாம் என்ற அறிவு போகிஷத்தை அவர்களும் தெரிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டுமல்லவா? அந்த அடிப்படையில் நம் தமிழ் நாடு தவ்ஹீது ஜமாஅத் எடுத்து வைத்து இருக்கும் திரையுலக தாவா என்னும் மார்க்க அழைப்புப் பணி வீரியமாக தொடர அந்த அல்லாஹ் நமக்கு துணை நிர்ப்பானாக.

திரைவுலகினர் என்றாலே! அசிங்கத்திலும், ஆடம்பரத்திலும், ஆடல், பாடலிலும் ஆடை அலங்காரத்திலும், அவர்களை யாரும் மிஞ்ச முடியாது. அந்த சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருப் பவர்களிடம் நமது தூய இஸ்லாத்தை எடுத்துச் சொன்னோமே யானால்! அவர்கள் திருந்த ஒரு வாய்ப்பை அல்லாஹ் அவர்களுக்கு கொடுக்கிறான் என்று நினைக்க வேண்டும்.

அந்த எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுக்கும் இந்த நல் உபதேசமான திருக் குரான் மற்றும் நபி (ஸல்) அவர்களின் பொன் மொழிகளும் சென்றடைந்து, அதை செவிமடுத் தார்களே யானால்! அந்த வல்ல அல்லாஹ்வின் அருளும், கிருபையும் அவர்களுக்கும் கிடைக்கக் கூடும். அதன் அடிப்படையில் தமிழ் நாடு தவ்ஹீது ஜமாத்தின் இந்த அழைப்புப் பணி சிறக்க அந்த எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் அனைவரும் துவா செய்வோமாக!.


S.L.நசீருதீன்

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)
காலையிலும் மாலையிலும் ஓத வேண்டிய துவா:


"அல்லாஹும்ம பா(F)(த்)திரஸ் சமாவாத்தி வல் அர்ழி ஆளிமல் கைபி வஸ்ஸஹாதத்தி. ரப்ப குல்லி ஷையின் வமலீகக்ஹு, அஷ்ஹது அன் லாயிலாஹா இல்ல அன்(த்)தஅவூது பி(B)க்க மின் ஷர்ரி ன(F)ப்சி வஷர்ரிஷ் ஷைத்தானி வஷிர்கிஹி.

இதன் பொருள் : "இறைவா! வானங்களையும், பூமியையும் படைத்தவனே! மறைவானதையும், வெளிப் படை யானதையும் அறிபவனே! அனைத்துப் பொருட்களின் அதிபதியே அரசனே! வணக்கத் திரக் குரியவன் உன்னைத்தவிர வேறு YAARUM இல்லை. எனது மனோ இச்சையின் தீங்கை விட்டும். ஷைத்தானின் தீங்கை விட்டும் உன்னிடமே பாத்து காப்பு தேடுகிறேன். அதாரம் : நஸயி 5333

Saturday, January 9, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மதுரை ஆதீனம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இகழ்ந்து பேசியதை கண்டித்து! நமது தமிழ் நாடு தவ்கீத் ஜமாஅத் மன்னிப்பு கேட்க வைத்தது பொய்யன் டி.ஜே வினருக்கு போறாமை:

பொய்யன் டி.ஜே. விற்கு மதுரை ஆதினத்தின் மீது என்ன அவ்வளவு அக்கறை?


விமான நிலைய சந்திப்பு ஆதீனத்தை வழியனுப்ப சென்ற பேட்டியா?

"தான் அப்படிப் பேசவில்லை, ஒரு நபிகள் நாயகம் தான் இருக்க முடியும் அவருக்கு இணையாக எவரையும் சொல்ல முடியாது'' என மதுரை ஆதீனம் பேசியதை விண் தொலைக்காட்சி ஒளிபரப்பியதுமே கொந்தளித்துப் போயிருந்த முஸ்லிம் சமுதாயமும், சகோதர இயக்கங்களும்(?) அமைதியாகி விட்டன.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்திடம் மதுரை ஆதீனம் விஷுவலாக எதைச் சொன்னாரோ அதைத்தான் கடிதமாக இவர்களுக்கு கொடுத்திருக்கிறார். அதைப் பெற்றுக் கொண்டு "சரிதானுங்க' என்கிற ரீதியில் வாபஸ் ஆகி "புஸ்' ஆகி விட்டார்கள்.

இது இந்த தனியார் விளம்பர ஜமாத்தின் அதிகார பூர்வமான பேட்டிகள் தான் மேலே உள்ளது.

இதில் ஆதீனம்! தான் அப்படி சொல்லவில்லை என்றதும் சகோதர இயக்கங்கள்(?) அமைதியாகி விட்டன. இது இவர்களின் வேடிக்கையான விளக்கம், விந்தையான சொற்கள், வெளிக்காட்டக் கூடிய வெட்கக்கேடு. விவேக மற்ற விசாரணை, விளையாட்டுத் தனமான குறும்பு, விபரமற்ற விளக்கம், வீணான நேரப் போக்கு.

தமிழ்நாடு தவ்கீத் ஜமாத்தின் நேரடி வீடியோ ஆதாரத்தை கண்டதும் கொதித்து பொறாமைப் பட்ட பொய்யன் டி.ஜே. ஆதீனம் விஷுவலாக சொன்னதை தமிழ் நாடு தவ்கீத் ஜமாத் அப்படியே போட்டு விட்டார்கள் என்று சொல்கிறார்கள். சுருக்கமாக சொன்னால் "நாங்கள் (INTJ) கொடுத்த எதிர்ப்பு பேட்டியை இவர்கள் பதிவு செய்து விட்டார்கள்” என்பது போல் சித்தரித்து இருக்கிறார்கள்.

அல்லாஹ் முதல் மனிதனை மண்ணால் தான் படைத்தான். அதற்காக அந்த மனிதனுக்கு மண்டையில் களிமண்ணை வைத்து படைக்கவில்லை. இவர்களுக்கு அல்லாஹ் களிமண்ணைத்தான் வைத்து இருப்பான் போல் தெரிகிறது. ஏனென்றால்! சிந்திக்கும் திறனை இவர்கள் அதிகமாக இழந்து கொண்டு வருகிறார்கள் என்பதற்கு இந்த மதுரை ஆதீனைத்தின் பேட்டி நாடகமே! ஒரு உதாரணம்.

மேலும், தமிழ் நாடு தவ்கீத் ஜமாஅத் தக்க ஆதாரத்தோடு ஆதீனத்தின் வீட்டை முற்றுகை என்று அறிவித்ததும்! பிரச்சனை பெரிதாகி விடும் என்ற காரணத்தினால் தான்! ஆதீனம் அவர்கள் தான் பேசியதை வாபஸ் வாங்கிக் கொண்டு, எழுத்து மூலமாகவும் கொடுத்து, பின்பு அதை அவர் படித்தும் காட்டியதை வீடியோவாக பதிவும் செய்து இருக்கிறார்கள்.

இதில் என்ன இவர்களுடைய விமர்சனத்திற்கு ஒப்பிட்டதாக இருக்கிறது? என்று தெரியவில்லை. மேலும், அந்த பொறாமையான விமர்சனத்திற்கு பதிலாக! சந்தோசப் பட்டாலே போதும். ஆனால் அவர்கள் சந்தோசப் படவில்லை. மக்கள் தெரிந்து கொண்டார்களே! அதுவே போதும்.

தமிழ் நாடு தவ்கீத் ஜமாஅத்தைப் பொறுத்த வரையில் கொள்கையிலும் சரி, சமுதாய பிரச்சனை என்றாலும் சரி, தனி நபர் பாதிப்பு என்றாலும் சரி! அதை ஆராய்ந்து, தவறு யார் மீது இருக்கிறதோ அவர்களை முச்சந்தியில் வைத்து முற்றுகை இடவும் தயங்காது. என்பதை இந்த பிற்பிறவி எடுத்த பொய்யன் டி.ஜே தெரியவேண்டும். உங்களைப்போல் வெறும் வெற்று வார்த்தைக்கும், கொள்கையில்லாத பேச்சுக்கும் ஒருபோதும் இந்த தமிழ் நாடு தவ்கீத் ஜமாஅத் இடம் கொடுக்காது. ,

மேலும், யாருவேண்டு மானாலும் நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கேலியாகவோ, அவதூறாகவோ பேசிவிட்டு! "தான் அப்படி பேசவில்லை" என்றால்! அமைதி காத்து, சரி தானே! அவர்தான் அவதூறு பேசவில்லை என்று சொல்லிவிட்டாரே! என்று சமாதானமாக போய்விடுவது அறிவார்ந்த செயலா? அல்லது அவர் சொன்ன வார்த்தை எந்த அளவுக்கு உண்மையாக இருக்க முடியும் என்பதை ஆராய்வது சிறந்ததா? என்பதை இந்த பொய்யன் டி.ஜே.அறிந்து கொள்ளவேண்டும்.

அதன் அடிப்படையில் உண்மையை விளங்கி, பிறகுதான் தமிழ்நாடு தவ்கீத் ஜமாஅத் முற்றுகை அறிவித்ததே! தவிர, பாக்கர் அன் கோ அபு என்பவர் எழுதியது போல் முற்றுகை என்பது ஒன்றும் சட்ட மீறல் அல்ல! இது சமுதாய உணர்வு. இது கூட தெரியாமல் ஒரு ஜமாஅத் இருக்கிறதென்றால் அது இந்த பொய்யன் டி.ஜே வாகத்தான் இருக்க முடியும்.

