நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பாது மக்களுக்கு காட்டு வதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும், தொல்லை தந்தும் பாலாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகின்றது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான். அல்குரான் 3:264
Monday, December 7, 2009
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பாது மக்களுக்கு காட்டு வதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும், தொல்லை தந்தும் பாலாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகின்றது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான். அல்குரான் 3:264
Sunday, December 6, 2009
Saturday, December 5, 2009
அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)
Friday, December 4, 2009
(இந்த லிங்க புராணத்தின் கதையை பின்பு எழுதுகிறேன்)
காஞ்சிபுரம்! இது இந்துக்களின் புனித தலங்களில் இதுவும் ஒன்று. இங்கே அதிகம் பிராமணர்கள் வசிக்கும் இடம். அதில் பிரபலமான கோயில்! காஞ்சிபுரம் மச்சஸ்வரர் கோயில். இந்த கோயில் கருவறைக்குள்! நடந்த கூத்தைக்கண்டு இன்று அக்ரஹாரமே அசிங்கப் பட்டு ஆடிப்போய் இருக்கின்றது, அதிலும் பிராமணவர்கள் அவர்கள் பாஷையால் சொன்னால் அம்பி தேவநாத குருக்களால் கோயிலே தீட்டாகி விட்டதொனா! என்று இப்படி ஒவ்வொரு ஆத்துக்கார மாமி முதல் மாமா வரை! அச்சச்சோ! அபிஸ்டு இப்படி பன்னூட்டானே! என கோப கொந்தளிப்பில் ஒவ்வொரு ஆத்தும், ஆத்துக்காரர்களும் கொதித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆம் இவனது தொழில் அர்ச்சகராக வேலை பார்ப்பதாக இருந்தாலும்! அந்த வேலையுடன் இவனது காம வேலையும் நடந்து கொண்டிருந்தது. தன்னுடைய காம லீலைகளை இவனே செல்போனில் படம் பிடித்து வைப்பது இவன் வழக்கம். அதுவும் கருவறைக்குள்! சிலையின் பின்புறம் கேமரா செட் பண்ணி, அர்ச்சனைக்காக வரும் பெண்களின் கர்ப்பை சமத்தாக பேசி இவன் நடத்தும் பூஜை என்ற பெயரில் பெண்களை மானபங்கம் படுத்துவது இவனது வாடிக்கை லீலைகளை! ஒரு நாள் இவன் செல் பொன் செயல் இழந்து விட்டது. அதை சரி செய்ய செல் பொன் கடையில் சரி செய்ய கொடுக்கும் முன் இவன் எடுத்த அசிங்கமான படங்களை அழித்து விட்டு, கடைக்காரரிடம் சரி செய்ய கொடுத்தான். கடைக்காரரோ இவன் செயல் தெரிந்து பேரன்ட்ஸ் டாக்குமெண்ட்ஸ்சை தேடி அதில் இருக்கும் இவன் படங்களை புளூ டூத் மூலம் தன் நண்பர்களுக்கும் அனுப்பி இருக்கிறார். இதில் தான் இவன் மாட்டிக் கொண்டான்.
“ மனிதர்களே! உங்களையும், உங்களுக்கு முன் சென்றோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள்! இதனால் (தண்டனையில் இருந்து) தப்பித்துக் கொள்வீர்கள். அல் குரான் 2:21
அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாகவும், வானத்தை முகடாகவும் அமைத்தான். வானிலிருந்து தண்ணீரையும் இறக்கினான். அதன் மூலம் கனிகளை உங்களுக்கு உணவாக (பூமியிலிருந்து) வெளிப்படுத்தினான் எனவே அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு நிகராக எவரையும் கற்ப்பனை செய்யாதீர்கள். அல் குரான் 2:22
Thursday, December 3, 2009
அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)
அல்லாஹ்வின் கிருபையால் கடந்த மாதம் துல்ஹஜ் பிறை கண்டதும், நமது இறையச்சத்தின் ஒரு பகுதியான தியாகத் திருநாளை! நபி இபுறாகீம் (அலைஹ்) அவர்களின் வாழ்க்கையில் நடந்தவைகளை! இறைவன் நமக்கு கடமையாக்கிய திருநாள்! அது தான் ஹஜ்ஜிப் பெருநாள். இது அனைவராலும் கொண்டாடப்பட வேண்டிய தினம். இதில் வசதியுள்ளவர்க்கு குர்பானி கொடுப்பதை இறைவன் கட்டாயமாக்கி, அதில் இருந்து கிடைக்கப்படும் இறைச்சியை தானும் உண்டு, யாசிப்பவர்க்கும் மற்றும் யாசிக்காதவர்க்கும் கொடுக்கச் சொல்லிய மார்க்கம் தான்! இஸ்லாம். அதன் அடிப்படையில் இறை அச்சத்தோடு அதை அனைவரும் செய்தோம். அல்ஹம்து லில்லாஹ்.
“உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவரவரின் உரிமையை வழங்குவீராக! ஒரேயடியாக வீண் விரையம் செய்து விடாதீர்! விரையம் செய்வோர் சைத்தான்களின் உடன் பிறப்புகளாக உள்ளனர். சைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.” (திருக் குரான் : 17:26, 27 )
Wednesday, December 2, 2009
விபத்தா? அல்லது அவசர சிகிச்சை தேவையா? அல்லது வேறு எந்த முதலுதவி வேண்டுமா? சுழற்ட்டுங்கள் 108 ஐ தமிழகத்தில் எந்த மூலை முடுக்கில் அல்லது எந்த பெரிய சிறிய சாலையிலும் விபத்து நடந்தால்! உங்கள் கையில் இருக்கும் தொலை பேசியிலோ அல்லது பொது தொலை பேசியிலோ சுழற்டுங்கள் 108 ஐ உடனே! 15 வது நிமிடங்களில் வந்து நிற்கும் முதலுதவி வாகனம் (ஆம்புலன்ஸ்).
அனனைத்து மாவட்டங்களிலும் தமிழக அரசு ஏற்ப்படுத்தி இருக்கும் சாலையோர ஆம்புலன்ஸ் திட்டம். இந்த திட்டம் சாலை விபத்து தடுப்பு வாகனமான அம்புலன்ஸ் வசதி மக்களிடைய பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. மக்கள் இந்த சாலை விபத்தைப்பற்றி விழிப்புணர்வு கொடுக்காப்பட்டு நன்கு தெரிந்து வைத்து இருக்கின்றார்கள் என்பது மகிழ்ச்சியூட்டுகிறது. அதே சமயம், காவல் துறையும், அரசாங்கமும் சில சட்ட விதிகளை கொஞ்சம் மாற்றினால்! இன்னும் சாலைவிபத்திலும், சரி உயிரிலப்பிலும் சரி, மக்கள் அதிகம்பேர் விபத்திலிருந்து தப்பிக்கலாம்.
அது என்னவென்றால்! ஒருவர் சாலையில் அடிபட்டு கிடந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கையில், அந்த வழியில் செல்லுபவர் யாரோதானே என்று அந்த அடிபட்ட நபரை கண்டு கொள்ளாமல்! தான் உண்டு தன் வேலை உண்டு என்று அடிபட்டவரின் உயிரைப் பற்றி கவலைப்படாமல் அவரை கடந்து சென்று விடுகிறார்! இதை நாம் அனைவரும் கண்கூடாக கண்டு கொன்றிருக்கிறோம். இது அனைவருக்கும் அணுபவப்பட்ட விசயம்.
இருப்பினும்! மனிதாபிமான அடிப்படியில் நடந்த சம்பவத்தின் தன்மை எப்படிப்பட்டது? என்பது காவல் துறைக்கு தெரியும். அதை உணர்ந்து உதவி செய்தவரை விட்டு விடலாம். இப்படி செய்தார்களே யானால்! நிச்சயம் பொது மக்களின் உதவி காவல் துறைக்கு மிக உறுதுணையாக இருக்கும் என்பது சாத்தியம். இந்த அடிப்படையை காவல் துறையும் அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்யலாம்.
