Friday, November 27, 2009

அஸ்ஸலாமு அழைக்கும்.
அல்லாஹுத்தாலா மனித குலத்திற்கு ஒரு மார்க்கமான ஏகத்துவத்தையும், அதன் கொள்கை கோட்பாடுகளையும் ஆதம் நபி தொட்டு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வரைக்கும் மனிதனுக்கு தெளிவு படுத்திவிட்டான். அதன் அடிப்படையில் நாம் பிறந்தது, வாழ்ந்து இருந்தாலும் பலபேர் அதன் கொள்கை கோட்பாடுகளை மறந்தோ அல்லது தெரியாமலோ கடைப்பிடித்து விட்ட நிலையில்! இன்று நாம் ஏகத்துவமான மார்கத்தை அல்லாவும், நபி அவர்களின் வழியிலும் பின் பற்றி நமது வணக்க வழிபாடுகளை அமைத்து கொண்டு கடைபிடித்து வரும் வேளையில்! பல காலம் ஏகத்துவ தொண்டை செவ்வனே செய்துவந்த நேரத்தில்! செய்த்தானின்தூண்டுதலின் பேரில், இன்று ஒன்றாக இருந்த ஏகத்துவ வாதிகள்! பல தவறுகளுக்கு ஆட்பட்டு பல பிரச்சனை களுக்கு உட்பட்டு அதனால் பல விசாரணைக்கு தள்ளப்பட்டு இன்று தனது முகவரியை தானே தொலைத்துவிட்டு, பிறரை வைத்து தேடவைத்துக் கொண்டிருகிறார்கள். அதுவும் தௌகீது என்ற போர்வையில். இது நியாயமா?

ஏன் இதை சொல்லுகிறோம் என்றால்! TNTJ என்று ஒன்று மற்றொன்று INTJ இவை இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால்! T மேல் இருக்கும் ஒரு கோடு இதை மக்கள் பார்த்தல் ! TNTJ என்றுதான் தெரியும். அதனால் தான் சொல்லுகிறேன் இந்த விலாசத்தில் இவர்கள் குடியேறி இருக்கிறார்கள் என்று. அதோடு மட்டும் அல்ல , அல்லாவை வணங்கும் விதத்திலும் போட்டி . இன்று இவர்கள் திடல் தொழுகை என்றால் அவர்களும் திடல் தொழுகை, இவர்கள் மைக் செட் வைத்து தொழுகைக்கு அழைத்தால், அவர்களும் அதே இடத்தில் மைக் செட் வைத்து அழைப்பு. ஏன் இந்த ஒரு இழிவான செயல்? அல்லாவை வணங்க அனைவரும் ஒன்று பட்டு ஒத்துழைப்பு கொடுப்போமே! நபி வழியில் அனைவரும் போட்டி பொறாமை இன்றி கலப்பில்லாமல் தொழுவோமே ! இன்சா அல்லா இனியும் தொடரும்.
உங்கள்
S.L.நசீருதீன்

No comments:

Post a Comment