திருச்சியில் ஆதீனம் பேசியதை மையமாக வைத்து தான் நக்கீரன் வெளியிட்டது. அந்த அடிப்படையில் தான் ஆதாரம் தேடியது, அல்லாஹ்வின் கிருபையால் அந்த ஆதாரமும் கிடைத்தது. தமிழ் நாடு தவ்கீத் ஜாமாத்தா? சங்கராச்சாரியாரின் பிறந்த நாளைக்கு திருச்சி மேடையில் இருந்தார்கள்? என்ன பேசியிருப்பார் இந்த ஆதீனம் என்பதற்கு?. பத்திரிகையில் வந்த செய்தி பதற்றத்தை உண்டு பண்ணியது. அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்தது. அது வெற்றியிலும் முடிந்தது. அல்ஹம்து லில்லாஹ்! எங்களுக்கு அல்லா போது மானவன்.

வீணாக உங்களுக்கு செய்தி கிடைக்க வில்லை, வெப் சைட் காலியாக இருக்கிறது! என்பதற்காக! பூச்செண்டு வைத்து செய்திகளை திரட்ட வேண்டாம். உங்கள் வெப் சைடில் போட செய்திகள் இல்லை என்றால் சொல்லுங்கள் நான் தருகிறேன். அல்லது நல்ல திறமையான நிருபர்களை பணியில் அமர்த்துங்கள். அவர்கள் ஒருவேளை செய்திகள் கொண்டு வந்து தரலாம்.


S.L.நசீருதீன்

அஸ்ஸலாமு அலைக்கம் (வரஹ்)

தூங்கும் பொது ஓத வேண்டிய துவா :

பி(B)ஸ்மிக்க அமூ(த்)து வ(அ)ஹ்யா ஆதாரம் புகாரி :6312

தூங்கி எழுந்ததும் ஓதும் துவா:

“அல்ஹம்து லில்லஹில்லதி அஹ்யானா பக்ஹ்தமா அமா(த்)தனா வஇலைஹின் நுசூர்” ஆதாரம் புகாரி : 6312,6314, 6324, 6325,7395

Friday, January 8, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அவனே ஏழு வானங்களை அடுக்கடுக்காக படைத்தான். அளவற்ற அருளாளனின் படைப்பில் எவ்வித ஏற்றக் குறைச்சலையும் நீர் காண மாட்டீர்! மீண்டும் பார்ப்பீராக! ஏதேனும் பிளவை நீர் காண்கிறீரா? பிறகு இரு முறை பார்வையை செலுத்துவீர்! களைப்புற்று இழிந்ததாக பார்வை உம்மைத் திரும்பி அடையும். அல்குர்ஆன் 67:3-4

Thursday, January 7, 2010


அஸ்ஸலாமு அலைக்கு (வரஹ்)

நம்பிக்கை கொண்டோரே! அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கும் இத்தூதருக்கும் மோசடி செய்யாதீர்கள்! உங்களிடம் நம்பி ஒப்படைக் கப்பட்ட வற்றிலும் மோசடி செய்யாதீர்கள். அல் குரான் 8:27

Wednesday, January 6, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

என் கேள்விக்கு பதில் இருக்கிறதா? S.M.பாக்கர் அன் கோ பதில் சொல்லட்டும்.

கீழக்கரை கீழை அஞ்சல் ஜமீலின் ஓரவஞ்சனை.

கீழக்கரை! ஒரே தெருவில் வசிக்கும் மும்மூர்த்திகள் என்னும் தொப்புள் கொடி உறவுகளின் நாடகம் :

"மலேசியாவில் தொண்டிப் பெரியவரை மலேசிய காவல்துறையினர் கை விலங்கு மாட்ட முனைந்தபோது, தொண்டிப் பெரியவர் அதற்கு தோதாக கையை நீட்டியபோது, அந்நிய மண்ணில் வீரத்துடன் விலங்குகளை மாட்டக் கூடாது என்று போராடிய! பாக்கரை கோழை என்று சொல்ல உங்களுக்கு எப்படி மனம் வந்தது? " From intj net

இப்படி வீரனாக(!) பாக்கரை சித்தரித்த intjnet, பாக்கர் பணத்தை வாங்கிக் கொண்டு ஜகா விட்டுக் கொண்டு இருக்கிறாரே! இதற்க்கு பதில் சொல்லி விட்டு தன்னை கோழை இல்லை என்று நிரூபிக்கட்டும். அந்நிய மண்ணில் போராடிய பாக்கர்! அவரது சொந்த ஊரின் மண்ணில் பிறந்த என்னிடம் "பணம் வாங்க வில்லை” என்று நிரூபிக் கட்டும். அவருக்கு ஒத்து ஊதியவர்களும் வரட்டும். மக்கள் முன்னிலையில் முபாஹலா செய்வோம்.

இப்படியுமா? அவருக்கு போராளி என்று புகழாரம் சூட்டுவார்கள்! இந்திய தவ்கீத் ஜமாஅத்தில் இருக்கும் என் சகோதரர்களே! நீங்களே சகோதரர் பாக்கர் அவர்களை கையைப் பிடித்து, நசீருதீன் என்பவர் முபாஹலாவுக்கு அழைக்கிறார்! உங்கள் மீது அவதூறு இல்லை என்பதை துடைக்க தைரியமாக வாருங்கள் என்று சொல்லி அழைத்துக் கொண்டு வாருங்கள். வரவில்லை என்றால் இழுத்துக் கொண்டு வாருங்கள்.

ஒரு வருடமாக பள்ளி பணத்தை என்ன செய்தார் என்று, இன்று வரை சொல்லவில்லை. எனக்கு பதில் சொல்லாதவரை என்னவென்று சொல்லுவது.

சரி விஷயத்திற்கு வருகிறேன்.

ஆம்! தவ்கீத் எழிச்சி ஆரம்பித்த காலத்திலிருந்தே ஒன்றாக இருந்த இவர்கள். இன்று காலப் பிரிவென்னும் பிடியில் சிக்கி சின்னா பின்ன மாகிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் சித்திக் என்ற ஒரு சகோதரர் சொன்னது போல்! இந்த தவ்கீத் ஜமாத்தை விட்டு யார் போகிறாரோ அவர் தற்குறி யாகத்தான் போவார்! என்று சொன்னதை அல்லாஹ் இன்று ஆக்கிக் கொண்டிருக்கிறான். அல்லாஹு அக்பர்.

கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை என்ற பெயரில் தொடங்கி, பின்பு தமிழ் நாடு தவ்கீத் ஜமாஅத் தோடு கைகோர்த்து ஒன்றாய் இருந்த ஒரு காலம்! அன்று பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களை செல்லமாக சுருக்கி பி.ஜே என்றும், அண்ணன் என்றும் அழைத்த மும்மூர்த்திகளின் நாவு! அவர்களால் இன்று தொண்டி பெரியவர் என்று அழைக்கப் படுகிறார். வெட்கமாக இல்லையா? இப்படி அழைப்பதற்கு. அவர்கள் நாகாக்க!

தாங்கள் தான் நாகாக்க வேண்டும், காவாக்கால்! நீங்கள் பணம் பெற்ற தர்க்குண்டான குறுந்தகடுகள் அணைத்து சகோதரர்களுக்கும் தமிழ் நாடு தவ்கீத் ஜமாஅத்தின் அன்பளிப்பாக கொடுக்கப்படும். நான் செய்த ரேகார்டிங்கில் ஒரே ஒரு நபர் பேசியது தொகுக்க மனம் வரவில்லை அதனால் நீங்கள் நாகாக்க!! மீண்டும் சொல்லுகிறேன் காவாக்கால்!

பி.ஜைனுல் ஆபிதீன் பெயரை மையாமாக வைத்து! பாக்கர், ஜமீல், தொண்டியப்பா என்ற மும்மூர்த்திகள் உருவாகியது எப்படி? அதுவும் இந்த தமிழ் நாட்டிற்கு எப்படி இந்த மூவரையும் தெரியும்? அது மட்டுமல்லாது அவர் (பி.ஜைனுல் ஆபிதீன்) பெயரை பயன் படுத்தி, உங்களின் வியாபார வசதிகளை பெருக்க எந்த அளவிற்கு பயன் படுத்துனீர்கள்? வர்த்தக ரீதியாக கீழை அஞ்சல் என்ற மாத இதழ் பத்திரிக்கை எப்படி கீழக்கரை மக்களுக்கு தெரிய ஆரம்பித்தாது? வின் டி.வியின் புகழ் எப்படி கிடைத்தது? மீடியா வேர்ல்ட் எந்த அளவு வர்த்தக ரீதியாக பயன்பட்டது? இதையெல்லாம் சிந்திக்க மாட்டீர்களா? ஏறிவந்த ஏணியை எட்டி உதைப்பது தான் உங்கள் நாகரீகமா? மார்கத்தை எடுத்து சொல்லுபவரை வைத்து, உங்கள் மார்கத்தை (வசதி வாழ்வை) வளர்த்துக் கொண்டீர்களே!

