Wednesday, December 23, 2009


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அவனே ஏழு வானங்களை அடுக்கடுக்காக படைத்தான். அளவற்ற அருளாளனின் படைப்பில் எவித ஏற்றக் குறைச்சலை யும் நீர் காண மாட்டீர்! மீண்டும் பார்ப்பீராக! ஏதேனும் பிளவை நீர் காண்கிறீரா? பிறகு இரு முறை பார்வையை செலுத்துவீர்! களைப்புற்று இழிந்ததாக பார்வை உம்மைத் திரும்பி அடையும். அல்குர்ஆன் 67:3-4
"அவர்கள் எதில் இருக்கிறார்களோ, அது அழியக்கூடியது. அவர்கள் செய்து வந்தவையும் வீணானது" அல் குரான் 7: 139

" நியாயம் மின்றி பூமியில் கர்வம் கொண்டிருப் பவர்களை எனது சான்று கலை விட்டும் திருப்புவேன். அவர்கள் எந்த சான்றுகளைக் கண்டாலும் அவற்றை நம்ப மாட்டார்கள். நேரான வழியை அவர்கள் கண்டால் அதை (தங்களது) வழியாக கொள்ள மாட்டார்கள். வலி கேடான பாதையை அவர்கள் கண்டால் அதை (தமது) வழியாக்கிக் கொள்வார்கள். அவர்கள் நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியதும், அவற்றை அலட்சியப் படுத்தியதும் இதற்க்குக் காரணம்”.
அல் குரான் 7:146

"யார் தீமையான காரியங்களைச் செய்து, பின்னர் திருந்தி நம்பிக்கை கொள்கிறார்களோ (அவர்களை) உமது இறைவன் அதன் பிறகு மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்". அல் குரான் 7: 153

"யார் வேதத்தை உறுதியாகப் பிடித்துக் கொண்டு, தொழுகையையும் நிலை நாட்டு கிறார்களோ அத்தகைய சீர்படுத்திக் கொள்வோரின் கூலியை நாம் வீணாக்க மாட்டோம்". அல் குரான் 7:170

No comments:

Post a Comment