Monday, December 21, 2009


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)


கீழக்கரையில் ஒரு அனாச்சார சுனாமி

எதிர் வரும் நாளில் இந்த சுனாமி தாக்க வருகின்றது கீழக்கரையில்.

பெரும் தனவந்தர்கள் வாழும் கீழக்கரை எனும் இந்த ஊர். இந்த ஊரை தெரியாத வர்களே இருக்க முடியாது என்ற நிலைமை.


ஆம்! அப்படி செல்வம் மிகைத்த இந்த ஊரில் நடக்கும் ஆடம்பர, அனாச்சார திருமணங்களை காண வேண்டுமா? புறப்பட்டு இந்த அவலங்களை காண வாருங்கள். திருமணங்களில் கலக்க வேண்டும் என்றோ அல்லது அந்த விருந்து உபச்சாரங்களில் உண்ண வேண்டும் என்றோ வரவேண்டாம். இஸ்லாமியர்கள் என்ற பெயரில் செய்யும் அனச்சாரத்தை கண்டு மூக்கில் விரலை வையுங்கள், அதோடு வரும் கண்ணீரையும் துடையுங்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு ஒரு முன் மாதிரி.

அந்த மாமனிதர் சொல்லாததும், செய்யாததும் எப்படி எல்லாம் நடக்கிறது என்று பாருங்கள். இந்த ஊரில் நடக்கும் அனாச்சாரத் தைப்பற்றி இது வரையிலும் நீங்கள் கேள்வி பட்டுத்தான் இருப்பீர்கள்! இப்பொழுது நேரடியாக காணுங்கள்.

இந்த திருமணங்களால் ஒவ்வொரு ஏழைகளும் கொதிக்கும் கொதிப்பை நேரடியாக காணுங்கள். வறுமையில் வாழ்ந்து வாடும் மக்களின் வாய்க்கு இந்த அனாச்சாரத்தின் தீனி எப்படியெல்லாம் அசைபோடுகிறது என்பதை பார்க்க வாருங்கள்.


அடுத்து இந்த அனாச்சாரம் நடந்த புகைப் படத்துடன் உங்களை சந்திக்கின்றேன், இன்ஷா அல்லாஹ்.


யா அல்லாஹ் எனதூர் மக்களுக்கு என்று நீ நல்ல புத்தியை கொடுப்பாயோ?



S.L.நசீருதீன்

No comments:

Post a Comment