Friday, November 27, 2009

இணை கற்ப்பித்தல்

அல்லாஹ்வுக்கு மிகவும் கோபம் உண்டாக்கும் விசயத்தில் முதலிடம் பெறுவது ஷிர்க் என்ற இணை வைத்தல், அவனுக்கு இணையாக யாரிடமும் பிரார்த்திக்க கூடாது, அது நிரந்தர நரகத்தில் கொண்டு சேர்த்து விடும். இணை வைத்துக்கொண்டு எந்த நன்மையையும் சேமிக்க முடியாது. நன்மைகளை சேமிக்க வேண்டும் என்றால் முதலில் இணை வைப்பதை விட்டு அல்லா விடம் பாவமன்னிப்பு கேட்டு திருந்தி அல்லாஹ்வை மட்டுமே வணங்கவேண்டும், அதோடு அவனிடமே பிரார்த்திக்க வேண்டும்.

அப்படி பிரார்த்தித்த நன் மக்களாக வல்ல அல்லா நம் அனைவரையும் அக்கி அருள்பாலிப்பானாக என்று கூறி, இந்த அன்றாட தொடர் செய்திகளை உங்களுக்கு தருவதில் மகிழ்ச்சி அடைவது மட்டுமல்லாது அல்லாஹ் எனக்கு மறுமையில் நல்ல சொர்க்கத்தை தருவான் என்ற நல்ல நோக்குடன் இதை தருகிறேன். அல்லாஹ் அதற்க்கு துணை நிற்க நானும் பிரார்த்தித்து நீங்களும் எனக்காக பிரார்த்திக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

அல்லா கூறுகிறான் " நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்தது விடும்: நீர் நஷ்டம் மடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக! " என்று (முகம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூது செய்தி அறிவிக்கப்பட்டது. அல்குர் ஆன் 39:65

"அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல) வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்" அல்குர் ஆன் 6:88
"நபியே கூறுவிராக" எனது தொழுகை, எனது வணக்கமுறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே வுரியன. அவனுக்கு நிகரானவன் இல்லை. இவ்வாறே கட்டளை இடப் பட்டுள்ளேன். முஸ்லிம்களின் நான் முதலானவன் என்றும் கூறுவீராக". அல்குர் ஆன் 6:162, 163

அதோடு இந்த நல்ல விசயங்களில் பங்கெடுக்க அனைவரும் முயற்சித்து இந்த ஏகத்து வத்தை அனைவருக்கும் பாரபட்ச மின்றி எடுத்து சொல்லுவது நம் அனைவருக்கும் கடமை என்பதை கருத்தில் கொண்டு, இன்று அல்லாஹ் நமக்கு தந்து இருக்கும் இந்த ஹஜ் பெருநாளில்! நாமும் நம் சுற்றுப்புறம் சந்தோசமா கொண்டாடும் தருணத்தில் என்னுடைய இனிய ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்களை உங்களைளோடு சேர்ந்து நானும் பகிர்ந்து கொள்கிறேன்.

No comments:

Post a Comment