Monday, January 18, 2010



அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

தமிழ் மாநில முஸ்லிம் லீக்கை சாக்கடையில் தள்ளிக் கொண்டிருக்கும் முஸ்லிம் லீக் மாநில தலைவர் ஷேக் தாவூத்.

இஸ்லாத்தின் அடிப்படைத் தத்துவம் "லாயிலாஹா இல்லல்லாஹ்" (வணக்கத்திர்க் குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை). இந்த இறைநம்பிக்கை வசனத்தை ஒருவன் நிராகரித்தால் முஸ்லிமாக இருக்க முடியுமா? முடிகிறதே! இந்த மானங்கெட்ட முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் இருக்கிறாரே! முஸ்லிம்களில் அரசியல் என்றால்! காலைக் கழுவிக் குடிக்கும் கழுதைகளும் இருக்கிறார்கள் என்பதற்கு இந்த முஸ்லிம் லீக் தலைவர் ஒரு சாட்சி.

பாருங்கள் தினத் தந்தி 18.01.2010 சென்னை மாநகரம் புறநகர் செய்திகள் பக்கம் : 16 வந்த செய்தியில் இந்த கேவலம் பதிப்பாகி இருக்கிறது.

இந்த புகைப்படம் . மானங்கெட்ட அதுவும் "தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத்" சென்னை தியாகராய நகர் எம்.ஜி. ஆர். நினைவு இடத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் உருவ சிலைக்கு சாஷ்டங்கமாக கையை எடுத்து கும்பிட்டு வணக்கம் செய்கிறாரே! இது அவருக்கு மட்டும் அல்ல ஒட்டு மொத்த இஸ்லாமியருக்கே ஒரு அவமான சின்னமாக தெரிகிறார்

இப்படி ஒரு சிலைக்கு வணக்கம் செய்து தான்! தன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் பதவியை தக்கவைத்து நிலை நாட்டுவதா?இந்த மாதிரி கேடுகெட்ட செயலை எந்த மதஹபு வாதிகளும் கண்டிப்பதில்லையே ஏன்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழியிலும், அவர்கள் செயலிலும் தவ்ஹீது பேசினால் தான் இவர்களுக்கு ரோஷம் வரும் போல் தெரிகிறது. தரம் கேட்ட செயல் செய்தால் ரோஷம் வராது. தாங்கள் தான் சுன்னத்து ஜமாஅத் மதஹபு வாதிகள் என்று பறை சாற்றும் போலி சுன்னத்து ஜமாஅத் வாதிகளே! எங்கே பார்ப்போம்! இவரைக் கண்டித்து ஒரு அறிக்கை விடுங்கள்!


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழியில் செல்லும் தவ்ஹீது வாதிகளையும், அந்த தவ்ஹீது கொள்கைகளையும் ஏற்று நடப்பவர்களையும், குழப்பவாதி என்று சொல்லு கிறீர்களே! ஊர் நீக்கம் செய்வதோடு தவ்ஹீதி ஜமாஅத் பள்ளிவாசலுக்கு வந்து தவ்ஹீது வாதிகளை அடிக்க வருகீறீர்களே! இவரை என்ன சொல்லப் போகிறீர்கள்?.

ஒரு வேலை இதைக் கூட நீங்கள் நியாயப் படுத்துவீர்கள். அந்த அடிப்படையில் தானே உங்கள் உங்கள் ஜமாத்துக்கள் போய்க்கொண்டு இருக்கிறது. நான்கு மதஹபுகளை பின் பற்றாதவர்கள் தொழ வரக்கூடாது, விரல் அசைப்பவர்கள் தொழ வரக் கூடாது, தலையில் தொப்பி அணியாதவர்கள் தொழ வரக்கூடாது, கூட்டு துவாவை புறக்கணிப்பவர்கள் தொழ வரக்கூடாது என்று போர்டு எழுதி போட்டு விமர்சிப்பவர்கள்! இப்படி கண்டவரின் சிலைகளை கையெடுத்து கும்பிட்டு விட்டு ஒரு மாநில லீக் தலைவர் வந்தால்! தொழ அனுமதிப்பீர்களா? அல்லது தொழக்கூடாது என்று வெளியே விரட்டு வீர்களா? உங்களின் வீர, தீர செயலை இப்படிப் பட்டவர்களிடம் காட்ட முடியுமா?


S.L.நசீருதீன்

No comments:

Post a Comment