Saturday, January 9, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மதுரை ஆதீனம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இகழ்ந்து பேசியதை கண்டித்து! நமது தமிழ் நாடு தவ்கீத் ஜமாஅத் மன்னிப்பு கேட்க வைத்தது பொய்யன் டி.ஜே வினருக்கு போறாமை:

பொய்யன் டி.ஜே. விற்கு மதுரை ஆதினத்தின் மீது என்ன அவ்வளவு அக்கறை?


விமான நிலைய சந்திப்பு ஆதீனத்தை வழியனுப்ப சென்ற பேட்டியா?

"தான் அப்படிப் பேசவில்லை, ஒரு நபிகள் நாயகம் தான் இருக்க முடியும் அவருக்கு இணையாக எவரையும் சொல்ல முடியாது'' என மதுரை ஆதீனம் பேசியதை விண் தொலைக்காட்சி ஒளிபரப்பியதுமே கொந்தளித்துப் போயிருந்த முஸ்லிம் சமுதாயமும், சகோதர இயக்கங்களும்(?) அமைதியாகி விட்டன.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்திடம் மதுரை ஆதீனம் விஷுவலாக எதைச் சொன்னாரோ அதைத்தான் கடிதமாக இவர்களுக்கு கொடுத்திருக்கிறார். அதைப் பெற்றுக் கொண்டு "சரிதானுங்க' என்கிற ரீதியில் வாபஸ் ஆகி "புஸ்' ஆகி விட்டார்கள்.

இது இந்த தனியார் விளம்பர ஜமாத்தின் அதிகார பூர்வமான பேட்டிகள் தான் மேலே உள்ளது.

இதில் ஆதீனம்! தான் அப்படி சொல்லவில்லை என்றதும் சகோதர இயக்கங்கள்(?) அமைதியாகி விட்டன. இது இவர்களின் வேடிக்கையான விளக்கம், விந்தையான சொற்கள், வெளிக்காட்டக் கூடிய வெட்கக்கேடு. விவேக மற்ற விசாரணை, விளையாட்டுத் தனமான குறும்பு, விபரமற்ற விளக்கம், வீணான நேரப் போக்கு.

தமிழ்நாடு தவ்கீத் ஜமாத்தின் நேரடி வீடியோ ஆதாரத்தை கண்டதும் கொதித்து பொறாமைப் பட்ட பொய்யன் டி.ஜே. ஆதீனம் விஷுவலாக சொன்னதை தமிழ் நாடு தவ்கீத் ஜமாத் அப்படியே போட்டு விட்டார்கள் என்று சொல்கிறார்கள். சுருக்கமாக சொன்னால் "நாங்கள் (INTJ) கொடுத்த எதிர்ப்பு பேட்டியை இவர்கள் பதிவு செய்து விட்டார்கள்” என்பது போல் சித்தரித்து இருக்கிறார்கள்.

அல்லாஹ் முதல் மனிதனை மண்ணால் தான் படைத்தான். அதற்காக அந்த மனிதனுக்கு மண்டையில் களிமண்ணை வைத்து படைக்கவில்லை. இவர்களுக்கு அல்லாஹ் களிமண்ணைத்தான் வைத்து இருப்பான் போல் தெரிகிறது. ஏனென்றால்! சிந்திக்கும் திறனை இவர்கள் அதிகமாக இழந்து கொண்டு வருகிறார்கள் என்பதற்கு இந்த மதுரை ஆதீனைத்தின் பேட்டி நாடகமே! ஒரு உதாரணம்.

மேலும், தமிழ் நாடு தவ்கீத் ஜமாஅத் தக்க ஆதாரத்தோடு ஆதீனத்தின் வீட்டை முற்றுகை என்று அறிவித்ததும்! பிரச்சனை பெரிதாகி விடும் என்ற காரணத்தினால் தான்! ஆதீனம் அவர்கள் தான் பேசியதை வாபஸ் வாங்கிக் கொண்டு, எழுத்து மூலமாகவும் கொடுத்து, பின்பு அதை அவர் படித்தும் காட்டியதை வீடியோவாக பதிவும் செய்து இருக்கிறார்கள்.