எங்களின் நட்பு அடிப்படையில் முலஜா என்று செல்லமாக அழைக்கப்பட்ட ஜமீல்! இன்று கீழை ஜமீல் ஆகியது எப்படி? சாதாரண பாக்கர் இன்று சகோதரர் எஸ்.எம்.பாக்கராக உருவெடுத்தது எப்படி? சாதாரண தொண்டியப்பா தமிழ் நாடு தவ்கீத் ஜமாஅத் பொருளாளர் தொண்டியப்பாவாக மாறியது எப்படி? அல்லது அப்படி உங்களை அழைக்க காரணமாக்கியவர் யார். இந்த தொண்டி பெரியவரல்லவா?

அன்று கீழை அஞ்சலில், கீழை ஜமீல் அவர்கள் தமிழ் நாடு தவ்கீத் ஜமாஅத் தை ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து தள்ளி எழுதினார்களே! தொண்டிப் பெரியவரை தலையில் தூக்கி வைத்து ஆடினார்களே, இன்று கீழக்கரை எனும் ஊர் ஒற்றுமை உங்களை கரம் பிடித்து இழுத்து விட்டதா? அல்லது குடும்ப சகிதமாக ஒன்று சேர்ந்து விட்டீர்களா?

பத்திரிக்கைக் கென்று ஒரு நாகரிகம் இருக்கின்றது, அதன் எல்லை தாண்டி அன்று ஒரு எழுத்தும், இன்று ஒரு எழுத்தும் மாறி, மாறி எழுதுவது உங்களின் பத்திரிக்கை தர்மமா? எழுது கோளுக்கு தெரியாது வர்ணங்கள் , எழுது பவருக்குத்தான் தோன்றும் அதன் எண்ணங்கள். எண்ணங்கள் தான் எழுத்தை வடிவமைக்குமே! தவிர, எழுதுகோல் அல்ல! என்பதை ஜமீல் அவர்கள் தெரியட்டும்.

ஒரு வார்த்தைக்கு மறு வார்த்தை பேசத் தெரியாதவர்கள்! வசைபாட! வார்த்தைக் கோர்வையே வராத உங்களுக்கு! எழுத்துக் கோர்வை எப்படி வந்தது? அன்று மக்கள் தேதி குறித்து கேட்டு தங்களை அழைக்கும் அளவிற்கு (CALL SHEET) புகழ் பெற்றீர்களே! மீடியா வேல்ட் என்றும், வின் டி.வி என்றும் இன்னும் பிற ஊடகங்களில் தங்களை பிரபல படுத்திக் கொண்டீர்களே? அதற்க் கெல்லாம் காரணம் யார்? நீங்கள் வஞ்சகத் தனமாக அழைக்கும் இந்த தொண்டி பெரிய வரல்லவா?

பெயர் வாங்கத்தான் செய்தோம்! மறுக்க வில்லை, அதற்காக இந்த தொண்டி பெரியவர் எதை செய்தாலும் சரி என்று சொல்லுவதா? என்று நீங்கள் சொல்லலாம்!.

ஆம்! அப்படித்தானே இருந்தீர்கள். ஒரு நபர் தவறு செய்தால் கையால் தடுங்கள், முடியாவிட்டால் நாவால் தடுங்கள், அதுவும் முடியா விட்டால் மனதால் ஒதுங்குங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அந்த வார்த்தை ஒரு அருப்புதமான போதனை, அன்று தனி நபர் ஜமாஅத்தில் நீங்கள் தானே முக்கியமான நபராக திகழ்ந்தீர்கள் உங்களுக்கு தெரியாதா?

அன்று தமிழ் நாடு தவ்கீத் ஜமாஅத் எப்படி இயங்கியதோ அப்படித் தானே இன்றும் இருக்கிறது, இயங்கிக் கொண்டும் இருக்கிறது. இப்பொழுது மட்டும் என்ன தனி நபர் ஜமாஅத் அழைக்கிறீர்கள்.

ஒன்றாக இருக்கும் காலமெல்லாம் அண்ணன் புகழ் பாடி தம்பிகள் எல்லாம் பெயர் வாங்குனீர்கள் சரி! அதே சமயம் உங்கள் வாயில் இருந்து விஷ வார்த்தைகள் வருகிறதே எப்படி? எப்படி அந்த வார்த்தைகள் உங்கள் வாயில் கசக்காமல் வருகிறது? ஒரு வேலை! பிரிவென்னும் காலப் பிரளயத்தில், கலங்கிப் போய்! ஊர் காரர்களாக ஒன்று கூடி ஜமாஅத் ஆரம்பித்தீர்களா?

ஒரே ஊர் என்றவுடனும், ஒரே உறவு என்றவுடனும் வந்த ஒற்றுமையா? அல்லது உங்களுடைய நாற்ற மெடுத்த விசயங்கள் எல்லாம் வெளி உலகிற்கு அம்பலமாகி விட்டதே! இனி மக்களிடம் பதில் சொல்ல முடியாது என்ற காரணத் திற்காகவா இந்த மாற்றம்? இந்த மறு ஆய்வு வார்த்தை ?

அன்று மட்டும் தொண்டி பெரியவரின் தவ்கீத் கொள்கை ஆய்வு சரிதான் என்று முழங்கிய உங்கள் தவ்கீத் கொள்கை வார்த்தை! இன்று மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று வருகிறதே! அப்படி ஆய்வு செய்ய வேண்டும் என்று உங்கள் பின்னால் வரும் உங்கள் ஊர் தெருவுக்கும், உறவினர்களுக்கும் மட்டும் தோன்றுகிறதே! அது எப்படி என்று புரியவில்லை?

சொல்லுவதோடு மட்டும் மல்லாது உங்கள் வெப் சைட்டிலும் தொண்டி பொய்யருக்கு கீழை ஜமீலின் பதில்! என்று பெரிய கட்டுரை போல் குறை சொல்லி எழுதி இருக்கிறீர்களே? உங்கள் இந்திய தவ்கீத் ஜமாத்துக்குள் இருக்கும் குறைகள் மட்டும் ஏன் கீழை அஞ்சல் ஜமீல் அவர்களுக்கு தெரியவில்லை?.

ஜமீல் அவர்களே! வேறு எங்கும் நான் குறை தேடி கண்டு சொல்லவில்லை.

நான் பள்ளி கட்ட கொடுத்த ஐம்பதாயிரம் (50,000) ரூபாயை உங்கள் தொப்புள் கொடி உறவு பாக்கர் வாங்கவில்லை என்று சொல்லி விட்டாரே? அது உங்களுக்கு தெரியாதா? தாங்கள் தான் பெரிய பத்திரிக்கை நிருபரல்லவா? உங்களுக்கு செய்தி வராமலா போகும்? அதுவும், ஒரு கூட்டுக்குள் இருக்கும் பறவைகள் குடும்பத்திற்கு இந்த செய்தி வராமல் இருந்தால் பெரிய ஆச்சர்யம்!

அது மட்டுமா? அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்ய வாருங்கள், முபாஹலா செய்வோம் என்று நான் பகிரங்க அழைப்பு கொடுத்தேன்! அந்த அழைப்பிற்கு செவி மடுத்தார்களா? அல்லது நியாயம் விசாரித்தார்களா? இல்லையே! மாறாக அவர்கள் கொடுத்த பதில் என்ன தெரியுமா?

நீ என்னிடம் பணம் தந்ததாக சொல்லுகிறாயே! ஐம்பது, ஐம்பது ரூபாயாக தந்தாயா? நூறு, நூறாக தந்தாயா? தவ்கீத் ஜமாஅத் தலைமைக்கு படி ஏறி வந்தாயே அது எத்தனை படி? என்று என்னுடைய சாட்சியிடம் கூறு கெட்டத் தனமாக குறுக்கு விசாரணை செய்தாரே! இவ்வளவு குறுகிய சிந்தனைவுள்ளவரா இத்தனை காலம் தன் அறிவை தொலைத்து விட்டு தவ்கீத் என்ற போர்வையில் ஒளிந்து இருந்தார் என்று ஆச்சரியப் பட்டேன். அது மட்டுமா? உங்கள் தொப்புள் கொடி உறவுகள் என்ன சொன்னார்கள் தெரியுமா?

இந்த சின்ன, சின்ன விஷயத் திர்கெல்லாம் நாங்கள் சத்தியம் செய்ய மாட்டோம்! முபாஹலாவிற்கு வர மாட்டோம், அதில் எங்களுக்கு உண்டபாடு இல்லை அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவும் மாட்டோம் (!) என்று உங்கள் இன்னொரு தொப்புள் கொடி உறவு தொண்டியப்பா சொல்லுகிறாரே!
அப்படி என்றால்! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்! காட்டித் தந்த வழியில் சாட்சி இல்லாத விசயத்திற்கு அல்லாஹ் வின் மீது ஆணையிட்டு முபாஹலா தான் ஒரே தீர்வு என்பதை நமக்கு காட்டித் தந்து, கட்டளை பிறப்பித்தார்களே! அதை இவர்கள் மறுக்கிறார்களா? அப்படி மறுத்தால் முஸ்லிமாக இருக்க முடியுமா?

