Thursday, December 17, 2009



அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).

நம் இஸ்லாமிய சமுதாயம் எவ்வளவு கண்ணிய மிக்க சமுதாய மாக இருக்கின்றது. மற்ற சமுதாயத்தைக் காட்டிலும் நம் சமுதாயத்தை நினைத்து நாம் பெருமைப்படவேண்டும், அதே சமயம் இன்றைய நம் சமுதாயத்தில் பெண்களின் நிலையை எடுத்துக் கொண்டால் கொஞ்சம் வெட்கப்படத் தான் வேண்டும்.


உதாரணத்திற்கு பல பெண்களை எடுத்துக் கொண்டாலும் நம் கண்ணுக்கு தெரிகின்ற சில பெண்களை பார்க்கலாம். உடலை முழுதும் பர்தா அணிந்து முகத்தை மட்டும் காட்டி கொண்டு போகும் போது பெருமைபடத் தோன்றும், அதே சமயம் அவர்களின் ஆடைகள் சில நிமிடங்களில் களில் மாறி விடுவதை அனைவரும் பார்க்கிறோம்.

இன்றைய நவீன உதாரணமான சானியா மிர்சாவை நாம் கண்கூட பார்த்துக் கொண்டு இருக்கிறோம். மேலே நீங்கள் பார்ப்பது அவரும், அவரின் தாயாரும் மிக அழகாக நம் இஸ்லாமிய மார்க்க ஆடைகளோடு இருக்கிறார்கள். மிக்க சந்தோசமாக இருக்கின்றது. இப்படி இருக்கும் சானியா ஒரு டென்னிஸ் வீராங்கனை. அவர் விளையாடும் போது அவரைக் கண்டால் இந்த பெண்ணா? என்று மனம் வேதனைப்படும் படியாக இருக்கும். அவ்வளவு ஆடை குறைவோடு விளையாடுவதும் அதைப் பல ஆண்கள் பார்ப்பதும் நமக்கே வெட்கமாக இருக்கும்.

அப்படி ஒரு குறைவான ஆடையோடு அந்த பெண் விளையாடுவாள். அதை இங்கே பிரசுரித்தால் ஒரு கேவலமான படம் பார்த்தது போல் இருக்கும். அந்த படம் அனைத்து பத்திரிக் கையிலும் வந்தது தான். இருப்பினும் நான் அதை படம் எடுத்து போட மனம் வரவில்லை. அந்த சானியா மிர்ஷா எப்படி குறைவான ஆடைகளோடு இருப்பாள் என்று அனைவருக்கும் தெரியும். இந்த பெண் ஹஜ் கூட செய்தாள் என்பது கூடுதலான செய்தி.

இது இஸ்லாத்தில் பெண்கள் ஆடை விசயத்தில் மிக கண்டிப்போடு எதிர்த்து சொல்கிறது. நிச்சயமாக இஸ்லாம், குடும்பங்கள் வீழ்ந்து, சின்னா பின்னப்பட்டு போகாமல் அதை பாது காப்பதின் மீது அக்கறை கொண்டுள்ளது. ஆண்களும், பெண்களும் சந்திக்கும் சமயம் தங்களின் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளும்படி ஏவியுள்ளது. நிச்சயமாக அல்லாஹ் பெண்களை கண்ணியப் படுத்து வதற்க்ககவும் இழிவிலிருந்து அவளின் தன் மானத்தை தர்க்கத்துக் கொள்ளவும், இன்னும் குழப்ப வாதிகள் தீய எண்ணம் உடையவர்களின் கெடுதியை விட்டும் அவளை தூரப் படுத்துவ தற்காகவும் கண்ணியத் திற்குரிய விலை மதிப்பையும் அளவையும், அறியாத வர்களிடமிருந்து அவளைப் பாது காத்துக் கொள்வதற்காகவும் விஷப் பார்வைகளுக்கு அதை அடைக்க வழியும் சொல்லிக் கொடுக்கின்றது.

அல்லா திருமறையில் கூறுகிறான்:

“நபியே (முஹம்மதே) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளை தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்க முடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லை படுத்தப் படாமல் இருக்கவும் இது ஏற்றது" அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடை யோனாகவும் இருக்கிறான். அல் குரான் 33:59


நபியவர்கள் கூறுகிறார்கள் : ஒரு பெண், கணவனது திருப்தியைப் பெற்ற நிலையில் மரணித்து விட்டால் அவள் சொர்க்கத்தில் நுழைவால் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர் : உம்மு சலமா (ரலி), நூல் : திர்மீதி 1081


அப்படிஎன்றால்! ஓர் கணவன் எப்பொழுது திருப்தி பெறுவான்? தன் மனைவி அடக்க மாகவும், ஒழுக்க மாகவும், நன் நடத்தையோடு இருந்தால் தான் திருப்தி பெறுவான், அதை விட்டு விட்டு அரைகுறை ஆடைகளோடு தான் இருப்பது மட்டுமல்லாமல், பிறருக்கும் அதை காட்டிக் கொண்டு இருப்பதை எந்த கணவன் மார்களும் விரும்ப மாட்டான்.
அல்லாஹ் தான் இந்த மாதிரியான சானிய மிர்சா போன்றவர்களுக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும் என்று துவா செய்வோமாக.


S.L.நசீருதீன்

No comments:

Post a Comment