அதே சமயம் பொது மக்களும் தைரியமாக! விபத்து நடந்த இடத்தில் இருக்கும் போதோ அல்லது விபத்து நடந்த இடத்தை கடந்தது செல்லும் போதோ உடனே முதலுதவி எண்ணிற்கு தொடர்பு கொண்டு, பிறகு பக்கத்தில் இருக்கும் காவல் துறைக்கு தகவல் கொடுக்கவேண்டும். இதற்க்கு ஒரு தனி இயக்கங்களோ அல்லது ஏனைய பிற கட்சிக்காரர்களோ வரவேண்டிய அவசியம் இல்லை.
முதலில்! காண்பவர் தகவல் கொடுத்தால் தான்! ஒரு உயிரோ! அல்லது பல உயிரோ! காப்பாற்றப்படலாம். மனிதாபிமானம் என்பது அனைத்து மனிதனுக்கும் உள்ளதுதான்! அதில் கூடுதலாக சுயநலம் நம்மிடம் கலந்தது இருக்கின்றது. இதே இடத்தில் நாமோ அல்லது நமது குடும்பத்தாரோ இருந்து இப்படி கண்டு கொள்ளாமல் இருந்தால் நமது நிலை எப்படி இருக்கும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். நாம் அனைவரும் மனிதர்கள்! உயிருக்கு விலையில்லை என்பது தெரியும். இனியாவது இப்படிப்பட்ட சம்பவத்தைக் கண்டால் ஏனோ தானோ என்று இருக்காமல்! நம்மால் முடிந்த உதவியை நாம் செய்ய துணியவேண்டும்.
மேலும், பிற மாவட்டங்களை எடுத்துக்கொண்டால்! இராமநாதபுர மாவட்ட சாலை விபத்துக்கள் மிகக் குறைவு என்றே சொல்லலாம். இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பு ஆணையர் அவர்கள் உத்தரவின் பேரில் காவல் துறையினருக்கு நல்ல பயிற்சி கொடுக்கப்பட்டு அவர்களும் செவ்வனே தங்கள் பணிகளை மிக துரிதமாக செயல் படுவதினால்! விபத்துக்கள் தவிர்க்கப்பட்டு கின்றன.
S.L.நசீருதீன்
Tuesday, December 1, 2009


அதே சமயம் வைகையிலிருந்து வந்த தண்ணீர் பார்த்திபனூர் மதகு அணைக்கு வந்த போது அதை (தண்ணீரை) மலர் தூவி! ஒரு I.A.S அதிகாரி வரவேற்றிருக்கிறார் என்றால்! அவரின் மடமை எத்தகையது என்பதை மக்கள் அறியவேண்டும்.
Sunday, November 29, 2009




Saturday, November 28, 2009
அளவில்லா அருளும் நிகரில்லா அன்புடைய எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும். மானிடத்தின் , மகுடம், அகிலத்தின் அருட்கொடை, அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அன்பும் என்றென்றும் உண்டாகட்டும் !
வாய்மையே வெல்லும் என்ற வார்த்தையின் தத்துவத்தை, மற்றும் அதன் அர்த்தத்தை எங்கள் மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துவைத்த என் இந்திய தாய் நாடே! ஜனநாயகத்தை நீ நிலை நாட்டி விட்டாய், பொய்யர்களின் முகத்திரையை கிழித்து விட்டாய்.
ஆம்! இந்திய மண்ணில் ஒரு இருளை ஏற்ப்படுத்திய வருடம். அது தான் 1992 DECEMBER 6 அன்று அஸ்தமனமான இஸ்லாமிய சமுதாயத்தின் வணக்க வழிபாட்டுத்தலமான "பாபர் மசூதி" என்ற சூரியன் மீண்டும் உதிக்க இறைவன் நாடிவிட்டான்! (அல்ஹம்து லில்லாஹ்) எல்லாப்புகழும் இறைவனுக்கே.
ஆம்! "லிபரான்" அறிக்கையின் உண்மையின் நீதி நிலைநாட்டப் பட்டுவிட்டது, நீதியின் எலும்பு நிமிர்ந்து விட்டது, நிம்மதியின் மூச்சு நீண்டு விட்டது. நாட்டை பிளவு படுத்திய " சங் பரிவார்ரின் மதவெறி எனும் சாகச நாடகம் நடத்தி அதில் இஸ்லாமியர்களின் மேல் பூசப்பட்ட "தீவிர வாதி " என்ற போலி போர்வையின் சாயம் வெளுத்து விட்டது, ஆர்.எஸ்.எஸ் என்ற புற்று நோய்க்கு மருந்து கிடைத்து விட்டது.