இதை எல்லாம் நீங்கள் தட்டிக் கேட்கக் கூடாதா? உங்கள் பத்திரிக்கையில் போட முடியாதா? எது உங்களை தடுத்து நிறுத்துகிறது? சுய கெவ்ரவமா? உறவின் மானமா? நாட்பட்ட நட்பின் அடையாளமா? அல்லது நன்றி விசுவாசமா? எந்த விசுவாசம் நீதியையும், நியாயத்தையும் தட்டிக் கேட்க தடை போடுகிறது? அப்படி போடும் தடைக் கற்க்களுக்குள், தடம் புரண்டு தவ்கீத் நடத்த வேண்டுமா? அது சரியான தவ்கீதாக இருக்குமா?

நீங்களும் கேட்க மாட்டீர்கள், நாங்களும் கேட்கக் கூடாது, கேட்டால் எங்கள் மீது திருட்டுப் பட்டம் கட்டுவது, கடன்காரன் என்று சொல்லுவது, இப்படி அநாகரிகமான வார்த்தைப் பேசி நியாயத்தை, சத்தியத்தை மறைப்பது இதெல்லாம் தவ்கீத் வாதியின் செயலாக இருக்குமா?.
அப்படி என்றால் நாங்கள் கொடுத்த நிதி எல்லாம் எங்களின் தலை விதி என்று போய்விட வேண்டுமா? நான் செய்த ஒரே தவறு! ரசீது வாங்க வில்லை. அப்படி ரசீது வாங்க வில்லை என்ற ஒரே காரணத்திற்காக! நான் தந்த பள்ளி நிதியை வாங்கவே இல்லை என்று மறுப்பதா? எந்த அடிப்படையில் சொல்லுகிறீர்கள்?
உங்கள் தொண்டியப்பாவே! பலமுறை நானே ரசீது வாங்கவில்லை! அதற்காக ஒவ்வொரு வருக்கும் கணக்கு சொல்லமுடியுமா? நீங்கள் அல்லாஹ்வுக்காக கொடுத்து விட்டீர்கள் அந்த நன்மை உங்களுக்கு கிடைத்து விடும், அதோடு போங்கள்! என்று பொறுப் பற்ற பதில் சொல்லுகிறார்! அன்று பொருளாளராக இருந்த தொண்டியப்பா.

பொறுப்பற்ற பதில் சொல்லியதும், பணம் வாங்கியது உண்மை என்ற விபரமும் என்னிடம் ஆதாரமாக உள்ளது. இத்தனைக்கும் என்னிடம் ஆதாரமாக இருக்கிறதே! அதற்க்கு உங்கள் இந்திய தவ்கீத் ஜமாஅத் என்ன பதில் சொல்லப் போகிறது?.

இதேபோல் எத்தனை பேருக்கு பதில் சொல்லி இருப்பீர்கள்? உங்கள் ஊர் காரர் என்ற ஒரே உரிமைக்காக சத்தியத்தை மறைப்பதா? அவருக்கு துணை போவதா? அனைவரும் அல்லாஹ்விடம் மாட்டிக் கொள்வீர்களே!

அல்லாஹ்வின் பள்ளி கட்ட கொடுத்த நிதிப் பணம் உங்களுக்கெல்லாம் சின்ன விசயமா? அல்லது முபாஹலா என்ற ஒன்று மார்க்கத்தில் இல்லாத விசயமா? நபி வழி கொள்கை மறுப்புடன் தொண்டியப்பா சொன்னாரே! இந்த ஒரே வார்த்தை போதுமே! உங்கள் ஜமாஅத் கொள்கை லட்சணம். நீங்கள் எல்லாம் ஊருக்கு நல்லது செய்ய போகிறீர்கள்? ஏகத்துவத்தை எடுத்து சொல்லப் போகிறீர்கள்? இதற்க்கெல்லாம் அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும் என்ற பயம் உங்களுக்கு இல்லையா? அல்லாஹ்வின் மார்க்கத்தை போதிக்கிறீர்களா? அல்லது தவ்கீத் என்ற போர்வையில் கட்சி நடத்து கிறீர்களா?

ஜைனுல் ஆபிதீன் அவரோடு சேர்ந்திருந்த காலம் குரான் ஹதீஸ் அடிப்படையில் ஆற்றிய உரைகளை ஏற்று இருந்தீர்கள். எங்களை எல்லாம் நல் வழிக்கு திருத்தினீர்கள், நாணய மற்றுப் போயிருந்த எங்களின் செயல்களை அல்லாஹ்வும், ரசூலும் சொன்ன நல் வழியில் திருப்புனீர்கள். அல்ஹம்து லில்லாஹ்! அதை நினைத்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.
அதே சமயம், நீங்கள் வழி தவறுகிறீர்கள்! இதைத் தான் எங்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அன்று சொல்லிய மார்க்கம் சரி என்று பட்டது, இன்று சொல்லிய மார்க்கம்! தவறா? நீங்கள் சரியான முறையில், சத்தியமான வழியில் இந்திய தவ்கீத் ஜமாஅத்தை மக்களுக்கு எடுத்து நடத்து பவர்களாக இருந்தால்! அன்று ஒன்றாக இருக்கும் போது நீங்கள் ஏற்றுக் கொண்டதர்க்கும், இன்று பிரிந்த பின்னால் குறை கண்டு சொன்னதற்கும் வித்தியாசம் இருக்குமே யானால்! நேரடி விவாதத்திற்கு தயாரா? அப்படி தவறு இருப்பதை கண்டு சொன்னீர்களே யானால்! திருத்திக் கொள்கிறோம், உங்களின் நியாய மான வாதத்தை ஏற்கிறோம்.

அதை விட்டு, விட்டு ஆய்வு என்றால் என்ன என்று தெரியாத அரை வெட்காடு களெல்லாம் ஆய்வைப் பற்றி பேசவேண்டாம். அப்படி பேசுவதாக இருந்தால் நன்கு ஆய்வு செய்து விட்டு வாருங்கள் அல்லது உங்களுடையே உள்ள சிறந்த உங்கள் ஆய்வாளர்களை அழைத்து வாருங்கள்.

மேலும், தொண்டி பெரியவர் சம்மந்தமாக பேசி இருக்கிறீர்கள் அதை இங்கே பதிவு செய்து இருக்கிறேன்.

கீழே உள்ள இந்த வார்த்தைகள் உங்கள் வெப் சைட்டில் இருந்து எடுத்தவை :
“தன் எழுத்துக்கள், பேச்சுகள் மூலம் இறைவேதத்தில் விளையாடுபவரே! (முஜிபுர் ரஹ்மான் உமரி, அப்துர் ரஹ்மான் மன்பஈ சுட்டிக்காட்டிக் கொண்டு இருக்கிறார்கள்) ஸஹாபாக்களின் கண்ணியத்தில் விளையாடுபவரே! நான் எழுதியதை திரிப்பதற்கு அவருக்கு சொல்லி தர வேண்டிய அவசியமே இல்லை”.

பொய்யர் அவரா? நானா? என்பதை தொண்டி மக்களுக்கு மட்டும் அல்ல, தமிழக முஸ்லிம்கள் அனைவருக்கும் தெரிந்து விட்டது. இன்ஷா அல்லாஹ் அவரை தூரத்தில் இருந்து தொலைக்காட்சியில் காணும் ஒரு சில அப்பாவி முஸ்லிம்களும் மிக விரைவில் புரிந்து கொள்வார்கள்”

என்று முஜிபுர் ரஹ்மான் உமரி, அப்துர் ரஹ்மான் மன்பஈ இவர்களை பிராக்கெட் அடைப்புக்குள் இவர்கள் சொல்லுவது போல் எழுதி இருக்கிறீர்கள். பி.ஜே. இறைவேதத்தில் விளையாடுபவர் என்றும், சஹாபாக்களின் கண்ணியத்தில் விளையாடுபவர் என்றும் எழுதி இறுக்கிறீர்கள். அதிலும் கூட “ஒரு சில அப்பாவி முஸ்லிம்களும் மிக விரைவில் புரிந்து கொள்வார்கள்” என்று சொல்லு கிறீர்கள்.

வாஸ்தவம் தான், நாங்கள் தான் தூரத்தில் வைத்துப் பார்த்தோம்! ஆனால் நீங்கள் அருகில் தானே இருந்தீர்கள்! ஒன்று, இரண்டு வருடமா இருந்தீர்கள்? பல வருடம் இருந்தீர்கள் என்பதை ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும். அப்பொழுது உங்கள் கண்களுக்கு தெரியாத இந்த தொண்டிப் பெரியவர்! இப்பொழுது உங்களுக்கு சத்ருவாக தெரிவதேன்? இதற்க்கு நீங்கள் காரணம் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. அது என் போன்ற மக்களுக்கு நன்கு தெரியும்.
மேலும், சஹா பாக்களின் கண்ணியத்தை விளையாடி இருக்கிறார், என்றும் இறைவேதத்தில் விளையாடி இருக்கிறார் என்றும்! அவர் சொல்லுகிறார், இவர் சொல்லுகிறார் என்று சொல்லுகிறீர்கள். ஏன் தைரியமாக நீங்களே சொல்ல வேண்டியதது தானே! பி.ஜே சொன்னது அனைத்தும் தவறு என்று!

