Saturday, February 6, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பேரழிவை நோக்கி பயணம்

மாற்றுமத சகோதரர்களுக்கு திருக் குரான் அன்பளிப்பு வழங்கும் நிகழ்ச்சி பொய்யன் டி.ஜே வினரால் கொடுக்கப்படுகிறது. இது சந்தோசப் படவேண்டிய விஷயம் தான், பாராட்டப் படவேண்டிய விசயம்தான்.

அதே சமயம் அன்பளிப்பு கொடுக்கும் முன் தங்களை சுய பரிசோதனை செய்து, மற்றவருக்கு (மாற்றுமத சகோதரர்களுக்கு) குரான் அடிப்படையில் வாழ கற்றுக் கொள்ளச் சொல்வது சாலச் சிறந்தது. முதலில் தன்னை சரியான நபராக தயார் படுத்திக் கொண்டு, பிறருக்கு நல் உபதேசம் செய்யவேண்டும். தலைவர் எவ்வழியோ! அவ்வழியே தொண்டர்களும் சென்று கொண்டிருக்கிறார்கள். மிக்க நன்றி.

சரி வசயத்திக்கு வருவோம்.

பொய்யன் டி.ஜேயின் வாக்கு மூலங்கள் :


ஒற்றுமை என்னும் கைற்றைப் பற்றிப் பிடிக்க! உளறிக்கொட்டிய வார்த்தைகள் ஒத்துவருமா?


தமிழ்நாடு
தவ்ஹீது
ஜமாத்தை விட்டு யார் யாரெல்லாம் போகிறாரோ அவேரெல்லாம் தர்க்குரியாகிப் போவோம் என்று சொன்னவர்! இன்றைய பொய்யன் டி.ஜே யின் மாநில பொதுச் செயலாளர். அல்லாஹ் சொன்ன வழியில் நியாயம் பேசத் தெரியாதவரும், சூது விளையாடு பவரும் பொய்யேன் டி.ஜே யின் இன்றைய மாவட்ட பொருளாரர் (இந்த இடத்தில் தானே பணம் புரளும். அதனால் அவருக்கு தோதான பதவிதான் கொடுக்கப்பட்டு இருக்கிறது), இதற்க்குமுன் அன்றைய தமிழ் நாடு தவ்ஹீது ஜமாத்தில் இருக்கும் போது பொருளாளராக இருந்ததே! ஞாபகம் இல்லை என்று "கஜினி" என்ற சினிமா கதா பாத்திரத்தின் சஞ்சய் ராமசாமி என்ற பெயரில் வந்த கதாநாயகன் போல் உலா வந்தவர், மற்றும் மக்கள் தரும் நன்கொடைக்கு இவர் வாயாலேயே ரசீது கொடுக்க மாட்டேன் என்று பகிரங்க வாக்கு மூலம் கொடுத்தவர், அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்ய மாட்டோம், முபாஹலா என்ற சத்தியத்தின் மீது உடன்பாடில்லை என்று நபிகள் பெருமானார் (ஸல்) சொன்ன சொல்லை துச்சமாக தூக்கி வீசியவர் இந்த பொய்யேன் டி.ஜே வின் இன்றைய மாநில பொருளாரார் (நன்கொடை கொடுத்தால் என்னவாகும் என்று மக்கள் யோசிக்கட்டும்). வாயில் வந்ததெல்லாம் வாழ்த்துக்கள் போல் அருவருக்கத் தக்க வார்த்தைகளை வாயில் சுமந்து கொண்டிருப்பவர், பொய்யேன் டி.ஜே யின் செயல்பாடே தெரியாத இன்றைய மாவட்ட செயலாளர்.

இந்த பொய்யேன் டி.ஜேயின் ஆணிவேர்(!)புகழை எதிர் பார்க்கும் வான் குருவி, சொந்த மண்ணில் தன்னை தூய்மைப் படுத்த தெரியாத துர்பாக்கியசாலி, இந்த மாநில தலைவர். இந்த தலைவர்! இவர்களையெல்லாம் தலையில் தூக்கி வைத்து தலைக்கு ஒரு பதவி கொடுத்து தனி ராஜ்ஜியம் செய்ய துடிக்கிறார். சரி துடித்துக் கொண்டு போகட்டும். ஆனால் மார்க்கத்தில் தன் துடிப்பைக் காட்டக் கூடாது.

பிப்ரவரி 05-11,2010 சமுதாய மக்கள் ரிப்போர்ட் பக்கம் 9 இல் "திருக்குரான் மக்கள் மயமானால் தீனை நிலை நாட்ட முடியும்" என்ற தலைப்பில்! முன்பு ஒரு காலத்தில் இந்த தலைவரால் வெறுக்கப்பட்ட சகாக்களுடன் மேடை ஏறி உளறிக்கொட்டி இருக்கிறார்.

அதன் விபரம் கீழே!