ஒட்டுமொத்த போலி அரசியல் வாதிகளின் நாடகம் நிறைவடைந்து விட்டன, பொய் வேஷங்கள் களைந்து விட்டன, விஷமான விஷமிகள் நிலைகுலைந்து விட்டார்கள், மாற்று மத எங்கள் தொப்புள் கொடி உறவுகளின் தொடர்ச்சிகள் தொடங்கி விட்டன, மீண்டும் இந்திய ஜன நாயகம் காப்பற்றப்பட்டன, சட்டம் தன் கடமையை செய்ய தொடங்கிவிட்டன, நியாய வாதிகளின் தீர்ப்பு இஸ்லாமியர்களுக்கு நிம்மதியை தந்துவிட்டன, சத்தியத்தின் முன்னாள் அசத்தியம் தோற்றுவிட்டன. இத்தனை காலம் இஸ்லாமிய மக்களை மடையனாக்கிய மாபெரும் துவேச நெருப்பு அனைய தொடங்கி விட்டன. அதிகார கும்பலின் ஆணவம்! அடங்கும் காலம் வந்து விட்டன, ஆதிக்க வர்க்கங்கள் செய்த அராஜகத்தின் அழிவு நெருங்கிவிட்டன.
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! நாம் மட்டும் இன்றி நமது மாற்று மத சகோதர சகோதரிகளும் பாபர் மசூதியை மற்றும் அதன் வரலாறுகளை பற்றி நிச்சயம் தெரிந்து இருக்க வேண்டும். அதன் அடிப்படையில் இன்ஷா அல்லாஹ் இன்னும் சில நாட்களில் பாபரின் வரலாற்றையும், அது ஏன் இடிக்கப்பட்டது என்பதையும் விலாவாரியாக எழுத்து வடிவத்தில் தருகிறேன், பொறுத்து இருங்கள்.
உங்கள்
S.L.நசீருதீன்




கிழக்கரையில் நபிவழித் திடல் தொழுகை கீழக்கரை கிளை மற்றும் தெற்குத்தெரு கிளை தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் நடத்திய ஹஜ்ஜுப் பெருநாள் நபி வழி திடல் தொழுகை, கிஸ்கிந்தா என்ற விளையாட்டு மைதானத்தில் அல்லாஹ்வின் கிருபையால் இன்று மிக சிறப்பாக நடந்தது. அதைத் தொடர்ந்து குர்பானிப் பிராணிகள் ஆடு , மற்றும் மாடுகள் கொடுக்கப்பட்டன. இதில் அதிகமான ஏழைகள் பயன் அடையும் விதத்திலும், அவர்களும் தங்கள் குடும்பசகிதமாக அல்லாஹ்வின் கிருபையால் பெருநாள் கொண்டாடவேண்டும் என்று அல்லாஹ்வும், ரசூலும் வலியுரித்தியத்தின் அடிப்படையில், இது அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கப்பட்டது. நபி வழி திடல் தொழுகையை அல்லா மிக சிறப்பாக ஆக்கித்தான். அல்ஹம்து லில்லாஹ்.
ஹஜ்ஜுப் பெருநாள் நபி வழி திடல் தொழுகை ஏற்பாடு செய்த கிளைத் தலைவர் ஹாஜா முஹைதீன், அஸ்கர், மன்சூர் காக்கா, பசல் காக்கா, ஜகுபர் காக்கா, நசீருதீன், மற்றும் தெற்குத்தெரு கிளை நிர்வாகிகள் அனைவரும் ஒன்று கலந்து மிகச் சிறப்பாக களப்பணி ஆற்றினார்கள். அல்லா அவர்கள் அனைவருக்கும் நற்கிருபை புரிவான்.