அப்படி தவறு என்று இன்று தான் தெரிந்ததா? அல்லது இப்பொழுது தான் ஞானம் வந்ததா? இதற்க்கு முன்னாள் தெரியாதா? அல்லது சம்பாத்தியம் போய்விடும் என்ற காரணத்திற்காக உள்ளுக்குள் மறைத்தீர்களா? அப்படி என்றால்! இவரை வைத்து நீங்கள் (பாக்கர், தொண்டியப்பா, கீழை ஜமீல் என்ற மும் மூர்த்திகள்) எல்லோரும் சேர்ந்து ஒரு வியாபார விளையாட்டு விளையாடி இருக்கிறீர்கள்.
இறை வேத போதனைகள் எல்லாம்! உங்களின் திரை மறை விளையாட்டிற்கு பயன் பட்டு விட்டது. உங்களுக்குள் இருக்கும் காழ்ப் புணர்ச்சியினால் சத்தியத்தை மறைக்காதீர்கள். அது உங்களுக்கும் நல்லதல்ல! தவ்கீத்திற்கும் நல்லதல்ல!

அல்லாஹ் கூறுகிறான்!

நம்பிக்கை கொண்டோரே! அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கும் இத்தூதருக்கும் மோசடி செய்யாதீர்கள்! உங்களிடம் நம்பி ஒப்படைக் கப்பட்ட வற்றிலும் மோசடி செய்யாதீர்கள். அல் குரான் 8:27

இந்த வசனம் மேலே உள்ள சொன்ன வற்றிக்கும் பொருந்தும், கீழே உள்ள பாக்கர் அவர்களுக்கும் பொருந்தும்.

இந்த இறை வசனத்தை தாங்களும் தெரிந்து, உங்கள் பாக்கருக்கும் படித்துக் காட்டுங்கள், அல்லது மெயில் அனுப்புங்கள்.


S.L.நசீருதீன்


இது சகோதரர் பாக்கர் அவர்களுக்கு

கீழை அஞ்சல் ஜெமீல் அவர்களே! நீங்கள் நடுநிலை யாளராக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து இதில் நியாயத்தை கடை பிடியுங்கள். கீழை அஞ்சலிலும் போடுங்கள். உங்களின் நடு நிலையை ஏற்றுக் கொள்கிறேன்.

அஸ்ஸலாமு அழைக்கும். புதிய வரவான இந்திய தவ்கீத் ஜமாஅத் தலைவர் S.M.பாக்கர் அவர்களுக்கு, கீழக்கரை நசீருதீன் எழுதுவது. தாங்கள் ஒன்றாக இருந்து பின்பு தனியாக ஜமாஅத் ஆரம்பித்து அதன் மூலம் தாங்கள் பிரபலம் அடைய நினைத்தும் பல விதங்களில் அறிக்கைகள் இட்டும், பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களை தொண்டி பெரியவர் என்றும் அடைமொழி இட்டு அழைப்பதும் இதெல்லாம் நாகரிகம் அல்ல என்பது என்கருத்து.

சரி உங்களுக்குள் நடக்கும் பனிப்போருக்குள் நான் தலையிட வரவில்லை. ஆனால் என் சம்மந்தப் பட்ட ஒரு விஷயம் இன்னும் கிடப்பில் கிடந்து கொண்டு இருக்கிறதே! அதற்கு இன்னும் பதிலும் வரவில்லை, நியாயப் படுத்த முனையவும் இல்லை. நான் பள்ளிவாசல் நிதிக்காக கொடுத்த ஐம்பதாயிரம் என்ன வாயிற்று? என்று ஒரு வருடமாக கேள்வி கேட்டு, வெறும் கேள்வியாகவே இருந்து கொண்டு இருக்கிறதே தவிர, அதற்கு தக்க ஒரு பதிலும் இல்லை.

பணம் வாங்கவில்லை என்று தாங்கள் இந்த நிமிஷம் வரையும் நியாப்படுத்த முன்வரவில்லை. ஆனால் மற்றவர்கள் விசயத்தில், விவகாரங்களில் தலையிட்டு பைசல் பண்ணுகிறீர்கள். அந்த அக்கறை எடுத்தால் மட்டும் போதாது, தங்களின் சொந்த விவகாரங்களிலும் அக்கறை எடுத்து தவறை துடைக்க வேண்டும். அல்லாஹ்வின் பள்ளி நிதி ஒரு கையாடலே! அதற்குண்டான ஆதாரம் என்னிடம் இருக்கிறது.

நான் பணம் தந்த தற்க்குண்டான ரசீது பெறவில்லை என்பதற்காக நான் பணம் தரவில்லை என்று ஆகாது. உங்கள் தொண்டி பெரியவரின் ஊரை பெயராகாக் கொண்ட உங்கள் உறவின் தொண்டர் தொண்டியப்பா என்பவர், தான் கூட தமிழ்நாடு தவ்கீத் ஜமாத்தில் இருக்கும் போது ரசீது இல்லாமல் பணம் வாங்கி இருப்பதாக என்னிடம் தொலைபேசியில் உரையாடிய வார்த்தை என்னிடம் வாக்கு மூலமாக பத்திரமாக ரேகார்டிங்கில் (PHONE RECORDING) இருக்கிறது, அது மட்டும்மல்ல நபி அவர்கள் கற்றுத்தந்த முபாஹலா என்ற சத்திய பிரமாணத்தைக் கூட ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று மார்க்க விசயத்தில் தெனாவெட்டாக பேசியதும் ரேகார்டிங்காக இருக்கிறது.

அது மட்டும் அல்ல கீழக்கரையை சார்ந்த உங்கள் எர்ணாகுளம் பசீர் என்பவர் நீங்கள் என்னிடம் பணம் வங்கியதை ஒத்துக் கொண்டதாக அவருடைய வாக்கு மூலமும் என்னிடம் ரேகார்டிங்காக (PHONE RECORDING) இருக்கிறது.
இவ்வளவு ஆதாரமும் நான் வைத்துக் கொண்டு இருக்கிறேன், நீங்கள் எல்லாம் மார்க்கம் பேசுகிறீர்கள். தன் தவறை ஒத்துக் கொள்பவன் தான் மனிதன், அதற்காக ஒரு தவறை மறைக்க என் மீதே பலி போடுகிறீர்களே! இது நியாயமா?

இப்பொழுதும் நான் அல்லாஹ்வின் மீது ஆணையாக சொல்லுகிறேன், நான் உங்களிடம் பள்ளிக்காக பணம் தந்தது உண்மை. நான் அல்லாஹ்விடம் உங்களை பிடித்துக் கொடுக்கமாட்டேன். ஆனால் அல்லா பிடித்தால்! அதற்கு நான் பொறுப்பல்ல. உங்களை அல்லாஹ்விடம் பிடித்து கொடுக்க எனக்கு மனம் வரவில்லை, ஏனென்றால் தவ்கீதிர்காக! அன்று, நீங்களும் கடுமையாக உழைத்து இருக்கிறீர்கள். அதன் அடிப்படையில் நான் இரக்கப் படலாம். இருந்தாலும் தாங்களும் உணர்ந்து அல்லாஹ்விடம் மன்னிப்பு கேளுங்கள்.


S.L.நசீருதீன்






அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அல்லாஹ்வை மட்டும் வணங்கும் பள்ளியில் ஏன் இந்த வாசகம்?

இறை இல்லம் என்பது அல்லாஹ்வை வணங்குபவர்கள் மட்டுமே செல்லக் கூடிய வைகளாக இருக்கும் போது! குறுப்பிட்ட இவர்கள் தான் தொழவேண்டும், மற்றவர்கள் தொழவரக் கூடாது! என்று எழுதி வைத்திருப்பது! சரியா?

உதாரணத்திற்கு! ஒரு மாற்று மத சகோதரனுக்கு பள்ளியில் வைத்து அவர்கள் மார்க்க உபதேசம் செய்வதாக வைத்துக் கொள்வோம்! அந்த சகோதரன், இந்த வாசகத்தைப் பார்த்து விட்டு உங்களிடம்! "இப்படி தொப்பி அணியாதவர் களையும், விரல் ஆட்டு பவர்களையும், நான்கு மதஹப்களையும் பின் பற்றாதவர்கள் தொழவரக் கூடாது என்று எழுதி வைத்து இருக்கிறீர்களே! இது சரியா? நீங்கள் எழுதி வைத்து இருக்கும் இவர்கள் யார்? இவர்கள் முஸ்லிம்கள் இல்லையா? என்று கேட்டால்! அவர்களின் பதில் என்ன?

அவர்கள் எல்லாம் பெரிய ஆலிம்கள் தானே? பெரிய உலமாக்கள் தானே? அவர்களுக்கு ஊதியம் தருகிறார்கள் என்பதற்காக மார்க்கத்தை இப்படி வில்லாக வலைப்பதா? அல்லது இல்லாததை சொல்லுவதா? அல்லது அல்லாஹ் சொன்ன மார்க்கத்தை அடியோடு மறுப்பதா? அல்லது எல்லோரும் சேர்ந்து மறைப்பதா? இதில் யார் குற்றம் செய்கிறார்கள்?. இதற்க்கு அல்லாஹ்விடம் அவர்கள் பதில் சொல்லியாக வேண்டுமே! என்ற குற்ற உணர்வு என்றாவது அவர்கள் உள்ளத்தில் உதித்ததுண்டா?.

