Friday, December 25, 2009



அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பார்ப்பன காஞ்சி சங்கராச்சாரியாரின் தீட்டு மனப்போக்கு :

ஜாதிப் பிரிவினைப் பிடியில் திரையுலகமும் மாட்டிக் கொண்டது.

திரையுலகைப் பற்றி நமக்கு தேவை இல்லை என்றாலும், அதில் சில உண்மைகளை தெரிவதில் தவறில்லை:

கொலைக் குற்றம் சுமத்தப் பட்டு சிறையில் இருந்த காஞ்சி ஜெயேந்திரருக்கு தனது 75 பிறந்தநாள் என்று அவரும் அவருடைய சீடர்களும் பக்தர்களுமான மதுரை திருப்பனந்தாள் ஆதினங்களும், விஷ்வ இந்து பரிஷித் வேதாந்தம் மற்றும் பி.ஜே.பி ராஜா ஆகியோர் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில்! மதுரை ஆதீனம் தனது கூறுகெட்ட பேச்சால்! சங்கரராமன் கொலைக் குற்றம் சுமத்தப் பட்ட இந்த காஞ்சி சங்கராச்சாரியாரை! இயேசு வடிவத்தில் பார்கிறேன் ஏனென்றால் இயேசு சிவப்பா இருப்பார், இவ்வாலும் சிவப்பா இருக்கிறார் என்றும் இவரை நபிகள் நாயகத்தின் அவதாரமாக பார்கிறேன் என்றும் மற்ற மதங்களை இழுத்து பேசி இருக்கிறார் இந்த மதுரை ஆதீனம்.

இந்த கூறு கேட்டவர் இயேசு காலத்தில் இருந்தாரா? அல்லது அவரை இவர் நேரில் பார்த்தாரா? இயேசு சிவப்பாக இருந்தார் என்று சொல்லுவதற்கு! இந்த மதுரை ஆதீனத்திற்கு மண்டையில் முடி இல்லை என்றாலும் பேச்சில் இருக்கிறது.

அது மட்டும் மல்லாது திரை உலகை சேர்ந்த பெரிய இசை ஞானி என்று அணைவராலும் பேசப்பட்டவர் இந்த இளையராஜா. இவருக்கும் மற்றும் இவரோடு சேர்ந்து மூவருக்கும் அதாவது விக்ரமன் என்ற எழுத்தாளருக்கும், வேத விற்பன்னர் கிருஷ்ணமூர்திகன பாடிகள், சமூக சேவகர் ராதா கிருஷ்ணன் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது இவருடைய பிறந்த நாளில்.

இதில் என்ன இருக்கிறது? விருது தானே! இது எல்லோருக்கும் வழங்குவதுதானே என்றால்! அது தப்பில்லை, அது பொதுவான விசயம். ஆனால் இதில் பேசப்படவேண்டிய விசயம் என்னவென்றால்! இந்த நால்வரையும் இந்த பார்ப்பன காஞ்சிஜெயேந்திரர்! தான் தொடாமலேயே தனது உதவியாளர் கையால் அந்த விருதை வழங்கி இருக்கிறார் என்பது தான் முக்கியமான விசயம்.

இந்த மானங் கெட்டவர்களும் அதை மகிழ்ச்சியோடு வாங்கி யிருக்கிறார்கள் என்றால்! இது வாங்கியவருக்கு அசிங்கம் இல்லையா? தொட்டால் தீட்டு என்ற ஜாதி அடிப்படையில் பாகு பாடு பார்த்து இந்த விருது வழங்கி இருக்கிறார் இந்த மானங் கெட்ட பார்ப்பணன். இவ்வளவுக்கும் இந்த இளையராஜா என்பவர் தன்னை பெரிய ஆன்மீக வாதியாக காட்டிக் கொண்டு தெரிபவர். வெட்கமில்லையா? அப்படி மானக்கேட்டு இந்த விருதை வாங்க வேண்டுமா?

எவ்வளவு இழிவாக நடத்தினாலும் இவர்களுக்கு இந்த விருது பெரிதாக தெரிகிறது. இவர்களின் தன் மானம் காக்கப் படவேண்டாமா? அல்லது தன் மானமே இல்லையா? இளையராஜாவின் சங்கீதம் ஜாதி பார்ப்பது இல்லையே! ஆனால் இந்த காஞ்சி மடாதிபதி இங்கீதமாக ஜாதி பார்க்கிறாரே!

இவர்கள் எல்லாம் இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டு இருக்கின்ற போது இந்த பார்ப்பன வர்க்கம் இவர்களை பிரித்து, ஜாதி கற்ப்பித்து காட்டுகிறதே? இன்னும் இதற்குள் இருக்க வேண்டுமா? சிந்திக்க மாட்டார்களா? விருது, விழா, பட்டம், பதக்கம் என்றால் பல்லை இளித்து எவன் கொடுத்தாலும் வாங்கி விடுவதா? இந்த பார்ப்பண வர்க்கத்திற்கே உயர்வான சிந்தனை கிடையாது என்பது இளையராஜா போன்ற ஆன்மீக வாதிகளுக்கு தெரியாதா?.


S.L.நசீருதீன்

No comments:

Post a Comment