Saturday, December 12, 2009


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)


மீண்டும் ஒருமுறை கூறிக்கொள்கிறேன் :


இந்த வெப்சைட்டில் மார்க்க விசயங்கலான குரான், ஹதிஸ் மற்றும் இன்னும் மார்க்க விளக்கங்கள் அனைத்தும் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களின் நூல் களிருந்து எடுத்து எழுதியவைகளே. அதோடு பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பல மேடையில் பேசிய பிரச்சார குறுந் தகடுகளிளிருந்தும் (AUDIO AND VIDIO C.D,) பார்த்து அவர் ஆற்றிய உரைகளை நான் கிரகித்து அந்த வார்த்தையை அடிப்படையாக கொண்டு தொகுத்து எழுதி கொண்டு வருகிறேன் .


மேலும் இன்னும் பிற தமிழ் நாடு தவ்கீத் ஜமாத்தில் உள்ளவர்கள் எழுதிய நூல் களையும் தொகுத்து அதில் சிறிய உரை நடை மாற்றங்களோடு மாற்றி எழுதி இருக்கிறேன். அப்படி நான் தொகுத்து எழுதியதிலோ! அல்லது மாற்றிய உரை நடையிலோ! அல்லது வேறு ஏதேனும் தவறுகள் வந்தால் அது என்னிலிருந்து வரப்பட்டவையே.


மேலும் நான் படிக்கும் சில மாற்று மதத்தவரின் நூல்களில் தவறுகள் இருந்தால்! அதற்க்கு தகுந்தார்ப்போல் விளக்கம் கொடுக்க எனக்கு பெரிதும் உதவுவது பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் நிகழ்த்திய உரைகளும், நூல்களும் தான் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. எனது சொந்த முயற்ச்சியில் எழுதி இருப்பது வேண்டுமானால் நான் சந்திக்கும் அன்றாட நிகழ்வுகளாகத்தான் இருக்கும். மற்ற படி மார்க்க விசயங்கள் ஆய்வு செய்யும் அளவிற்கு எனக்கு அறிவுத்திறன் இல்லை.
ரப்புல் ஆலமீன் அந்த மார்க்க அறிஞர்களின் கருத்துக்களை தொகுக்கும் அளவிற்கு எனக்கு உதவியதற்கு என்னை படைத்த இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.


S.L.நசீருதீன்

No comments:

Post a Comment