இந்த திடல் தொழுகையை பற்றி நபி (ஸல்) அவர்கள் நோன்பு பெருநாள், ஹஜ்ஜி பெருநாட்களிலும் சிறப்புத் தொழுகை இரண்டு ரக் அத்கள் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளை இட்டுள்ளார்கள்.
தொழுகை நேரம் நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும், (பள்ளிக்குச் செல்லாமல்) முசல்லா என்ற திடலுக்குச் செல்பவர்க லாக இருந்தன. அவர்கது காரியங்களில் முதல் காரியமாக தொழுகையைத் துவக்குவார்கள்.
அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி) நூல்கள் ; புகாரீ 956 முஸ்லிம் 1612
'இன்றைய தினத்தில் நாம் முதலில் தொழுகையை ஆரம்பிப்போம். அதன் பின் அறுத்துப் பலியிடுவோம். யார் இவ்வாறு செய்கின்றாரோ அவர் நமது வழிமுறையைப் பேணியவராவார்'. என்று அவர்கள் தமது சொர்ப்போளிவில் குறிப்பிட்டதை நான் செவியுற்றேன்.
அறிவிப்பவர் : பரா (ரலி)
நூல்கள் : புகாரீ 951 முஸ்லிம் 3627
நபி அவர்கள் திடலில் பெருநாள் தொழுகைகளை தொழுதார்கள் என்பது ஆதாரப் பூர்வமான ஹதீஸ் களில் காண்கிறோம். இப்படி இருக்க, கண்ட நேரத்தில் மேலும், இன்று தமிழகத்தில் கூடுதலான பள்ளிகளில் நபி வழி தொழுகை களை புறக்கணித்து, நபி அவர்கள் சொல்லாததையெல்லாம் பள்ளிகளில் வைத்து ஓதிக்கொண்டு, தமது தொழுகைகளையும் வீனடிப்பதொடு மட்டுமல்லாது, மக்களின் தொழுகைகளையும் வீணடித்து இந்த ஆலிம்களும் மற்றும் உலமாக்களும் மக்களுக்கு தவறான போதனைகளை உரைத்து பால் படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களின் இந்த அறிவிளித்தனமான போதனைகள் களையப்படவேண்டும், மக்களுக்கு சரியான குரான், ஹதீஸ் கற்பிக்கப் படவேண்டும், முறையான தௌகீது சிந்தனை அனைவருக்கும் வரவேண்டும். அல்லாஹ் அந்த மக்களையும் நேர்வழி படுத்துவானாக.
Friday, November 27, 2009
மீன் களின் வருகை


ஏன் இதை சொல்லுகிறோம் என்றால்! TNTJ என்று ஒன்று மற்றொன்று INTJ இவை இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால்! T மேல் இருக்கும் ஒரு கோடு இதை மக்கள் பார்த்தல் ! TNTJ என்றுதான் தெரியும். அதனால் தான் சொல்லுகிறேன் இந்த விலாசத்தில் இவர்கள் குடியேறி இருக்கிறார்கள் என்று. அதோடு மட்டும் அல்ல , அல்லாவை வணங்கும் விதத்திலும் போட்டி . இன்று இவர்கள் திடல் தொழுகை என்றால் அவர்களும் திடல் தொழுகை, இவர்கள் மைக் செட் வைத்து தொழுகைக்கு அழைத்தால், அவர்களும் அதே இடத்தில் மைக் செட் வைத்து அழைப்பு. ஏன் இந்த ஒரு இழிவான செயல்? அல்லாவை வணங்க அனைவரும் ஒன்று பட்டு ஒத்துழைப்பு கொடுப்போமே! நபி வழியில் அனைவரும் போட்டி பொறாமை இன்றி கலப்பில்லாமல் தொழுவோமே ! இன்சா அல்லா இனியும் தொடரும்.
