Sunday, January 10, 2010





அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மார்க்கத்தை எடுத்து சொல்லுவதில் தமிழ் நாடு தவ்ஹீது ஜமாஅத் தின் மற்றும் ஓர் புரட்சி அல்லாஹு அக்பர்.

தமிழ் நாடு தவ்ஹீது ஜமாஅத் “தாவா எனும் மார்க்க அழைப்புப்பணி” திரை உலகினரையும் இனி சென்றடையும் இன்ஷா அல்லாஹ் :

திரைப்பட இயக்குனரும், நடிகருமான K.பாக்கியராஜ் அவர்களின் சொந்தப் பத்திரிக்கையான "பாக்கியா" என்ற ஒரு பத்திரிகை. இதில் பல சினிமா சம்மந்தப் பட்ட செய்திகளும், மறைந்த நடிக, நடிகைகளின் வாழ்க்கை வரலாறு களும் மற்றும் சில அறிவியல் செய்திகளும், சமுதாய செய்திகளும் இந்த பத்திரிகையில் இடம் பெறும். பெரும்பாளான அருவருக் கத்தக்க ஆபாசமான பத்திரிக்கையில் இருந்து இது கொஞ்சம் வித்தியாசப்படும் பத்திரிக்கை. அந்த செய்திகளோடு இந்த மாத முதல் வார பத்திரிக்கையில் வந்த ஒரு செய்தி.

"பாகிஸ்தானில் ஒரு இஸ்லாமியர் தனது உடல் ஆரோக்கிய மின்மை காரணமாக அவருக்கு தாடி வளரவில்லை. இஸ்லாத்தில் தாடி இருந்தால் தான் ஆண்மைக்கு அடையாளம், மற்றும் ஆன்மீகத்தின் சின்னம் என நினைத்துக் கொண்டு! அது வளர்வதுக்காக அவர் மருத்துவம் செய்தும் பலன் இன்றி போனது. அதனால்! அவர் அல்லாஹ் விடம் பிரார்த்தனை செய்து, தனக்கு தாடி வளர்ந்தால்! தனது குழந்தையை யாருக்காவது வேண்டுதலின் பேரில் கொடுத்து விடுவது என்றும் நேர்ச்சை செய்து இருக்கிறார். நேர்ச்சைக்கு பின்பு அந்த தாடி வளர்ந்ததாம்! அப்பொழுது அவர் வேண்டியதின் விளைவாக ஒரு பெண் குழந்தையை தனது உறவினருக்கு தானம் கொடுத்து விட்டாராம்”. இது அந்த பத்திரிக்கையின் சுறுக்கமான செய்தி.

இப்படி இந்த "பாக்கியா" என்ற பத்திரிக்கையில் செய்தி வந்தது. இதைப் படித்ததும், பத்திரிகை அலுவலகத்தின் தொலைபேசிக்கு நமது அலை பேசி மூலமாக தொடர்பு கொண்டு இந்த செய்தி தவறு, இஸ்லாத்தில் அப்படி ஒன்றும் தாடி இருந்தால் தான் ஆண்மை என்று கிடையாது. முஸ்லிம்கள் கட்டாயமாக தாடி வளர்க்க வேண்டும். அதே சமயம் தாடி தான் ஆன்மீகத் தின் அளவுகோல் என்று கிடையாது. அதனால், உங்களுக்கு எப்படியோ இந்த செய்தி தவறாக வந்திருக்கிறது, அதனால் நீங்கள் மறுப்பு போடவேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் பேரில், நீங்களும் எங்கள் இஸ்லாம் மார்க்கத்தை தெரிந்து கொள்ள! நாங்கள் உங்களுக்கு திருக் குரான் அன்பளிப்பு தருகிறோம், பெற்றுக் கொள்ளுங்கள் ! என்று சொன்னதின் அடிப்படையில்! அதை தயவு செய்து அலுவலகத் திற்கு நேரில் வந்து எங்கள் இயக்குனரை (DIRECTOR) சந்தித்து அவரிடமே கொடுங்கள் என்று எங்களுக்கு நேரம் குறித்து தந்தார்கள் அந்த அலுவலர்கள்.

நாங்களும் K.பாக்கியராஜின் “பாக்கியா” அலுவலகம் சென்று! நாங்கள் தமிழ் நாடு தவ்ஹீது ஜாமாத் சார்பாக வந்திருக்கிறோம் என்ற செய்தியை அலுவலர்களுக்கு சொன்னவுடன், அவர்கள் K.பாக்கியராஜ் அவர்களை தொடர்பு கொண்டு நாங்கள் வந்த விஷயத்தை தெரிவு படுத்தி சிறுது நேரம் காத்திருக்கச் சொன்னார்கள்.

நாங்கள் எதிர்பார்த்த சமயம் K.பாக்கியராஜ் வந்ததும், நாங்கள் “தமிழ் நாடு தவ்ஹீது ஜமாத்தில்” இருந்து வந்திருக்கிறோம் என்பதை முதலில் அறிமுகப் படுத்தி, பின்பு தங்களின் "பாக்கியா" என்ற பத்திரிக்கையில் வந்த தவறான செய்தியை குறுப்பிட்டு சொன்னதின் அடிபடையில், உடனே தனது தவறை உணர்ந்து, இதை "விஜி" என்பவர் தான் எழுதி தந்தார். இதை கவனத்தில் கொண்டு நான் சரி செய்து அடுத்த இதழில் மறுப்பு விடுகிறேன் என்றார்.

