Tuesday, February 9, 2010



அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

இவருக்கு என்ன நேர்ந்தது?

பயத்தின் பிடியில் பொய்யன் டி.ஜே

பள்ளிவாசல்கள் எல்லாம் பள்ளிக் கூடங்களாக மாற்றப்பட வேண்டும். தொழுகைக்கென்று ஒரு ஹால் இருந்தால் போதும் என்று இணையதளத்தில் போட்ட வார்த்தை எங்கே?

இது அச்சுப்பிழை இல்லையே! எழுத்து மாறுவதற்கு. சொல்லிலும், பொருளிலும் அல்லவா தவறு நடந்தது இருக்கின்றது.

மேடை ஏறிப் பேசிய வார்த்தையை காணவில்லையே! இணையதளம் விழுங்கி விட்டதா?

மக்கள்கள் எல்லாம் மடையர்களா? நீங்கள் மறைப் பதற்கு? இன்னுமா இந்த மறைத்தல். மறையை (திருக் குரானை) மறைக்க முடியுமா?

சிந்திக்க தெரிந்து, விபரம் அறிந்து மேடையேறி பேசுங்கள். "சமுதாய மக்கள் ரிப்போர்ட்டை" (வாரப் பத்திரிக்கையை) மக்களிடம் இருந்து பிடுங்க முடியுமா?.

இரண்டுவரி வார்த்தைக்கே உளறிக் கொட்டிய மேதையே! உங்கள் பின்னால் சமுதாயம் வருமா?

பள்ளிவாசல்கள் எல்லாம் பள்ளிக் கூடங்களாக மாற்றப்பட வேண்டும். தொழுகைக்கென்று ஒரு ஹால் இருந்தால் போதும்.

கொந்தளிப்பை ஏற்ப்படுத்தும் ஒருவார்த்தை, கொதிப்பை விதைக்கும் ஒரு வார்த்தை, கொள்கையை புதைக்கும் ஒரு வார்த்தை, தவ்ஹீதை சிதைக்கும் ஒரு வார்த்தை,

இந்த வாசகங்களால் என்ன சொல்லவருகிறீர்கள்? பள்ளிவாசல்களை பள்ளிக் கூடங்களாக மாற்றிவிட்டு, பள்ளிக் கூடங்கள் வேண்டும் அதே சமயம் ஒரு ஹால் இருந்தால் போதும் என்று சொல்லுகிறீர்கள். அப்படி என்றால்! தொழுகைக்கு கூட்டம் கூடுவது உங்களுக்குத் தேவை இல்லை? பள்ளிக் கூடத்திற்கு கூட்டம் தேவை! அப்படித்தானே! ஒரு வேலை மீடியா வேல்டிலும், வின் டிவியிலும் வரும் பணம் பத்தாமல் பள்ளிக் கூடம் நடத்தப் போகிறாரோ! அதனால் தான் இந்த முஸ்தீபான வார்த்தை. இப்பொழுதே அடித்தளம் போடுகிறார்.

இத்தனை காலம் தவ்ஹீது வாதியாகத்தானே இருந்தீர்கள்! இப்பொழுது என்ன நேர்ந்தது? வெண்கலக் கடைக்குள் யானை புகுந்ததுபோல் ஆகி விட்டீர்கள்?

பொதுமறை (திருக் குரான்) அழைக்கிறது என்று ஒருபுறம் சொல்லுகிறீர்கள், மறுபுறம் உலகக் கல்வி தான் பெரிது! என்பது போலும் மார்க்க கல்வி கொஞ்சம் தெரிந்தால் போதும் என்பது போலும் பேசுகிறீர்கள். இது தானே நீங்கள் உளறிய வார்த்தையின் அர்த்தம்? காசு அதிகம் இருந்தால்! தலைக்கனம் தாண்டவமாடும்.

உங்களுக்கெல்லாம் தவ்ஹீது என்பது வீண் விளையாட்டாகவும், பொருளாதார ஈட்டாகவும் ஆகிவிட்டது. நபிகள் பெருமானார் கட்டிக்காத்த தவ்ஹீதை கேவலப் படுத்தாதீர்கள். இத்துடன் இந்த கூறு கேட்ட வார்த்தையை நிறுத்திக் கொள்ளவும்.

பணம் சம்பாதிப்பதற்கும், பதவி கேட்பதற்கும் பல வழிகள் இருக்கின்றது. அதற்க்கு மார்க்கத்தை தேர்ந்து எடுக்காதீர்கள்.


S.L.நசீருதீன்



No comments:

Post a Comment