மேலும், அவர்கள் கைகளிலும் தான் குரான், ஹதீஸ் இருக்கிறதே! என்றாவது அதை புரட்டி பார்த்ததுண்டா? அவர்கள் இப்படி எழுதி வைப்பது இந்திய சட்டப் படியும் குற்றம், இறைவனின் சன்னதியிலும் குற்றம்.

இது மட்டுமா? தவறு செய்கிறார்கள்! தவறு செய்ய வேண்டும் என்றே அவர்கள் ஜமாத்துக்கள் கங்கணம் கட்டி வேலை செய்கிகிறார்கள்.

காலையிலேயே பள்ளியை நீங்கள் பூட்டி வைத்துக் கொள்கிறார்கள், வெளியூரிலிருந்து இருந்து வரும் ஒரு முஸ்லிம் தொழ நேரம் வந்தால்! பள்ளி பூட்டி இருக்கிறது. அந்த சகோதரன் எங்கு ஒழு எடுப்பான், எங்கு தொழுவான்? இதை எல்லாம் யோசிக்க மாட்டார்களா? இப்படித்தான் அல்லாஹ் நமக்கு கட்டளை பிறப்பித்தானா? அல்லது நமது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு இந்த போதனை யைத்தான் போதித்தார்களா? .

அப்படிப் பார்த்தால்! அல்லாஹ் தான் இது போன்ற பள்ளிகளில் தொழக் கூடாது கட்டளை பிறப்பித்துள்ளான். அப்படி தொழுதால்! நமக்குத் தான் குற்றம். நாங்கள் தான் இதை புறக்கணிக்க வேண்டும். மாறாக அவர்கள் புறக்கணிக்கிறார்கள்! வேடிக்கையாக இருக்கிறது.

உங்களின் இருண்ட போதனையை வெளிச்சத்திற்கு கொண்டு வராதீர்கள். அது உங்களுக்கு நல்லதல்ல.

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்!

"தீங்கிழைப் பதர்க்காகவும், (ஏக இறைவனை) மறுப்பதர்க்காகவும், நம்பிக்கை கொண்டோரிடையே பிரிவை ஏற்படுத்திடவும், இதற்க்கு முன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிட்டோருக்குப் புகலிட மாகவும் ஒரு பள்ளிவாசலை ஏற்ப்படுத்திக் கொண்டோர் "நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனையும் நாடவில்லை" என்று சத்தியம் செய்கின்றனர். "அவர்கள் பொய்யர்களே" என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான்". மறுப்பதர்க் காகவும், நம்பிக்கை கொண்டோரிடையே பிரிவை ஏற்படுத்திடவும், இதற்க்கு முன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிட்டோருக்குப் புகலிட மாகவும் ஒரு பள்ளிவாசலை ஏற்ப்படுத்திக் கொண்டோர் "நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனையும் நாடவில்லை" என்று சத்தியம் செய்கின்றனர். "அவர்கள் பொய்யர்களே" என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான்". அல் குரான் 9:107

மேலும் அல்லாஹ் கூறுகிறான் :

(முஹம்மதே!) அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்! ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்கு தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான். அல் குரான் 9:108

இது அல்லாஹ்வின் வசனம் என்பதை மறுப்பீர்களா? மறுக்கவில்லை, அந்த வசனம் உண்மை தான் என்றால்! நீங்களும் அதில் தொழக் கூடாது.


S.L.நசீருதீன்

Tuesday, January 5, 2010



அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

புதுவருட கொண்டாட்டம் ஒரு முட்டாள் தனமான மூட நம்பிக்கையே!

புத்தாண்டு கொண்டாட்டமும் பெற்றோர்களின் திண்டாட்டமும்.

இது இஸ்லாமியர்களுக்கு மட்டும் அல்ல! இருப்பினும்! அணைத்து சமுதாய மக்களும் கவனத்தில் கொள்ளவேண்டும்! அது மட்டும் அல்லாது! இந்த புத்தாண்டுக் கொண்டாட்டம் நம் இஸ்லாமியர் களிடமும் அதிக மாக கவரப்பட்டுக் கொண்டதுவும் ஒரு காரணம்.


அல்லாஹ் தன் திரு மறையில் கூறுகிறான்:

“அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள்! உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மை செய் வோரை அல்லாஹ் விரும்புகிறான்”.
அல்குர்ஆன் 2:195

இதெல்லாம் இன்று! பக்தி மறந்து, பாதை தவறி பலவழியில் செல்லும் ஆண்களும், பெண்களும் அறிந்து கொள்ளவேண்டியது. அதை கீழே பார்ப்போம்.

புது வருடம் பிறந்து விட்டது, என்று இளையவர்கள் முதல் முதியவர்கள் வரைக்கும் இந்த புத்தாண்டுக் கொண்டாட்டம் எனும் ஒழுக்க கேட்டு பைத்தியம், நமது மனித குலத்தை பெரிதும் பாதித்து கொண்டு இருக்கிறது என்றால்! அது மிகையாகாது!

இந்த புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் எல்லா சமுதாய மக்களும் பங்கெடுப்பது தான் ஆச்சர்யமாக இருக்கிறது. அனைவரின் வாயிலிலும், தொலை பேசியிலும், அலைபேசியிலும், எஸ்.எம்.எஸ். சிலும் இன்னும் நேரிலும் சொல்லக் கூடிய ஒரே வார்த்தை! “புத்தாண்டு வாழ்த்துக்கள் HAPPY NEW YEAR” என்ற முழக்கம்.

இதை சொல்லுவதினால் என்ன பயன்? இதில் ஏதாவது அர்த்தங்கள் அடங்கி உள்ளதா? அல்லது இந்த வார்த்தையினால் ஏதாவது நன்மை பயக்குமா? அல்லது புத்தாண்டு பிறந்து விட்டால் உலகில் ஏதாவது மாற்றங்கள் நிகழுமா? அல்லது ஒழுக்கம் சீர்தூக்குமா? அல்லது இளைய சமுதாய சிந்தனை புரட்சி ஏற்படுமா? ஒன்றுமே ஏற்ப்படப் போவதில்லை இந்த புத்தாண்டினால்! இதை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும்.

மேலும், எப்பொழுதும் போல் ஆண்டு வரும், ஆண்டு போதும் இது இயற்க்கை. இதில் என்ன விந்தையான பிறப்பு இருக்கிறது இந்த புத்தாண்டு கொண்டாடு வதற்கு? ஆண்டு தொடங்கினால்! பிறப்பு என்று கொண்டாடுகிறீர்கள், ஒரே நொடியில் ஆண்டு தொடங்குவதினால் “புத்தாண்டு பிறந்து விட்டது” என்றால்! அதே ஒரு நொடி முன்பு சென்ற ஆண்டு இறந்து விடுகின்றதே! அதற்க்கு என்ன செய்வீர்கள்?

அதிகமான சமுதாயங்கள் ஆண்டு பிறப்புக்கு கொண்டாடும் போது, ஆண்டு இறப்புக்கும் துக்கம் அனுஷ்டிக்க வேண்டியது தானே! சென்ற ஆண்டு தான் இறந்து விடுகின்றதே! அதற்க்கு துக்கம் அனுஷ்டிக்க கூடாதா? துக்கம் அனுஷ்டிப்பது உங்கள் கலாச் சாரத்தில் இல்லாததுவா? சிந்திக்க வேண்டாமா? இதற்க்கு மட்டும் நமது அறிவு ஏற்க்க மறுக்கிறது! ஆனால் புது வருடத்திற்கு மட்டும் பிறந்தநாள் கொண்டாட அறிவு ஏற்கிறது இது நியாயமா?

ஆண்டு ஓடினால்! வயது மூப்பு தான் வரும். இது நியதி. பின்பு ஏன் இந்த கொண்டாட்டம்? ஏன் இந்த அந்நிய நாட்டு கலாச்சாரம்? ஏன் இந்த ஒழுக்க சீர்கேடு?, ஏன் இந்த மானக் கேடான பரிவர்த்தனை? இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தினால் எவ்வளவு கேடு இருக்கிறதென்று தெரியுமா? இதனால்! நாம் அறிவை தொலைப்பது மட்டு மல்லாது! நம் கலாச்சார பண்புகளை உதாசீனப் படுத்தி எல்லை மீறி நடக்க வேண்டியதாகிறது.

ஆம், புத்தாண்டுக் கொண்டாட்டம் என்ற பேரில் நடக்கும் கூத்துக்கள் படித்தவர்கள் மட்டுமின்றி படிக்காதவர்கள் மத்தியிலும் புழுதி வாரி தூற்றுகிறது. இரவு விடுதியில் (STAR HOTELS) கேபரே டான்ஸ் என்னும் பிறநாட்டு கலாச்சார நடனம் ஆடி! ஆண்களும், பெண்களும் மது அருந்துவதொடு, கையைப் பிடித்து நடனம் என்று இருவரும் ஆரம்பித்து, பின்பு மதுவின் மயக்கம் தலைக் கேரியதும், தலையை விரித்துப் போட்டு ஒருவருக் கொருவர் கட்டி அணைத்து முத்தங்கள் கொடுப்பது, ஆடைகளை நழுவ விடுவது, ஆபாசமான வார்த்தைகள் பரிமாற்றப் படுவது, ஆரவாரத் தோடு கூச்சலிடுவது, சப்தமாக இசை கேட்பது, இது போன்ற செயல்கள் நடப்பது இந்த மாதிரி கொண்டாட்டம் என்ற பெயரில் நடக்கும் கேளிக்கை என்னும் கூத்தினால் தான்.

