Monday, December 28, 2009


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

"அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதை தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்? பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு. அல் குரான் 2:114

எனதருமை இஸ்லாமியர்களே !இந்த வசனத்தின் பொருத்தத்தின் தன்மை யாருக்கு?

கீழக்கரையில் தொழுகை பள்ளியை தாக்க வந்த சுன்னத்து ஜமாத்தார்கள்:

இது அநியாயம் இல்லையா? இவர்களுக்கும், பாபர் மஸ்ஜிதை இடித்தவர் களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

சமீபத்தில் கீழக்கரையில் கிழக்குத்தெருவில் நடந்த சுன்னத்து ஜாமாதிலுல்லவர்கள் அவர்கள் நடத்திய தாக்குதலுக் குண்டான முறைகள் சமுதாய மக்களால் மிகக்கடுமையாக கண்டிக்கப்படவும், சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படவும் வேண்டிய விஷயம்.

சமீபத்தில் ஒரு வாரத்திற்கு முன்னாள்! கீழக்கரையில் நடந்த திருமணங்கள், இஸ்லாமிய பார்வையில் கண்டிக்கக் கூடிய முறையில் நடந்தது. அதை நம்மால் கண்டிக்க முடியவில்லை என்றாலும் குரான் மற்றும் ஹதீஸ்களின் படி ஒவ்வொரு முஸ்லீம் மிற்கும் போதிப்பதில் உரிமையும் உண்டு, கடமையும் உண்டு.

அந்த அடிப்படையில் கீழக்கரை கிளை தமிழ்நாடு தவ்கீத் ஜமாஅத் மூலமாக இதை கண்டித்து பயான்கள் நடந்தது. எப்பொழுதும் இஷா தொழுகைக்குப் பின் சாதாரணமாக பயான் நடைபெறுவது வழக்கம். அதேபோல் அன்றும் நடந்தது இந்த பயான்!

அந்த பயானில் கீழக்கரையில் நடக்கும் அனாச்சாரத்தையும், ஆடம்பரத்தையும் வைத்தே போதிக்கப்பட்டது. அப்படி போதித்துக் கொண்டிருக்கையில், சுன்னத்து ஜமாத்தைச் சார்ந்த ஒரு இருபது நபர்கள் தவ்கீத் ஜமாத் பள்ளிக்குள் புகுந்து, அங்கு இருந்த நான்கு அல்லது ஐந்து பேர்களை மிரட்டி அடித்து விடுவதாகவும், பயான் பண்ணக் கூடாது எனவும், அவர்களது சுன்னத்து ஜமாத் பள்ளி மட்டும் தான் தொழுகை பள்ளி யாகவும், நான்கு பேர் தொழும் பள்ளி எல்லாம் தொழுகை பள்ளி இல்லை என்பது போலவும் மிரட்டல் விட்டு சென்று இருக்கிறார்கள்.

இந்த மிரட்டல்களுக் கெல்லாம் தவ்கீத் ஜமாஅத் பயப்படாது. தவ்கீத் ஜமாத்தைப் பொறுத்த வரையில் குரான், ஹதீஸ் இந்த இரண்டும் தான் மார்க்கம். இதைத்தான் இந்த ஜமாஅத் போதிக்கிறதே தவிர! மார்க்கம் என்ற அடிப்படையில் இவை அல்லாத வேறு எதையும் சொல்லவும், செய்யவும், செய்யாது.

மேலும், இன்ஷா அல்லாஹ் இனிவரும் நாளில் கீழக்கரையில் எங்கெல்லாம் அனாச்சாரம் நடந்தாலும், நடக்க வில்லையானாலும் அல்லாஹ்வுடைய குரானும், ஹதீஸும் பரப்பிக் கொண்டுதான் இருப்போம். எங்களுக்கு அல்லாஹ் துணையிருப்பான்.

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்!

"அவர்களுக்கு கூறப் பட்ட அறிவுரையை அவர்கள் மறந்த பொது, அவர்களுக்கு அனைத்துப் பொருள்களின் வாசல்களையும் திறந்து விட்டோம். அவர்களுக்கு வழங்கப் பட்டதில் மகிழ்ச்சி யடைந்திருந்த போது திடீரென அவர்களைத் தண்டித்தோம் அப்போது அவர்கள் நம்பிக்கை இழந்தனர்". அல் குரான் 6:44

இந்த வசனங்களை மீண்டும், மீண்டும் ஓதி மனனம் செய்யட்டும்.

S.L.நசீருதீன்

No comments:

Post a Comment