இதில் என்ன இவர்களுடைய விமர்சனத்திற்கு ஒப்பிட்டதாக இருக்கிறது? என்று தெரியவில்லை. மேலும், அந்த பொறாமையான விமர்சனத்திற்கு பதிலாக! சந்தோசப் பட்டாலே போதும். ஆனால் அவர்கள் சந்தோசப் படவில்லை. மக்கள் தெரிந்து கொண்டார்களே! அதுவே போதும்.

தமிழ் நாடு தவ்கீத் ஜமாஅத்தைப் பொறுத்த வரையில் கொள்கையிலும் சரி, சமுதாய பிரச்சனை என்றாலும் சரி, தனி நபர் பாதிப்பு என்றாலும் சரி! அதை ஆராய்ந்து, தவறு யார் மீது இருக்கிறதோ அவர்களை முச்சந்தியில் வைத்து முற்றுகை இடவும் தயங்காது. என்பதை இந்த பிற்பிறவி எடுத்த பொய்யன் டி.ஜே தெரியவேண்டும். உங்களைப்போல் வெறும் வெற்று வார்த்தைக்கும், கொள்கையில்லாத பேச்சுக்கும் ஒருபோதும் இந்த தமிழ் நாடு தவ்கீத் ஜமாஅத் இடம் கொடுக்காது. ,

மேலும், யாருவேண்டு மானாலும் நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கேலியாகவோ, அவதூறாகவோ பேசிவிட்டு! "தான் அப்படி பேசவில்லை" என்றால்! அமைதி காத்து, சரி தானே! அவர்தான் அவதூறு பேசவில்லை என்று சொல்லிவிட்டாரே! என்று சமாதானமாக போய்விடுவது அறிவார்ந்த செயலா? அல்லது அவர் சொன்ன வார்த்தை எந்த அளவுக்கு உண்மையாக இருக்க முடியும் என்பதை ஆராய்வது சிறந்ததா? என்பதை இந்த பொய்யன் டி.ஜே.அறிந்து கொள்ளவேண்டும்.

அதன் அடிப்படையில் உண்மையை விளங்கி, பிறகுதான் தமிழ்நாடு தவ்கீத் ஜமாஅத் முற்றுகை அறிவித்ததே! தவிர, பாக்கர் அன் கோ அபு என்பவர் எழுதியது போல் முற்றுகை என்பது ஒன்றும் சட்ட மீறல் அல்ல! இது சமுதாய உணர்வு. இது கூட தெரியாமல் ஒரு ஜமாஅத் இருக்கிறதென்றால் அது இந்த பொய்யன் டி.ஜே வாகத்தான் இருக்க முடியும்.

திருச்சியில் ஆதீனம் பேசியதை மையமாக வைத்து தான் நக்கீரன் வெளியிட்டது. அந்த அடிப்படையில் தான் ஆதாரம் தேடியது, அல்லாஹ்வின் கிருபையால் அந்த ஆதாரமும் கிடைத்தது. தமிழ் நாடு தவ்கீத் ஜாமாத்தா? சங்கராச்சாரியாரின் பிறந்த நாளைக்கு திருச்சி மேடையில் இருந்தார்கள்? என்ன பேசியிருப்பார் இந்த ஆதீனம் என்பதற்கு?. பத்திரிகையில் வந்த செய்தி பதற்றத்தை உண்டு பண்ணியது. அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்தது. அது வெற்றியிலும் முடிந்தது. அல்ஹம்து லில்லாஹ்! எங்களுக்கு அல்லா போது மானவன்.

வீணாக உங்களுக்கு செய்தி கிடைக்க வில்லை, வெப் சைட் காலியாக இருக்கிறது! என்பதற்காக! பூச்செண்டு வைத்து செய்திகளை திரட்ட வேண்டாம். உங்கள் வெப் சைடில் போட செய்திகள் இல்லை என்றால் சொல்லுங்கள் நான் தருகிறேன். அல்லது நல்ல திறமையான நிருபர்களை பணியில் அமர்த்துங்கள். அவர்கள் ஒருவேளை செய்திகள் கொண்டு வந்து தரலாம்.


S.L.நசீருதீன்

No comments:

Post a Comment