இணை கற்ப்பித்தல்
அப்படி பிரார்த்தித்த நன் மக்களாக வல்ல அல்லா நம் அனைவரையும் அக்கி அருள்பாலிப்பானாக என்று கூறி, இந்த அன்றாட தொடர் செய்திகளை உங்களுக்கு தருவதில் மகிழ்ச்சி அடைவது மட்டுமல்லாது அல்லாஹ் எனக்கு மறுமையில் நல்ல சொர்க்கத்தை தருவான் என்ற நல்ல நோக்குடன் இதை தருகிறேன். அல்லாஹ் அதற்க்கு துணை நிற்க நானும் பிரார்த்தித்து நீங்களும் எனக்காக பிரார்த்திக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
அல்லா கூறுகிறான் " நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்தது விடும்: நீர் நஷ்டம் மடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக! " என்று (முகம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூது செய்தி அறிவிக்கப்பட்டது. அல்குர் ஆன் 39:65
"அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல) வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்" அல்குர் ஆன் 6:88"நபியே கூறுவிராக" எனது தொழுகை, எனது வணக்கமுறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே வுரியன. அவனுக்கு நிகரானவன் இல்லை. இவ்வாறே கட்டளை இடப் பட்டுள்ளேன். முஸ்லிம்களின் நான் முதலானவன் என்றும் கூறுவீராக". அல்குர் ஆன் 6:162, 163
அதோடு இந்த நல்ல விசயங்களில் பங்கெடுக்க அனைவரும் முயற்சித்து இந்த ஏகத்து வத்தை அனைவருக்கும் பாரபட்ச மின்றி எடுத்து சொல்லுவது நம் அனைவருக்கும் கடமை என்பதை கருத்தில் கொண்டு, இன்று அல்லாஹ் நமக்கு தந்து இருக்கும் இந்த ஹஜ் பெருநாளில்! நாமும் நம் சுற்றுப்புறம் சந்தோசமா கொண்டாடும் தருணத்தில் என்னுடைய இனிய ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்களை உங்களைளோடு சேர்ந்து நானும் பகிர்ந்து கொள்கிறேன்.
Thursday, November 26, 2009
welcome
அளவில்லா அருளும் நிகரில்லா அன்புடைய எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும். மானிடத்தின் , மகுடம், அகிலத்தின் அருட்கொடை, அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அன்பும் என்றென்றும் உண்டாகட்டும் !
இந்த வெப்சைட்டில் மார்க்க விசயங்கலான குரான், ஹதிஸ் மற்றும் இன்னும் மார்க்க விளக்கங்கள் அனைத்தும் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களின் நூல் களிருந்து எடுத்து எழுதியவைகளே. அதோடு பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பல மேடையில் பேசிய பிரச்சார குறுந் தகடுகளிளிருந்தும் (AUDIO AND VIDIO C.D,) பார்த்து அவர் ஆற்றிய உரைகளை நான் கிரகித்து அந்த வார்த்தையை அடிப்படையாக கொண்டு தொகுத்து எழுதி இருக்கிறேன்.
மேலும் இன்னும் பிற தமிழ் நாடு தவ்கீத் ஜமாத்தில் உள்ளவர்கள் எழுதிய நூல் களையும் தொகுத்து அதில் சிறிய உரை நடை மாற்றங்களோடு மாற்றி எழுதி இருக்கிறேன். அப்படி நான் தொகுத்து எழுதியதிலோ! அல்லது மாற்றிய உரை நடையிலோ! அல்லது வேறு ஏதேனும் தவறுகள் வந்தால் அது என்னிலிருந்து வரப்பட்டவையே.
மேலும் நான் படிக்கும் சில மாற்று மதத்தவரின் நூல்களில் தவறுகள் இருந்தால்! அதற்க்கு தகுந்தார்ப்போல் விளக்கம் கொடுக்க எனக்கு பெரிதும் உதவுவது பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் நிகழ்த்திய உரைகளும், நூல்களும் தான் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. எனது சொந்த முயற்ச்சியில் எழுதி இருப்பது வேண்டுமானால் நான் சந்திக்கும் அன்றாட நிகழ்வுகளாகத்தான் இருக்கும். மற்ற படி மார்க்க விசயங்கள் ஆய்வு செய்யும் அளவிற்கு எனக்கு அறிவுத்திறன் இல்லை. ரப்புல் ஆலமீன் அந்த மார்க்க அறிஞர்களின் கருத்துக்களை தொகுக்கும் அளவிற்கு எனக்கு உதவியதற்கு என்னை படைத்த இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
S.L.நசீருதீன்