அத்தோடு இந்த கொண்டாட்டம் முற்றுப் பெறுமா? பெறாது. தொடர்ந்து அதிகாலை வைகறை பொழுது வரைக்கும் இந்த ஆபாச அணி வகுப்புகள் அரங்கேறிக் கொண்டே இருக்கும். மங்கையின் நினைவிலும், மதுவின் மயக்கத்திலும் மதி மயங்கி, வீடு வந்து சேர்வதற்குள் மரணம் கூட சம்பவிக்க நேரிடுகிறது. காரணம், அந்த போதையில் வாகனம் ஒட்டிக் கொண்டு தாறு மாறாக வருவதினாலும், அல்லது அருகில் பெண்ணோ அல்லது ஆணோ துணையோடு வரும் சமயம் சில்மிஷத்தில் ஈடுபடுவதினாலும் இந்த மாதிரியான அசம்பா விதங்கள் நடக்கின்றன, நடந்து கொண்டும் இருக்கிகின்றன! அதை நாம் கண் கூடாக கண்டும் இருக்கிறோம், மற்றும் தினசரி பத்திரிக்கையிலும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அத்தோடு நின்று விடுமா? இந்த புத்தாண்டு கொண்டாட்டம்! நள்ளிரவு பூஜை என்று தொடங்கி, குடும்ப பெண்களின் கற்புக்கள் சூறையாடப் படுகின்றன. வினோத விபச்சாரங்கள் வீதியில் உலா வருகின்றன, சட்டம் ஒழுங்குகள் சீர் கெடுகின்றன, பொருளாதாரம் வீண் விரயம் ஆகின்றன, இதை எல்லாம் அரசாங்கமும் வேடிக்கை பார்ப்பதுதான் விந்தையாக இருக்கின்றது. அது மட்டுமா! இதை அங்கீகரிப்பது போல் அவர்களும் தன் பங்கிற்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறி மகிழ்கின்றனர். படித்தவர்களுக் கிடையில் இப்படியும் பரிவர்த்தனம் நடக்கிறதே என்று நினைக்கும் போது! வேதனையாக இருக்கின்றது.

இவர்களின் பெற்றோர்கள் ஏதோ பிள்ளைகள் புத்தாண்டு கொண்டாட்டம் தானே! நண்பர்கலோடு சென்று வந்து விடுவார்கள் என்று நினைப்பவர்களும் உண்டு, இன்னும் சில பெற்றோர்கள்! பிள்ளைகளை கண்டு கொள்ளாமல், அவர்களும் தன் பங்கிற்கு கொண்டாட போய்விடுகின்றனர். இது தேவையா? தானும் கெட்டு பிள்ளைகளையும் கெடுக்கும் இந்த கேடுகெட்ட புத்தாண்டு கொண்டாட்டம். தேவையா? என்று சிந்தித்து பார்க்க வேண்டும்.

நாம் இருபத்தி ஓராம் (THE TWENTY ONE OF CENTURY) நூற்றாண்டில் இருக்கிறோம். நமது சிந்தனைகளை சீரான வழியிலும், கல்வி மேம்பாட்டிலும், மனிதகுல சமுதாய ஒற்றுமையிலும், வறுமையை போக்க வழி தேடுவதிலும் நலமான வாழ்வு வாழ்வதிலும் நம் சமுதாயம் செலவிட்டால்! இன்னும் ஒரு இரட்டிப்பான இந்தியாவை உருவாக்க வழி வகுக்கும்.

அப்துல் கலாம் சொன்னது போல் இளைஞர்கள் கனவு கண்டால் மட்டும் போதாது! இவர் காண சொன்ன கனவுகள் நிழலான வாழ்க்கை யாகிவிடும். சிந்திக்கும் ஆற்றல் உள்ளத்தில் ஒரு பிரளயத்தை ஏற்ப்படுத்தி நிஜவாழ்க்கைக்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டும். அப்படி சிந்தித்தோமேயானால்! புத்தாண்டாவது, புண்ணாக்காவது என்று எண்ணி! வீணாகிக் கொண்டிருக்கும் மணித் துளிகளை, எண்ணினால்! அறிவுத் துளிகள் உயிர்த்துளி பெற்று விடும்.

அதே சமயம் இஸ்லாத்தில் இந்த மாதிரியான கேலிக் கூத்துக்களுக்கு இடமே இல்லை. மனித குலம் எவ்வளவு நலம் வாழ வேண்டுமோ, எவ்வளவு நன்மை பயக்கும் விதத்தில் பரிவு காட்ட வேண்டுமோ, அவ்வளவுக்கு இஸ்லாம் வழி வகை செய்து கொடுத்து இருக்கிறது. இதை மனிதன் சிந்திக்க தவறுகிறான்.

மேலும் இனிவரும் காலத்திலேயாவது மனித அறிவை சரியான முறையில் பயன் படுத்தி, இந்த முட்டாள் தானமான கொண்டாட்டத் தையெல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு, முழுமையான சிந்தனையோடு, இறைபக்தியை அதிகரிக்கச்செய்து அதன் பால்! நம் ஏகத்துவக் கொள்கைகளை இறைவன் நம்மை விட்டு விடாமல், நமக்கு நாமும் ஒரு கடிவாளத்தை போட்டு பாதுகாத்து புதிதாக நாம் நம் வாழ்வை மாற்றி அமைத்துக் கொள்வோம். இன்ஷா அல்லாஹ்.

அல்லாஹ் கூறுகிறான்:

“நபியே இறைநம்பிக்கை கொண்ட ஆண்களிடம் தங்கள் பார்வைகளை தாழ்த்தி கொள்ளுமாறும் தங்கள் வெட்கத்தலங்களை பேணிக் கொள்ளுமாரும் கூறுவீர்களாக"
அல் குரான் 24 :30

"தம்முடைய பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுமாறும் தங்களுடைய வெட்கஸ்தலங்களை பாது காத்துக் கொள்ளு மாறும் இறை நம்பிக்கை கொண்ட ஆண்களிடம் நபியே நீங்கள் கூறுவீராக! அல்லாஹ்வோ அவர்கள் செய்வதை எல்லாம் நன்கு அறிபவனாகவே உள்ளான்" அல் குரான் 24:30

அதே வசனத்தில் அல்லாஹ் பெண்களுக்கும் எச்சரிக்கை விடுகிறான்!

"தம்முடைய பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளு மாறும் தம்ம்முடைய வெட்கஸ் தலங்களை பாது காத்துக் கொள்ளு மாறும் தம்முடைய அழகில் இயல்பான வெளித் தெரிபவை அன்றி மற்ற அழகாய் வெளிப்படுத் தாமல் இருக்குமாறும், இறை நம்பிக்கை கொண்ட பெண்களுக்கு நபியே நீங்கள் கூறுவீராக! அவர்கள் தங்களுடைய முந்தானையால் தமது நெஞ்சை மறைத்துக் கொள்ளட்டும்" அல் குரான் 24:31


S.L.நசீருதீன்

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

"எங்கள் இறைவா எங்களுக்கு பொறுமையை தருவாயாக. எங்களை முஸ்லிம்களாக மரணிக்க செய்வாயாக" அல் குரான் 7:126

"நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு சொர்க்கச் சோலைகள் உள்ளன" என்று நற்ச்செய்தி கூறுவீராக! அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் ஏதாவது கனி அவர்களுக்கு வழங்கப்படும் போதெல்லாம் "இதற்கு முன் இது தானே நமக்கு வழங்கப்பட்டது" எனக் கூறுவார்கள். இதே தோற்றமுடையது தான் (முன்னரும்) கொடுக்கப் பட்டிருந்தது. அங்கே அவர்களுக்குத் தூய்மையான துணைகளும் உள்ளனர். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். அல் குரான் 2:25

Monday, January 4, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

"அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்திப்போரை வணங்குவதை விட்டும் நான் தடுக்கப் பட்டுள்ளேன்" என்று கூறுவீராக! உங்கள் மனோ இச்சைகளை பின்பற்ற மாட்டேன் (பின்பற்றினால்) வழி தவறி விடுவேன். நேர் வழி பெற்றவனாக ஆக மாட்டேன்" என்றும் கூறுவீராக! அல் குரான் 6:56

Sunday, January 3, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)

தாராளமாக (நல் வழியில்) செல விடும் நம்பிக்கை கொண்டோரையும், தமது உழைப்பைத் தவிர வேறு எதையும் பெற்றுக் கொள்லாத வர்களையும் அவர்கள் குறை கூறி கேலி செய்கின்றனர். அல்லாஹ் அவர்களை கேலி செய்கிறான். அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு. அல் குரான் 9:79

Saturday, January 2, 2010



அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

இஸ்லாமியர்களுக்கு வெற்றி எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே :

தமிழ் நாடு தவ்கீத் ஜமாஅத் மதுரை ஆதீனம் வீடு முற்றுகை என்றதும் பணிந்தார் மதுரை ஆதீனம்.