இன்றைய சமுதாயத்தை அதிகமாக சீரழித்துக் கொண்டிருக்கும் திரை உலகமும், ஊடகத்தின் மூலம் குடும்பத்தை நிலை குலைய வைக்கும் சின்னத் திரையும், அதில் வரும் ஆபாசமான நடிப்புகளும், பேச்சுக்களும், செய்கைகளும், நமது அறிவை இழக்க ஒரு காரணியாக இருக்கின்றது. இதை எல்லாம் தமிழ் நாடு தவ்ஹீது ஜமாஅத் கவனத்தில் கொண்டு, நமது இஸ்லாமியருக்கு எடுத்துச் சொல்லி மாற்றி வருகின்றது என்பது அனைவருக்கும் தெரியும்.

இனி இந்த சீரழிவிற்கு வித்திடும் இந்த திரை உலகினரையும் நமது தாவா எனும் மார்க்க அழைப்புப் பணியை தொடரும். நமது இனிய மார்க்கத்தை எடுத்துச் சொல்லி, எவ்வளவுக் கெவ்வளவு அவர்களை நல் வழிக்கு வர இந்த மார்க்கப் பிரச்சாரம் பயன் படுமோ! அதன் எல்லையை இந்த தமிழ் நாடு தவ்ஹீது ஜமாஅத் தொட தயங்காது.

அதற்கு, முதற்க்கட்டப் படியாக திரைப்பட இயக்குனரும், நடிகருமான K.பாக்கியராஜ் அவர்களை தமிழ் நாடு தவ்ஹீது ஜமாஅத் சார்பைக் கொண்டு ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை கிளை தமிழ் நாடு தவ்ஹீது ஜமாஅத் தலைவர் சகோதரர் ஹாஜா மொய்தீன் அவர்களின் ஒப்புதலோடு கீழக்கரை சகோதரர் S.L.நசீருதீனும், மற்றும் சகோதரர் முஸ்தகீம் அவர்களும், மாநில தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் தலைவர் சகோதரர் செய்யத் இப்ராகிம் மற்றும் மாநில பொதுச் செயலாளர் சகோதரர் அப்துல் ஹமீது அவர்களின் ஒப்புதலின் பேரில் வந்த வட சென்னை செயலாளர் சகோதரர் பத்ருல் ஆலம் அவர்களும் K.பாக்கியராஜ் அவர்களை, நேரில் சந்தித்து "தமிழ் நாடு தவ்ஹீது ஜமாஅத்" சார்பாக பி.ஜே அவர்கள் தமிழில் மொழி பெயர்த்த திருக் குரானும், சகோதரர் பி.ஜைனுல் ஆபீதீன் அவர்கள் எழுதிய "அர்த்தமுள்ள இஸ்லாம், மனிதனுக் கேற்ற மார்க்கம், அர்த்த முள்ள கேள்விகள் அறிவுப் பூர்வமான பதில்கள், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், இஸ்லாம் பெண்களின் உரிமையை பறிக்கிறதா?, குற்றச் சாட்டுகளும் பதில்களும் மற்றும் வரும் முன் காத்த இஸ்லாம் என்ற புத்தகங்களும் மற்றும் "உணர்வு" பத்திரிக்கையும் அன்பளிப்பாக கொடுக்கப் பட்டது.

அதோடு "விடுதலைப் போரில் முஸ்லிம்களின் பங்கு, இந்திய சுதந்திரம் யாரால்? மற்றும் திருக் குரான் வாழும் அற்புதம் என்ற குறுந்தகடும் (DVD யும்) அன்பளிப்பாக கொடுக்கப் பட்டது அல்ஹம்து லில்லாஹ், அல்லாஹு அக்பர்.

இப்படி திரை உலகினரை அணுகி இஸ்லாம் மார்க்கத்தை எடுத்துச் சொல்லுவது ஒவ்வொருவரின் தலையாயகடமை. அவர்களிடமும் ஆன்மிகம் இருந்தாலும் அறிவான ஆன்மிகம் இல்லை. அல்லா நமக்கு தந்த இஸ்லாம் என்ற அறிவு போகிஷத்தை அவர்களும் தெரிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டுமல்லவா? அந்த அடிப்படையில் நம் தமிழ் நாடு தவ்ஹீது ஜமாஅத் எடுத்து வைத்து இருக்கும் திரையுலக தாவா என்னும் மார்க்க அழைப்புப் பணி வீரியமாக தொடர அந்த அல்லாஹ் நமக்கு துணை நிர்ப்பானாக.

திரைவுலகினர் என்றாலே! அசிங்கத்திலும், ஆடம்பரத்திலும், ஆடல், பாடலிலும் ஆடை அலங்காரத்திலும், அவர்களை யாரும் மிஞ்ச முடியாது. அந்த சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருப் பவர்களிடம் நமது தூய இஸ்லாத்தை எடுத்துச் சொன்னோமே யானால்! அவர்கள் திருந்த ஒரு வாய்ப்பை அல்லாஹ் அவர்களுக்கு கொடுக்கிறான் என்று நினைக்க வேண்டும்.

அந்த எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுக்கும் இந்த நல் உபதேசமான திருக் குரான் மற்றும் நபி (ஸல்) அவர்களின் பொன் மொழிகளும் சென்றடைந்து, அதை செவிமடுத் தார்களே யானால்! அந்த வல்ல அல்லாஹ்வின் அருளும், கிருபையும் அவர்களுக்கும் கிடைக்கக் கூடும். அதன் அடிப்படையில் தமிழ் நாடு தவ்ஹீது ஜமாத்தின் இந்த அழைப்புப் பணி சிறக்க அந்த எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் அனைவரும் துவா செய்வோமாக!.


S.L.நசீருதீன்

No comments:

Post a Comment