Wednesday, January 6, 2010







அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அல்லாஹ்வை மட்டும் வணங்கும் பள்ளியில் ஏன் இந்த வாசகம்?

இறை இல்லம் என்பது அல்லாஹ்வை வணங்குபவர்கள் மட்டுமே செல்லக் கூடிய வைகளாக இருக்கும் போது! குறுப்பிட்ட இவர்கள் தான் தொழவேண்டும், மற்றவர்கள் தொழவரக் கூடாது! என்று எழுதி வைத்திருப்பது! சரியா?

உதாரணத்திற்கு! ஒரு மாற்று மத சகோதரனுக்கு பள்ளியில் வைத்து அவர்கள் மார்க்க உபதேசம் செய்வதாக வைத்துக் கொள்வோம்! அந்த சகோதரன், இந்த வாசகத்தைப் பார்த்து விட்டு உங்களிடம்! "இப்படி தொப்பி அணியாதவர் களையும், விரல் ஆட்டு பவர்களையும், நான்கு மதஹப்களையும் பின் பற்றாதவர்கள் தொழவரக் கூடாது என்று எழுதி வைத்து இருக்கிறீர்களே! இது சரியா? நீங்கள் எழுதி வைத்து இருக்கும் இவர்கள் யார்? இவர்கள் முஸ்லிம்கள் இல்லையா? என்று கேட்டால்! அவர்களின் பதில் என்ன?

அவர்கள் எல்லாம் பெரிய ஆலிம்கள் தானே? பெரிய உலமாக்கள் தானே? அவர்களுக்கு ஊதியம் தருகிறார்கள் என்பதற்காக மார்க்கத்தை இப்படி வில்லாக வலைப்பதா? அல்லது இல்லாததை சொல்லுவதா? அல்லது அல்லாஹ் சொன்ன மார்க்கத்தை அடியோடு மறுப்பதா? அல்லது எல்லோரும் சேர்ந்து மறைப்பதா? இதில் யார் குற்றம் செய்கிறார்கள்?. இதற்க்கு அல்லாஹ்விடம் அவர்கள் பதில் சொல்லியாக வேண்டுமே! என்ற குற்ற உணர்வு என்றாவது அவர்கள் உள்ளத்தில் உதித்ததுண்டா?.

மேலும், அவர்கள் கைகளிலும் தான் குரான், ஹதீஸ் இருக்கிறதே! என்றாவது அதை புரட்டி பார்த்ததுண்டா? அவர்கள் இப்படி எழுதி வைப்பது இந்திய சட்டப் படியும் குற்றம், இறைவனின் சன்னதியிலும் குற்றம்.

இது மட்டுமா? தவறு செய்கிறார்கள்! தவறு செய்ய வேண்டும் என்றே அவர்கள் ஜமாத்துக்கள் கங்கணம் கட்டி வேலை செய்கிகிறார்கள்.

காலையிலேயே பள்ளியை நீங்கள் பூட்டி வைத்துக் கொள்கிறார்கள், வெளியூரிலிருந்து இருந்து வரும் ஒரு முஸ்லிம் தொழ நேரம் வந்தால்! பள்ளி பூட்டி இருக்கிறது. அந்த சகோதரன் எங்கு ஒழு எடுப்பான், எங்கு தொழுவான்? இதை எல்லாம் யோசிக்க மாட்டார்களா? இப்படித்தான் அல்லாஹ் நமக்கு கட்டளை பிறப்பித்தானா? அல்லது நமது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு இந்த போதனை யைத்தான் போதித்தார்களா? .

அப்படிப் பார்த்தால்! அல்லாஹ் தான் இது போன்ற பள்ளிகளில் தொழக் கூடாது கட்டளை பிறப்பித்துள்ளான். அப்படி தொழுதால்! நமக்குத் தான் குற்றம். நாங்கள் தான் இதை புறக்கணிக்க வேண்டும். மாறாக அவர்கள் புறக்கணிக்கிறார்கள்! வேடிக்கையாக இருக்கிறது.

உங்களின் இருண்ட போதனையை வெளிச்சத்திற்கு கொண்டு வராதீர்கள். அது உங்களுக்கு நல்லதல்ல.

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்!

"தீங்கிழைப் பதர்க்காகவும், (ஏக இறைவனை) மறுப்பதர்க்காகவும், நம்பிக்கை கொண்டோரிடையே பிரிவை ஏற்படுத்திடவும், இதற்க்கு முன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிட்டோருக்குப் புகலிட மாகவும் ஒரு பள்ளிவாசலை ஏற்ப்படுத்திக் கொண்டோர் "நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனையும் நாடவில்லை" என்று சத்தியம் செய்கின்றனர். "அவர்கள் பொய்யர்களே" என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான்". மறுப்பதர்க் காகவும், நம்பிக்கை கொண்டோரிடையே பிரிவை ஏற்படுத்திடவும், இதற்க்கு முன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிட்டோருக்குப் புகலிட மாகவும் ஒரு பள்ளிவாசலை ஏற்ப்படுத்திக் கொண்டோர் "நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனையும் நாடவில்லை" என்று சத்தியம் செய்கின்றனர். "அவர்கள் பொய்யர்களே" என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான்". அல் குரான் 9:107

மேலும் அல்லாஹ் கூறுகிறான் :

(முஹம்மதே!) அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்! ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்கு தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான். அல் குரான் 9:108

இது அல்லாஹ்வின் வசனம் என்பதை மறுப்பீர்களா? மறுக்கவில்லை, அந்த வசனம் உண்மை தான் என்றால்! நீங்களும் அதில் தொழக் கூடாது.


S.L.நசீருதீன்

No comments:

Post a Comment