Saturday, January 2, 2010




அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பொய்யன் டி.ஜே. (INTJ) வினர் செய்ததது என்ன?

மதுரை ஆதீனத்திற்கு வாழ் பிடித்து என்ன பயன்?

"சமுதாய மக்கள் ரிப்போர்ட்" வார பத்திரிக்கையின் தலையங்கம்.

"நான் அப்படிப் பேசவில்லை" "மறுக்கும் மதுரை ஆதீனம்".

மதுரை ஆதீனத்தை ஏகத்துவ வாதியாக காட்டிய
"சமுதாய மக்கள் ரிப்போர்ட்" சென்டர் பாக்ஸ் மெசேஜில் (CENTRE BOX MESSAGE) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இணையா? யாரையாவது கூற முடியுமா? என்று மதுரை ஆதீனம் உளறிய வார்த்தைகளை இந்த பொய்யன் டி.ஜே.வை துதிபாடும் “சமுதாய மக்கள் ரிபோர்ட் பத்திரிக்கை” இபொழுது ஆதீனத்திற்கு துதிபாடி இருக்கிறது. அதை இங்கே நாம் கொஞ்சம் காண்போம்.

மதுரை ஆதீனத்தை ஏகத்துவ சிந்தனை வாதியாக காட்டி பத்திரிக்கை நடத்தும், மற்றும் அதன் ஆசிரியருக்கு ஏகத்துவம் என்றால் என்னவென்று தெரியாதா? அல்லது தெரிந்தும் மறைக்கிறார்களா?

"இந்திய தவ்கீத் ஜமாஅத்" தலைவர், மற்றும் நிர்வாகிகள் மதுரை ஆதீனத்தை விமான நிலைய வாசலிலேயே வைத்து பேட்டி கண்டதாம். பேட்டி கண்ட லட்ச்சனத்தை பார்ப்போம்.

அவர்கள் பத்திரிக்கையின் செய்தி சுருக்கம் கீழே:

“விமான நிலைய வாயிலில் காத்திருந்த மதுரை ஆதீனத்தை தலைவர் எஸ்.எம்.பாக்கரும், நிர்வாகிகளும் சந்தித்து நக்கீரன் வெளியிட்ட செய்தி சமுதாயத்தில் ஏற்ப்படுத்திய கொந்தளிப்பை பற்றி எடுத்துக் கூறினார். உடனடியாக அதை மறுத்த (?) ஆதீனம், "நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இணையா? யாரையாவது கூற முடியுமா? என்று கூறியதோடு மட்டும் மல்லாமல், கலிமா ஷஹாதத்தில் (அஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரசூலுல்லாஹ்) முஹம்மது நபி அல்லாஹ்வின் அடியாராகவும், தூதராகவும் இருக்கிறார்கள், என்று கூறப் பட்டதை எடுத்துக் கூறி, நான் எப்படி அப்படி சொல்லி இருப்பேன்" என திருப்பிக்கேட்டார்(!).

மேலும் ஒரு இயேசு நாதர், ஒரு நபிகள் நாயகம் (ஸல்), ஒரு திருநாவுக்கரசர் தான் இருக்க முடியுமே (?) தவிர, வேறு நபர்களை அவர்களுக்கு இணையாக சொல்ல முடியாது என்று தெரிவித்தவர்,

அந்த விழாவில் வி.எச்.பி யைச் சார்ந்த வேதாந்தம் பேசியதை மேற்கோல் காட்டி பேசினேன். பத்திரிகை யாளர்கள் அதனைத் தவறாக போட்டு விட்டார்கள். பிளீஸ் லீவ் இட் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும் தொடர்ந்த அவர், தான் ரஷ்யா நாட்டிற்குச் சென்ற பொது நபித்தோழர் அபி வக்காஸ் அவர்களால் கட்டப்பட்ட பள்ளிவாசலில் தன்னை பேசும்மாறு அழைத்ததையும், தான் ஏகத்துவம் (!) பற்றிப் பேசியதையும் நினைவு கூர்ந்தார்.

இப்படி எழுதிவிட்டு அடுத்த பாராவில் இயேசுநாதர் பற்றி பேசியதோடு" தன்னுடைய ஏகத்துவ சிந்தனைகளை பகிர்ந்து கொண்டார்(?). என்று இவர்கள் பேட்டியில் எழுதி இருக்கிறார்கள்.

