Wednesday, December 30, 2009



அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அரசியல் என்றால்! மார்க்கம் போய்விடுமோ?

இஸ்லாம் மார்க்கத்தில்! நல்ல நாள், கெட்ட நாள், பிறந்த நாள், இறந்த நாள், புது வருட நாள், திருமண மான நாள், ஏழாம் நாள், நாற்பதாம் நாள், வருட நாள் இப்படி எந்த ஒரு நாளையும் சிறப்பான தாகவோ, சிறந்த தாகவோ அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களோ நமக்கு காட்டித் தராத வேளையில்! மத்திய மந்திரி ஜி.கே.வாசன் பிறந்த நாளைக்கு நமது இராமநாதபுரம் சட்ட மன்ற உறப்பினர் அசன் அலி அவர்கள், இஸ்லாமிய எல்லையைக் கடந்தது முன்னிலை வகித்து இருக்கிறார்கள் என்றால்! வேதனை படவேண்டிய விஷயமாகிறது.

இன்றைக்கு நம் மக்களுக்கு கிடைக்க வேண்டிய இட ஓதிக்கீட்டு பிரச்சனையே பெரும் பிரச்சனையாக இருக்கின்றது. இந்த வேளையில் நமக்கு அதுவும் நமது மாவட்டத்திற்கு ஒரு முஸ்லிம் சட்ட மன்ற உறுப்பினர் கிடைத்ததே பெரிய விஷயம். இந்த பதவியை வைத்து நம் இஸ்லாமிய சமுதாயத்திற்கு எவ்வளவோ தன்னால் முடிந்த அரசாங்க உதவியிலிருந்து, சொந்த உதவி வரை செய்யலாம். அது மட்டும் மல்லாமல் நம் சட்ட மன்ற உருப்பின ரவர்களுக்கு எத்தனையோ பணிகள் காத்துக் கிடக்கின்றன.

அந்த பணிகளை செவ்வனே செய்தாலே போதும். இதற்க்கு மத்தியில்! மத்திய மந்திரிக்கு ஒரு மாற்று மத கலாச்சரத்தின் அடிப்படையில் பிறந்த நாள் கொண்டாடி இருப்பதோ அல்லது அதற்க்கு முன்னிலை வகிப்பதோ நம் மார்க்கத்த்திர்க்கு உகந்தது அல்ல என்பதை நம் சட்ட மன்ற உறுப்பினர் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இன்ஷா அல்லா இனிவரும் காலத்தில் நம் சட்டமன்ற உறுப்பினர் அசன் அலி காக்கா அவர்கள் இதை தவிர்த்து நம் இஸ்லாமிய எல்லைக் குட்பட்டு அதன் அடிப்படையில் தன் பணியை தொடர்வார்கள் என்று நம்புகிறோம்.

S.L.நசீருதீன்

நன்றி புகைப்படம் தினத்தந்தி : 30.12.2009: இராமநாதபுரம் மாவட்ட செய்திகள் பக்கம் 13



No comments:

Post a Comment