கொலைக்குற்றம் சுமத்தப் பட்ட சங்கராச் சாரியார் பிறந்த நாளில் நமது பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இந்த சங்கராச் சாரியாருடன் ஒப்பிட்டு பேசியதை தமிழ் நாடு தவ்கீத் ஜமாஅத் மிகக் கடுமையாக ஆதாரத்துடன் கண்டித் ததினால்! தன் தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கடிதம் கொடுத்தார். அல்லாஹு அக்பர்.


S.L.நசீருதீன்



அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பொய்யன் டி.ஜே. (INTJ) வினர் செய்ததது என்ன?

மதுரை ஆதீனத்திற்கு வாழ் பிடித்து என்ன பயன்?

"சமுதாய மக்கள் ரிப்போர்ட்" வார பத்திரிக்கையின் தலையங்கம்.

"நான் அப்படிப் பேசவில்லை" "மறுக்கும் மதுரை ஆதீனம்".

மதுரை ஆதீனத்தை ஏகத்துவ வாதியாக காட்டிய
"சமுதாய மக்கள் ரிப்போர்ட்" சென்டர் பாக்ஸ் மெசேஜில் (CENTRE BOX MESSAGE) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இணையா? யாரையாவது கூற முடியுமா? என்று மதுரை ஆதீனம் உளறிய வார்த்தைகளை இந்த பொய்யன் டி.ஜே.வை துதிபாடும் “சமுதாய மக்கள் ரிபோர்ட் பத்திரிக்கை” இபொழுது ஆதீனத்திற்கு துதிபாடி இருக்கிறது. அதை இங்கே நாம் கொஞ்சம் காண்போம்.

மதுரை ஆதீனத்தை ஏகத்துவ சிந்தனை வாதியாக காட்டி பத்திரிக்கை நடத்தும், மற்றும் அதன் ஆசிரியருக்கு ஏகத்துவம் என்றால் என்னவென்று தெரியாதா? அல்லது தெரிந்தும் மறைக்கிறார்களா?

"இந்திய தவ்கீத் ஜமாஅத்" தலைவர், மற்றும் நிர்வாகிகள் மதுரை ஆதீனத்தை விமான நிலைய வாசலிலேயே வைத்து பேட்டி கண்டதாம். பேட்டி கண்ட லட்ச்சனத்தை பார்ப்போம்.

அவர்கள் பத்திரிக்கையின் செய்தி சுருக்கம் கீழே:

“விமான நிலைய வாயிலில் காத்திருந்த மதுரை ஆதீனத்தை தலைவர் எஸ்.எம்.பாக்கரும், நிர்வாகிகளும் சந்தித்து நக்கீரன் வெளியிட்ட செய்தி சமுதாயத்தில் ஏற்ப்படுத்திய கொந்தளிப்பை பற்றி எடுத்துக் கூறினார். உடனடியாக அதை மறுத்த (?) ஆதீனம், "நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இணையா? யாரையாவது கூற முடியுமா? என்று கூறியதோடு மட்டும் மல்லாமல், கலிமா ஷஹாதத்தில் (அஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரசூலுல்லாஹ்) முஹம்மது நபி அல்லாஹ்வின் அடியாராகவும், தூதராகவும் இருக்கிறார்கள், என்று கூறப் பட்டதை எடுத்துக் கூறி, நான் எப்படி அப்படி சொல்லி இருப்பேன்" என திருப்பிக்கேட்டார்(!).

மேலும் ஒரு இயேசு நாதர், ஒரு நபிகள் நாயகம் (ஸல்), ஒரு திருநாவுக்கரசர் தான் இருக்க முடியுமே (?) தவிர, வேறு நபர்களை அவர்களுக்கு இணையாக சொல்ல முடியாது என்று தெரிவித்தவர்,

அந்த விழாவில் வி.எச்.பி யைச் சார்ந்த வேதாந்தம் பேசியதை மேற்கோல் காட்டி பேசினேன். பத்திரிகை யாளர்கள் அதனைத் தவறாக போட்டு விட்டார்கள். பிளீஸ் லீவ் இட் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும் தொடர்ந்த அவர், தான் ரஷ்யா நாட்டிற்குச் சென்ற பொது நபித்தோழர் அபி வக்காஸ் அவர்களால் கட்டப்பட்ட பள்ளிவாசலில் தன்னை பேசும்மாறு அழைத்ததையும், தான் ஏகத்துவம் (!) பற்றிப் பேசியதையும் நினைவு கூர்ந்தார்.

இப்படி எழுதிவிட்டு அடுத்த பாராவில் இயேசுநாதர் பற்றி பேசியதோடு" தன்னுடைய ஏகத்துவ சிந்தனைகளை பகிர்ந்து கொண்டார்(?). என்று இவர்கள் பேட்டியில் எழுதி இருக்கிறார்கள்.

இதை ஆதீனம் கூறினாரோ! இல்லையோ! இது ஏகத்துவ வார்த்தை என்று இவர்கள் கூறியது தான் வேடிக்கையாக இருக்கிறது. இது தான் ஏகத்துவ சிந்தனை! இதுதான் இவர்களின் தவ்கீத்!.

தவ்கீத் என்ற பெயரில் ஜமாஅத் நடத்தும் லட்சணம் தெரிகிறதா? இதற்க்கு ஒரு தலைவர், அதற்குப் பின்னால் சில தொண்டர்கள் வேடிக்கையாக இருக்கிறது இவர்களின் நடத்தை. இவர்கள் நடத்தும் இந்த பத்திரிக்கை மக்கள் படிப்பதற்கா? அல்லது தொண்டர்கள் படிப்பதற்கா?,

மேலும், நீங்களே பத்திரிக்கை கருத்து சுதந்திரம் என்ற பெயரில் ஏகத்துவத்தை தவறாக புரிந்து வைத்து, அதை விளம்பரமும் படுத்துகிறீர்கள். முதலில் எழுது வதற்க்கு முன் சிந்திக்கப் பாருங்கள். பின்பு சித்தரிக்கப் பாருங்கள். சிந்தனைக்கு வந்த தெல்லாம் சிறந்த மார்க்கமாக நீங்களாகவே எடுத்துக் கொள்ளக் கூடாது. மார்க்க்கத்தை, மார்க்கமாக புரிந்து கொள்ளுங்கள்.

சரி, இதில் விஷயம் என்ன வென்றால்! இவர்கள் ஆதீனம் எதோ! நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி தவறாக பேசவில்லை என்பது போலும், ஆதீனம் பெரிய இஸ்லாமிய பக்தர் போலும் சித்தரித்து எழுதி வைத்து இருக்கிறார்கள். இதுவே உங்களின் விளம்பர விமர்சனத்துக் குண்டான செயலாக தெரிய வில்லையா? அல்லது அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விருப்பமா? அல்லது செய்திகள் இல்லை என்பதற்காக ஆதீனத்தை பின் தொடர்ந்தது விரட்டிச் சென்றீர்களா? இப்படி ஒரு கேடுகெட்ட விளம்பரம் தேவையா?.

மேலும் இந்த வாரம் JAN 2010 நக்கீரன் பத்திரிகையில் மதுரை ஆதீனத்தின் அண்டப் புளுகளைப் பற்றி செய்தியாக வந்திருப்பதோடு! அந்த ஆதீனம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எப்படி கிண்டலடித்தார் என்ற ஆதாரமான குருந்தகட்டையும் தமிழ் நாடு தவ்கீத் ஜமாத்திற்கு மிகப் பெரிய ஆதாரமாக கொடுத்து இருக்கிறார்கள். அல்ஹம்து லில்லாஹ், அல்லாஹ் மிகப் பெரியவன்.

தமிழ் நாடு தவ்கீத் ஜமாஅத் எப்பொழுதும் ஆதாரம் இல்லாமல் களம் இறங்காது என்பதை மக்கள் புரிந்தது கொள்ளவேண்டும். அதைவிட இந்த நவீனமாக விலகி சுய விளம்பரம் தேடும் புதிய ஜமாத்தும் (INTJ) தெரிந்து கொள்ள வேண்டும்.

மேலும், பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் இன்ஷா அல்லாஹ் தமிழ் நாடு தவ்கீத் ஜமாத்தின் அடுத்த நடவடிக்கை ஆதீனம் இல்ல முற்றுகை என்று அறிவித்ததும்! அதோடு இந்த மட ஆதீனம் தன் தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கடிதம் கொடுத்து விட்டார்.

இனி எவனும் நமது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கேலி பேசுவதோ, விமர்சனம் செய்வதாகவோ இருந்தால்! சட்டப் படி நடவடிக்கை எடுப்போம். அது ஆதீனமாக இருந்தாலும் சரி, அல்லது கொலை குற்றம் சுமத்தப் பட்ட சங்கராச் சாரியாராக இருந்தாலும் சரி! இறையாண்மையை பேண, அரசாங்க உதவியுடன் சட்டத்தை முன் நிறுத்தி தண்டிக்கப்பட வைப்போம்.


S.L.நசீருதீன்