இதை ஆதீனம் கூறினாரோ! இல்லையோ! இது ஏகத்துவ வார்த்தை என்று இவர்கள் கூறியது தான் வேடிக்கையாக இருக்கிறது. இது தான் ஏகத்துவ சிந்தனை! இதுதான் இவர்களின் தவ்கீத்!.

தவ்கீத் என்ற பெயரில் ஜமாஅத் நடத்தும் லட்சணம் தெரிகிறதா? இதற்க்கு ஒரு தலைவர், அதற்குப் பின்னால் சில தொண்டர்கள் வேடிக்கையாக இருக்கிறது இவர்களின் நடத்தை. இவர்கள் நடத்தும் இந்த பத்திரிக்கை மக்கள் படிப்பதற்கா? அல்லது தொண்டர்கள் படிப்பதற்கா?,

மேலும், நீங்களே பத்திரிக்கை கருத்து சுதந்திரம் என்ற பெயரில் ஏகத்துவத்தை தவறாக புரிந்து வைத்து, அதை விளம்பரமும் படுத்துகிறீர்கள். முதலில் எழுது வதற்க்கு முன் சிந்திக்கப் பாருங்கள். பின்பு சித்தரிக்கப் பாருங்கள். சிந்தனைக்கு வந்த தெல்லாம் சிறந்த மார்க்கமாக நீங்களாகவே எடுத்துக் கொள்ளக் கூடாது. மார்க்க்கத்தை, மார்க்கமாக புரிந்து கொள்ளுங்கள்.

சரி, இதில் விஷயம் என்ன வென்றால்! இவர்கள் ஆதீனம் எதோ! நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி தவறாக பேசவில்லை என்பது போலும், ஆதீனம் பெரிய இஸ்லாமிய பக்தர் போலும் சித்தரித்து எழுதி வைத்து இருக்கிறார்கள். இதுவே உங்களின் விளம்பர விமர்சனத்துக் குண்டான செயலாக தெரிய வில்லையா? அல்லது அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விருப்பமா? அல்லது செய்திகள் இல்லை என்பதற்காக ஆதீனத்தை பின் தொடர்ந்தது விரட்டிச் சென்றீர்களா? இப்படி ஒரு கேடுகெட்ட விளம்பரம் தேவையா?.

மேலும் இந்த வாரம் JAN 2010 நக்கீரன் பத்திரிகையில் மதுரை ஆதீனத்தின் அண்டப் புளுகளைப் பற்றி செய்தியாக வந்திருப்பதோடு! அந்த ஆதீனம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எப்படி கிண்டலடித்தார் என்ற ஆதாரமான குருந்தகட்டையும் தமிழ் நாடு தவ்கீத் ஜமாத்திற்கு மிகப் பெரிய ஆதாரமாக கொடுத்து இருக்கிறார்கள். அல்ஹம்து லில்லாஹ், அல்லாஹ் மிகப் பெரியவன்.

தமிழ் நாடு தவ்கீத் ஜமாஅத் எப்பொழுதும் ஆதாரம் இல்லாமல் களம் இறங்காது என்பதை மக்கள் புரிந்தது கொள்ளவேண்டும். அதைவிட இந்த நவீனமாக விலகி சுய விளம்பரம் தேடும் புதிய ஜமாத்தும் (INTJ) தெரிந்து கொள்ள வேண்டும்.

மேலும், பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் இன்ஷா அல்லாஹ் தமிழ் நாடு தவ்கீத் ஜமாத்தின் அடுத்த நடவடிக்கை ஆதீனம் இல்ல முற்றுகை என்று அறிவித்ததும்! அதோடு இந்த மட ஆதீனம் தன் தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கடிதம் கொடுத்து விட்டார்.

இனி எவனும் நமது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கேலி பேசுவதோ, விமர்சனம் செய்வதாகவோ இருந்தால்! சட்டப் படி நடவடிக்கை எடுப்போம். அது ஆதீனமாக இருந்தாலும் சரி, அல்லது கொலை குற்றம் சுமத்தப் பட்ட சங்கராச் சாரியாராக இருந்தாலும் சரி! இறையாண்மையை பேண, அரசாங்க உதவியுடன் சட்டத்தை முன் நிறுத்தி தண்டிக்கப்பட வைப்போம்.


S.L.நசீருதீன்

No comments:

Post a Comment