ஜமாஅத்தே இஸ்லாமி (ஹிந்த்) நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் எஸ்.எம். பாக்கர், ""சமூகம் ஒன்று சேராமைக்கும், பாதிப்புக்கு உள்ளாவதற்கும் காரணம் இல்லாமை, கல்லாமை, அறியாமை, பொறாமை இவைகள்தான். இந்த முஸ்லிம் சமுதாயம் கல்வியில் பின்தங்கி இருப்பதை சச்சார் கமிட்டி அறிக்கையின் மூலம் உலகம் அறிந்து வைத்துள்ளது. நாம் அதற்கு முன்பே அறிந்திருந்தாலும், ஜமாஅத்தே இஸ்லாமி போன்றமுன்னோடி அமைப்புகள் கூட சென்னையில் தற்போது தான் கல்வி நிலையம் துவங்க முனைந்துள்ளன. இஸ்லாமிய அடிப்படையில் கல்வி நிலையங்கள் ஏற்படுத்த வேண்டும். பசுமரத்தாணி போல குழந்தைப் பருவத்திலேயே அதாவது ப்ரீ கேஜியில் இருந்தே இந்தக் கல்வி முறையைத் துவங்க வேண்டும்.
பள்ளிவாசல்கள் எல்லாம் பள்ளிக் கூடங்களாக மாற்றப்பட வேண்டும். தொழுகைக்கென்று ஒரு ஹால் இருந்தால் போதும். பாடத் திட்டங்களில் அரபு மொழியைக் கட்டாயம் சேர்க்க வேண்டும். ஆங்கிலத்திற்கு இணையாக முஸ்லிம் நாடுகளிலும் மேற்கத்திய நாடுகளிலும் அரபு வெப் சைடுகள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. அரபியில் கம்ப்யூட்டர் தகவல்கள் நிரம்பி வழிகின்றன. அதனால் அரபிப் பேச்சாற்றலை வளர்க்க வேண்டும்.
ஜக்காத் (என்னும் ஏழை வரி)தைப் பொறுத்தவரை நபிவழியில் வசூல் முறையையும், விநியோக முறையையும் முறைப்படுத்த வேண்டும். இல்லாமை என்பதைப் போக்க தேவை உடையவரைக் கண்டறிந்து அவர்களுக்கு ஜக்காத்தை வழங்க வேண்டும். அறியாமை, பொறாமை நீங்கி - சத்திய மார்க்கத்தை நாம் வாழும் பகுதியில் உள்ள பிறமத சகோதரர்களிடத்தில் கொண்டு போய்ச் சேர்க்கும் மகத்தான பணியை மேற்கொள்வதில் வேகம் காட்ட வேண்டும். திருமறைக் குர்ஆனை மக்கள் மயமாக்க வேண்டும். இந்தப் பணி தொடர்ந்தால், இன்ஷா அல்லாஹ் தீனை நிலை நாட்டலாம்'' என்றார்.
தனது அறிமுக உரையின்போது, ""நான் என் தாய் வீட்டில் பேசுவதைப் போன்று உணருகிறேன்'' என்றார் பாக்கர்.

அதாவது "பள்ளிவாசல்கள் எல்லாம் பள்ளிக் கூடங்களாக வேண்டும்" என்று ஒரு அழகான தத்துவத்தை(?) தன் குறுகிய அறிவாற்றளினால் வெளிப் படுத்தி இருக்கிறார். அதுமட்டும் அல்ல, அதே பக்கத்தில் "முஸ்லிம் அமைப்புகள் ஒன்று பட வேண்டும்" என்ற தலைப்பில் ஜமாத்தே இஸ்லாமி மாநாட்டில் ஒரு தீர்மானம்(!) நிறை வேற்றி இருக்கிறார்கள். அது என்ன தீர்மானமோ நமக்குத் தேவை இல்லை. ஆனால் இந்த மாநாட்டு அமர்வில் ஆசி வாங்கியவர்களும் இருக்கிறார்கள், என்பது தான் இந்த மேடை அமர்வின் ஹய்லைட்.

அல்லாஹு ரப்புல் ஆலமீன் நமது முன்னாள் சகோதரர் சித்திக்கின் துவாவை இவ்வளவு சீக்கிரம் கபுலாக்கி விட்டான், அல்லாஹு அக்பர்.

இங்கே நாமெல்லாம் (தவ்ஹீது சிந்தனையாளர்கள்) ஒன்றாய் சேர்ந்து அற்ப துனியாவில் இருக்கும் உலகக் கல்வியை விட மார்க்கக் கல்விதான் சிறந்தது என்று போதித்துக் கொண்டிருக்கிறோம்! இந்த பொய்யன் டி.ஜே தலைவர் என்னவென்றால்! பள்ளிவாசல்களை எல்லாம் பள்ளிக் கூடமாக்கப் போகிறாராம்! விந்தையாக இல்லையா? இவர் பேசுவது. இந்தக் கூறுகெட்ட பேச்சிலும், மாறு பட்ட கருத்திலும் மயங்கி, நான்கைந்து பேர் இவர் பின்னால் செல்கிறார்களே! வெட்கமாக இல்லையா?. மது அருந்துபவன் கூட தன் மார்க்கத்தை விட்டுக் கொடுக்க மாட்டான். ஆனால் இந்த தரங்கெட்ட தலைவர்களால் இவர்களின் போலி தவ்ஹீது விட்டுக் கொடுக்கப்படுகின்றது.

மேலும், கீழக்கரையில் நடக்காத மாவட்ட மாநாடு பதினாறு கிலோ மீட்டர் தூரத்தில் நடப்பதென்?

மாவட்ட தலைமையகமே! சொந்த ஊரில் இருக்கும் போது, இந்த ஊரில் நடக்கும் மர்மம் என்ன? பக்கத்து ஊரில் வெட்கம் தெரியாதல்லவா? சொந்த ஊரில் ஆரம்பிக்கத் தைரியம் இல்லா பிரச்சாரம்! மண் விட்டு மண் மாறியதேன்? ஏமாற்றப் பட்டவன் சொந்த ஊரில் இருக்கிறான் என்ற பயமா? ஞாபக மறதி பொருளாளரும், தர்க்குரியாகிப் போன பல ஊர் தலைவர்களும் சங்கமிக்கும் இடம் கீழக்கரையாகத்தானே இருக்கவேண்டும்! ஏன் இல்லை? இராமநாதபுரத்தை தேர்ந்து எடுத்ததன் நோக்கம் என்ன?

மர்மத்தின் பிடியில் பொய்யன் டி.ஜே.


S.L.நசீருதீன்

No comments:

Post a Comment